search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "is sold at"

    • ஆந்திர மாநிலத்தின் ராஜ முந்திரி, கடப்பா உள்ளிட்ட வட்டாரங்களில் குண்டு ரக நாவல் அதிக அளவில் பயிரிடப்ப ட்டுள்ளது
    • சென்னிமலை கடை வீதிகளில் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

    சென்னிமலை

    ஆந்திர மாநிலத்தின் ராஜ முந்திரி, கடப்பா உள்ளிட்ட வட்டாரங்களில் குண்டு ரக நாவல் அதிக அளவில் பயிரிடப்ப ட்டுள்ளது.தற்போது ஆந்திர மாநிலத்தில் குண்டு ரக நாவல் பழம் 'சீசன்' தொட ங்கியுள்ளதால் சென்னி மலை கடை வீதிகளில் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பழ வியாபாரி கார்த்தி என்பவர் கூறியதாவது:–-

    குண்டு ரக நாவல் பழம், நாட்டு ரகத்தை விட அள வில் பெரிதாக இருக்கும். இப்பழம் கிலோ 200 ரூபாய்க்கும், நமது தமிழ கத்தில் பல்வேறு மாவட்ட த்தில் விளையும் நாட்டு நாவல் கிலோ 160 ரூபா ய்க்கும் விற்பனையாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
    • ஒரு டன் ரூ.13 ஆயிரம் என்ற விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைக்கு மொத்த மாக மரவள்ளி கிழங்கு வாங்கி சென்று ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு போன்றவை உற்பத்தி செய்கின்றனர்.

    இவை தவிர கேரளா, புதுச்சேரி, தமிழகத்தில் பரவலாகவும் மரவள்ளி கிழங்கை உணவுக்காகவும் பயன்படுத்துகின்றனர். சிப்ஸ் உள்ளிட்ட தின்ப ண்டங்கள் தயாரி ப்புக்கும் பயன்படுத்து கின்றனர்.

    நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சீசன் காலமாக இருந்தாலும் பிற காலங்களிலும் ஓரளவு மரவள்ளி கிழங்கு வரத்தாகும். தற்போது சீசன் முடிந்து பல பகுதிகளிலும் மரவள்ளி கிழங்கு நடவு செய்து வருகின்றனர்.

    இதுபற்றி தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறியதாவது:-

    தற்போது சீசன் நிறை வடைவதால் 10 சதவீத த்துக்கும் குறைவாகவே மரவள்ளி கிழங்கு பயிர்கள் உள்ளன. அவற்றில் இருந்து அறுவடை செய்யப்படும் கிழங்கில் 70 சதவீதம் சேகோ ஆலைகள் ஒரு டன் ரூ.13 ஆயிரம் என்ற விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

    மறுபுறம் கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் உணவு பயன்பாடு, சிப்ஸ் போன்றவை தயாரிப்புக்காக ஒரு டன் ரூ.15 ஆயிரத்துக்கு வாங்கி செல்கின்றனர்.

    வரும் மாதங்களில் இதைவிட அறுவடையும், வரத்தும் குறையும். வரும் நவம்பர் மாதம் மீண்டும் சீசன் தொடங்கும்.

    தற்போது 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை ரூ.5,750-க்கும், 90 கிலோ எடை கொண்ட ஸ்டார்ச் மாவு மூட்டை ரூ.4,800-க்கும் விற்பனையாகிறது.

    சீசன் நேரத்தில் இந்த விலை இருந்திருந்தால் விவசாயிகள் கூடுதல் பயன் பெற்றிருப்பா ர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×