search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை ரூ.6 உயர்வு
    X

    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை ரூ.6 உயர்வு

    • நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட நாமக்கல், சேலம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • 94 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. முட்டை விலையும் 470 காசுகளாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட நாமக்கல், சேலம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்ப டுகின்றன. இந்த கறிக்கோ ழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கறிக்கோழி உற்பத்தி யாளர்கள் ஆலோ சனை கூட்டம் நேற்று பல்லடத்தில் நடந்தது. கூட்டத்தில் கறிக்கோழி தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    இதனால் ரூ.120 ஆக இருந்த கறிக்கோழி விலை ரூ.122 ஆக உயர்ந்தது. கடந்த 16-ந் தேதி ரூ.116 ஆக இருந்த கறிக்கோழி விலை, 17-ந் தேதி ரூ.120 ஆக உயர்ந்த நிலையில், நேற்று மீண்டும் ரூ.2 உயர்த்தப்பட்ட தால் கறிக்கோழி விலை 3 நாளில் ரூ.6 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடும் வெயிலால் கறிக்கோழியின் எடை குறைந்துள்ளதாலும், தேவை அதிகரித்து உள்ளதா லும் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பண்ணையாளர்கள் தெரி வித்துள்ளனர். இதேபோல முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. முட்டை கோழி விலை எந்த மாற்றமும் செய்யாமல் 94 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. முட்டை விலையும் 470 காசுகளாக நீடிக்கிறது.

    Next Story
    ×