என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே வாலிபரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
- வெள்ளிச்சந்தையில் ஓட்டல் மற்றும் கறிக்கோழி கடை நடத்தி வருகிறார்
- 2 பேர் முன் விரோதம் காரணமாக அனித்தை வழிமறித்து தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
கன்னியாகுமரி :
வெள்ளிச்சந்தை அருகே சூரப்பள்ளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அனித் (வயது24). இவர் வெள்ளிச்சந்தையில் ஓட்டல் மற்றும் கறிக்கோழி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அனித் உறவினரை பார்ப்பதற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு முட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அம்மாண்டிவிளை தேரி காடு சாலையில் செல்லும்போது அங்கு வந்த கண்டன்விளையை சேர்ந்த சுபின், மணவாளக்குறிச்சி வடக்கன்பாகத்தை சேர்ந்த அய்யப்பன், திருநயினார்குறிச்சியை சேர்ந்த ராஜன் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் முன் விரோதம் காரணமாக அனித்தை வழிமறித்து புல் வெட்டியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
இதில் படுகாயமடைந்த அனித் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்ச ம்பவம் குறித்து மணவா ளக்குறிச்சி போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






