search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரவள்ளி கிழங்கு"

    • மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
    • மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

    கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.800 வரை சரிவடைந்து ரூ.10ஆயிரத்து 200-க்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ.12 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை குறைந்து ரூ.11 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது.

    மரவள்ளி கிழங்கு வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
    • இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    மரவள்ளி கிழங்கு

    இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்பொழுது ரூ.14ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கடந்த வாரம் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    மரவள்ளி கிழங்கு விலை உயந்துள்ளதால் மரவள்ளிகிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மகிழ்ச்சி

    இது குறித்து மரவள்ளி கிழங்கு வியாபாரி கூறு கையில், கடந்த வருடம் மரவள்ளி கிழங்கு பயிர்கள் நோய் தாக்குதலால் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால் நடப்பாண்டு குறைந்த அளவே மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது விளைச்சலில் உள்ள மரவள்ளிக்கிழங்கு அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. மேலும் ஜவ்வரிசி விலை உயர்ந்து கொண்டே வருவதால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும் என கூறினார்.

    • மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
    • தற்போது டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், மாரப்பம்பாளையம், கொத்தமங்கலம், ஜமீன்இளம்பள்ளி, குறும்பல மகாதேவி, சிறுநல்லிக்கோவில், பெரியசோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், பெரியமருதூர், சின்னமருதூர், ஆனங்கூர், சின்ன சோளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியா பாரிகள் அதிக அளவில் மரவள்ளி கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமை யாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

    கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனை யானது. தற்போது ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதே போல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை யானது.

    தற்போது டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது. மரவள்ளி கிழங்கு வரத்து குறைவாலும், ஜவ்வ ரிசி விலை அதிகரிப்பாலும் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
    • ஒரு டன் ரூ.13 ஆயிரம் என்ற விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைக்கு மொத்த மாக மரவள்ளி கிழங்கு வாங்கி சென்று ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு போன்றவை உற்பத்தி செய்கின்றனர்.

    இவை தவிர கேரளா, புதுச்சேரி, தமிழகத்தில் பரவலாகவும் மரவள்ளி கிழங்கை உணவுக்காகவும் பயன்படுத்துகின்றனர். சிப்ஸ் உள்ளிட்ட தின்ப ண்டங்கள் தயாரி ப்புக்கும் பயன்படுத்து கின்றனர்.

    நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சீசன் காலமாக இருந்தாலும் பிற காலங்களிலும் ஓரளவு மரவள்ளி கிழங்கு வரத்தாகும். தற்போது சீசன் முடிந்து பல பகுதிகளிலும் மரவள்ளி கிழங்கு நடவு செய்து வருகின்றனர்.

    இதுபற்றி தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறியதாவது:-

    தற்போது சீசன் நிறை வடைவதால் 10 சதவீத த்துக்கும் குறைவாகவே மரவள்ளி கிழங்கு பயிர்கள் உள்ளன. அவற்றில் இருந்து அறுவடை செய்யப்படும் கிழங்கில் 70 சதவீதம் சேகோ ஆலைகள் ஒரு டன் ரூ.13 ஆயிரம் என்ற விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

    மறுபுறம் கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் உணவு பயன்பாடு, சிப்ஸ் போன்றவை தயாரிப்புக்காக ஒரு டன் ரூ.15 ஆயிரத்துக்கு வாங்கி செல்கின்றனர்.

    வரும் மாதங்களில் இதைவிட அறுவடையும், வரத்தும் குறையும். வரும் நவம்பர் மாதம் மீண்டும் சீசன் தொடங்கும்.

    தற்போது 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை ரூ.5,750-க்கும், 90 கிலோ எடை கொண்ட ஸ்டார்ச் மாவு மூட்டை ரூ.4,800-க்கும் விற்பனையாகிறது.

    சீசன் நேரத்தில் இந்த விலை இருந்திருந்தால் விவசாயிகள் கூடுதல் பயன் பெற்றிருப்பா ர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங் கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர்.
    • ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரச பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிரா மணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு உள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங் கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர்.

    ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அள வில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

    கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று ரூ.13 ஆயிரத்துக்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து, ரூ.14 ஆயிரத்துக்கு விற்கிறது.

    அதே சமயத்தில் சிப்சுக்கு பயன்படுத்தும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு, 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து, ரூ.16ஆயிரத்துக்கு விற்கிறது.

    மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், கடந்த வருடம் மரவள்ளி கிழங்கு பயிர் நோய் தாக்கு தலால் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால் நடப்பாண்டு குறைந்த அளவே மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்துள்ளனர். மேலும் ஜவ்வரிசி விலை உயர்ந்து கொண்டே வருவதால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

    தற்போது பரமத்தி வேலூர் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அறுவடை பெரும்பாலும் முடிந்து விட்டது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் மரவள்ளி கிழங்கு வாங்கி ஜவ்வரிசி ஆலைக்கு சப்ளை செய்கிறோம். நடப்பாண்டு மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு எதிர்பார்க்காத அளவு லாபம் கிடைத்துள்ளது என்றனர். 

    • நல்ல நீர்வளம் உள்ளதால் விவசாயிகள் வாழை நடவை மேலும் அதிகப்படுத்தி வருகின்றனர்.
    • தாய்லாந்து கருப்பு ரோஸ் வகை ஏக்கருக்கு 18 டன் வரை விளைச்சல் தந்துள்ளதாக தோட்ட உரிமையாளர் கூறுகிறார்.

    அவிநாசி : 

    அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட வடுகனூர் பகுதியில் உள்ள மூலத்தோட்டத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் தாய்லாந்து நாட்டின் கருப்பு ரோஸ் வகையை சேர்ந்த மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சாதாரணமாக ஏக்கருக்கு 10 முதல் 11 டன் விளைச்சல் தரும். மற்ற மரவள்ளி வகைகளை விட தாய்லாந்து கருப்பு ரோஸ் வகை ஏக்கருக்கு 18 டன் வரை விளைச்சல் தந்துள்ளதாக தோட்ட உரிமையாளர் கூறுகிறார்.

    மரவள்ளி சிப்ஸ் மற்றும் மாவு அரைக்க பயன்படுத்துவதற்காக கேரளாவிலிருந்து அதிகளவில் வந்து வாங்கி செல்வதாகவும், கோவையில் உள்ள பிரபலமான சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி ஆட்கள் மொத்தமாக டன் கணக்கில் வாங்கி செல்கின்றனர். இம்முறை விளைச்சல் அதிகம் மற்றும் விலையும் கூடுதலாக கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

    தமிழகத்தில் சில ஆண்டுகளாக நல்ல மழை பெய்வதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பல அணைகள் நிரம்பி வழிவதால் கால்வாய் பாசனமும் கை கொடுக்கிறது.இதன் காரணமாக விவசாயிகள் ஒரு ஆண்டு பயிரான வாழை சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக நேந்திரன் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இது சிப்ஸ் தயாரிக்க பெருமளவில் பயன்படுகிறது. சபரிமலை சீசன் காலத்தில் தேவை அதிகரிப்பதால் இதன் விலை அதிகரிப்பது வழக்கம்.

    இதனை எதிர்பார்த்து பலரும் நேந்திரன் வாழை சாகுபடி செய்துள்ளனர். இதுவரை ஒரு கிலோ 37 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்பொழுது நேந்திரன் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்துள்ளதால் இதன் விலை படிப்படியாக குறைந்து 32 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    நல்ல நீர்வளம் உள்ளதால் விவசாயிகள் வாழை நடவை மேலும் அதிகப்படுத்தி வருகின்றனர். இதனால் சந்தைக்கு நேந்திரன் வரத்து அதிகரித்து விலை மேலும் சரிந்து விடுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்

    • மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது
    • உற்பத்தி அதிகரித்துள்ளது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் க.பர மத்தி, நொய்யல், மரவாபா ளையம், வேட்டமங்கலம், குளத் துபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மர வள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று அவற் றிலிருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.

    மேலும், மரவள்ளி கிழங்கு மூலம் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகளை கருவி மூலம் மதிப்பிட்டு, விலை நிர்ணயம் செய்கின்றனர். தற்போது, ஜவ்வரிசி ஆலை உரிமையா ளர்கள், மரவள்ளி கிழங்கு டன் னுக்கு 8 ஆயிரம் ரூபாய்க்கும், சிப்ஸ் தயாரிப்பவர்கள், 9,000 ரூபாய்க்கும் வாங்கி செல்கின்றனர். உற்பத்தி அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    • தற்போது சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. வரத்து சரிவாலும், தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது.
    • இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளி கிழங்கு அதிகமாக சாகுபடியாகிறது. ஓராண்டு பயிரான மரவள்ளி கிழங்கில், கடந்த 2 ஆண்டாக மாவு பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதால் மகசூல் குறைந்து காணப்பட்டது.

    ஆனால் தற்போது மகசூலுடன் வரத்து குறைந்து வருவதாலும், தற்போது அறுவடை சீசன் நிறைவடைந்ததாலும் அரவை மில்களுக்கு ஒரு டன், 12,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர்.

    இது குறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டாக மரவள்ளி கிழங்கில் மாவு பூச்சி தாக்குதல், அறுவடை தொடங்கும் காலத்தில் விலை இல்லாததால் தற்போது சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. வரத்து சரிவாலும், தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது.

    கடந்த ஓராண்டுக்கு முன் ஒரு டன் மரவள்ளி கிழங்கு, 8,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, 12,500 ரூபாய் என்ற விலையில் அரவை மில் உரிமையாளர்கள் கொள்முதல் செய்கின்றனர். சிப்ஸ் தயாரிப்பு, பிற உணவு பயன்பாட்டுக்காக பிற மாநில வியாபாரிகள், ஒரு டன்னை, 25,000 ரூபாய் வரையிலான விலையில் கொள்முதல் செய்கின்றனர்.

    அதற்கேற்ப, ஜவ்வரிசி, 90 கிலோ மூட்டை, 4,500 ரூபாயில் இருந்து, 5,300 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நவம்பர், மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை மரவள்ளி கிழங்கு அறுவடை சீசனாக உள்ளது. தற்போது சாகுபடி பரப்பு குறைந்ததாலும், தேவை அதிகரிப்பாலும் நடப்பு பருவத்தில் மரவள்ளி கிழங்குக்கு இதே விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×