search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கறிக்கோழி"

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கறிக்கோழி நுகர்வை பொருத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். இந்த நிலையில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதாலும், சபரிமலை சீசன் காரணமாக கறிக்கோழி நுகர்வு குறைவினாலும் கறிக்கோழி கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன் கறிக்கோழி கொள்முதல் விலை 100 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று 72 ரூபாயாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல், ரூ.90 வரை செலவாகும் நிலையில், இந்த விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை படிப்படியாக சரிந்து கடந்த வாரம் 97 ரூபாய்க்கு விற்பனையானது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்துக்கு உட்பட்ட நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை படிப்படியாக சரிந்து கடந்த வாரம் 97 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விலை மேலும் சரியும் என அசைவ பிரியர்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக கறிக்கோழி விலை உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து நேற்று 106 ரூபாய்க்கு விற்பனையானது.

    இதைத் தொடர்ந்து இன்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி கிலோவுக்கு மேலும் 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் 106 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை மேலும் 2 ரூபாய் அதிகரித்து 108 ரூபாயாக உயர்ந்தது. கறிக்கோழி விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் ஏராளமானோர் விரதம் இருந்து வருகிறார்கள். இதனால் கறிக்கோழி தேவை குறைந்து வருவதால் அதன் விலை படிப்படியாக சரிந்து வருகிறது.

    10 நாட்களுக்கு முன்பு கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 114 ரூபாயாக இருந்த நிலையில் படிப்படியாக சரிந்து 5 நாட்களுக்கு முன்பு 106 ரூபாயாக குறைந்தது.

    இந்த நிலையில் பல்லடத்தில் இன்று நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கறிக்கோழி விலையை மேலும் கிலோவுக்கு 9 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 106 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 97 ரூபாயாக குறைந்தது.

    இனிவரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோழி பண்ணை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்தில் எசுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.
    • கடந்த 7-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.99 (உயிருடன்) ஆக இருந்தது.

     கோவை,

    உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோயம்புத்தூர் பொள்ளாச்சி கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து, கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 2 கிலோ எடை உள்ள 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு(பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.99 (உயிருடன்) ஆக இருந்தது. 8-ந் தேதி ரூ.101, 10-ந் தேதி ரூ105, 11-ந்தேதி ரூ.107, நேற்று முன்தினம் ரூ.112 என கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    ஒரு வாரத்தில் நுகர்வு அதிகரித்து கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ.13 வரை உயர்ந்து உள்ளதால், தற்போது கிலோவிற்கு ரூ.18 வரை கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஆடி மாதம் முடிவடைய உள்ளதால் நுகர்வு இன்னும் அதிகரித்து, விலை மேலும் உயரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • கறி கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 6-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.35 ஆக இருந்த நிலையில் இன்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ.4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் மேலான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி பல்லடத்தில் இன்று நடந்த கூட்டத்தில் கறி கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.103 ஆக இருந்த ஒரு கிலோ ரூ.105 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக உள்ளது.

    • நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சத்துணவு திட்டத்திற்கு தவிர மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த 1-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.10 ஆக இருந்தது. 3-ந் தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ.4.20 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.15 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.105 ஆக இருந்த கறிக்கோழி விலை ரூ.90 ஆக குறைந்தது. முட்டைக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ ரூ.78 ஆக நீடிக்கிறது.

    • நாமக்கல் சேலம் ஈரோடு திருப்பூர் பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • இந்த கறிக்கோழிகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல் சேலம் ஈரோடு திருப்பூர் பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    இந்த கறிக்கோழிகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று கறிக்கோழி உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழி தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு எட்டு ரூபாய் உயர்ந்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 93 ரூபாய் இருந்த கறிக்கோழி விலை 101 ரூபாயாக உயர்ந்தது.

    இதே போல முட்டை கோழி வளர்ப்போர் ஆலோசனை கூட்டம் நாமக்கலில் நடந்தது முட்டை கோழி விலை கிலோவுக்கு 1 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 78 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 77 ரூபாயாக குறைந்தது.

    • முட்டையின் உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
    • ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக முட்டை விலை 515 காசுகளாக நீடித்தது.

    இந்த நிலையில் முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டையின் உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:- சென்னை-580, பர்வாலா-458, பெங்களூர்-570, டெல்லி-472, ஹைதராபாத்-505, மும்பை-565, மைசூர்-575, விஜயவாடா-480, ஹொஸ்பேட்-530, கொல்கத்தா-552.

    நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வழங்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    பல்லடத்தில் நேற்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கறிக்கோழி உயிருடன் ரூ.139 ஆக இருந்த நிலையில் 2 ரூபாய் உயர்த்தி, ஒரு கிலோ ரூ.146 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. இதனால் உரித்தகோழி ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை சேலம், நாமக்கல் மாவட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    கடும் வெயிலால் கோழியின் எடை குறைந்ததால் கறிக்கோழி விலை உயர்ந்ததாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முட்டைக்கோழி நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ ரூ. 95 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    • நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று பல்லடத்தில் நடந்தது. இதில் கறி கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 6 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 129 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை கிலோ 135 ஆக உயர்ந்தது.

    இதேபோல முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் முட்டை கோழி விலை கிலோவுக்கு 3 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 97 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 94 ரூபாயாக சரிந்தது.

    நாமக்கல்லில் நடந்த முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், முட்டை உற்பத்தி மற்றும் முட்டைகளின் தேவை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 515 காசுகளாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    • நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட நாமக்கல், சேலம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • 94 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. முட்டை விலையும் 470 காசுகளாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட நாமக்கல், சேலம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்ப டுகின்றன. இந்த கறிக்கோ ழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கறிக்கோழி உற்பத்தி யாளர்கள் ஆலோ சனை கூட்டம் நேற்று பல்லடத்தில் நடந்தது. கூட்டத்தில் கறிக்கோழி தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    இதனால் ரூ.120 ஆக இருந்த கறிக்கோழி விலை ரூ.122 ஆக உயர்ந்தது. கடந்த 16-ந் தேதி ரூ.116 ஆக இருந்த கறிக்கோழி விலை, 17-ந் தேதி ரூ.120 ஆக உயர்ந்த நிலையில், நேற்று மீண்டும் ரூ.2 உயர்த்தப்பட்ட தால் கறிக்கோழி விலை 3 நாளில் ரூ.6 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடும் வெயிலால் கறிக்கோழியின் எடை குறைந்துள்ளதாலும், தேவை அதிகரித்து உள்ளதா லும் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பண்ணையாளர்கள் தெரி வித்துள்ளனர். இதேபோல முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. முட்டை கோழி விலை எந்த மாற்றமும் செய்யாமல் 94 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. முட்டை விலையும் 470 காசுகளாக நீடிக்கிறது.

    • நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி வளர்ப்போர் கூட்டத்தில் முட்டைகோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 67 ரூபாயாக நீடிக்கும் என அறிவிப்பு.
    • முட்டை விலை 440 காசுகளாக நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர், பல்லடம் ஆகிய பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் 30 லட்சத்திற்கும் மேல் கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்ககப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 7 ரூபாய் உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி 75 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 82 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி வளர்ப்போர் கூட்டத்தில் முட்டைகோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 67 ரூபாயாக நீடிக்கும் என்றும், முட்டை விலை 440 காசுகளாகவும் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    • பி.சி.சி. நிர்ணயம் செய்யும் முறையில் இருந்து கிலோவுக்கு 30 ரூபாய் குறைத்து பண்ணைகளில் கோழிகளை பிடிக்கின்றனர்.
    • கோழி பண்ணை தொழிலை காப்பாற்ற தமிழக அரசு நிர்ணயம் செய்து தர வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்பட பல பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 30 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொள்முதல் விலை என்பது தீபாவளி, கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் அதிகரிப்பதும், புரட்டாசி, கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்பட பண்டிகை காலங்களில் குறைவதும் வாடிக்கையாக உள்ளது.

    அதன்படி கடந்த 1-ந் தேதி கொள்முதல் விலை ஒரு கிலோ 92 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. 5-ந் தேதி 84 ரூபாய், 20-ந் தேதி 89 ரூபாய் என ஏற்றம் இறக்கம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று கறிக்கொழி விலை 12 ரூபாய் சரிந்து 77 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    ஒரே நாளில் 12 ரூபாய் விலை குறைந்தது பண்ணையாளர்கள் மத்தியில் கவலை அடைய செய்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    பி.சி.சி. நிர்ணயம் செய்யும் முறையில் இருந்து கிலோவுக்கு 30 ரூபாய் குறைத்து பண்ணைகளில் கோழிகளை பிடிக்கின்றனர். இதனால் தினமும் ரூ.11 கோடி வீதம் வாரம் ரூ.27 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஒரு கிலோ கோழி உற்பத்தி செய்வதற்கு 90 முதல் 100 ரூபாய் செலவாகிறது.

    உற்பத்தி செலவுடன் குறைத்து விற்பனை செய்வதால் பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. கொள்முதல் விலையில் இருந்து சராசரியாக 10 ரூபாய் குறைத்தே கோழிகளை வாங்குகின்றனர்.

    இந்த மாதம் மட்டும் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கோழி பண்ணை தொழிலை காப்பாற்ற தமிழக அரசு நிர்ணயம் செய்து தர வேண்டும். பண்ணியாளர்களை அழைத்து பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×