search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CASSAVA TUBER"

    • நல்ல நீர்வளம் உள்ளதால் விவசாயிகள் வாழை நடவை மேலும் அதிகப்படுத்தி வருகின்றனர்.
    • தாய்லாந்து கருப்பு ரோஸ் வகை ஏக்கருக்கு 18 டன் வரை விளைச்சல் தந்துள்ளதாக தோட்ட உரிமையாளர் கூறுகிறார்.

    அவிநாசி : 

    அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட வடுகனூர் பகுதியில் உள்ள மூலத்தோட்டத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் தாய்லாந்து நாட்டின் கருப்பு ரோஸ் வகையை சேர்ந்த மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சாதாரணமாக ஏக்கருக்கு 10 முதல் 11 டன் விளைச்சல் தரும். மற்ற மரவள்ளி வகைகளை விட தாய்லாந்து கருப்பு ரோஸ் வகை ஏக்கருக்கு 18 டன் வரை விளைச்சல் தந்துள்ளதாக தோட்ட உரிமையாளர் கூறுகிறார்.

    மரவள்ளி சிப்ஸ் மற்றும் மாவு அரைக்க பயன்படுத்துவதற்காக கேரளாவிலிருந்து அதிகளவில் வந்து வாங்கி செல்வதாகவும், கோவையில் உள்ள பிரபலமான சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி ஆட்கள் மொத்தமாக டன் கணக்கில் வாங்கி செல்கின்றனர். இம்முறை விளைச்சல் அதிகம் மற்றும் விலையும் கூடுதலாக கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

    தமிழகத்தில் சில ஆண்டுகளாக நல்ல மழை பெய்வதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பல அணைகள் நிரம்பி வழிவதால் கால்வாய் பாசனமும் கை கொடுக்கிறது.இதன் காரணமாக விவசாயிகள் ஒரு ஆண்டு பயிரான வாழை சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக நேந்திரன் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இது சிப்ஸ் தயாரிக்க பெருமளவில் பயன்படுகிறது. சபரிமலை சீசன் காலத்தில் தேவை அதிகரிப்பதால் இதன் விலை அதிகரிப்பது வழக்கம்.

    இதனை எதிர்பார்த்து பலரும் நேந்திரன் வாழை சாகுபடி செய்துள்ளனர். இதுவரை ஒரு கிலோ 37 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்பொழுது நேந்திரன் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்துள்ளதால் இதன் விலை படிப்படியாக குறைந்து 32 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    நல்ல நீர்வளம் உள்ளதால் விவசாயிகள் வாழை நடவை மேலும் அதிகப்படுத்தி வருகின்றனர். இதனால் சந்தைக்கு நேந்திரன் வரத்து அதிகரித்து விலை மேலும் சரிந்து விடுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்

    • மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது
    • உற்பத்தி அதிகரித்துள்ளது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் க.பர மத்தி, நொய்யல், மரவாபா ளையம், வேட்டமங்கலம், குளத் துபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மர வள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று அவற் றிலிருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.

    மேலும், மரவள்ளி கிழங்கு மூலம் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகளை கருவி மூலம் மதிப்பிட்டு, விலை நிர்ணயம் செய்கின்றனர். தற்போது, ஜவ்வரிசி ஆலை உரிமையா ளர்கள், மரவள்ளி கிழங்கு டன் னுக்கு 8 ஆயிரம் ரூபாய்க்கும், சிப்ஸ் தயாரிப்பவர்கள், 9,000 ரூபாய்க்கும் வாங்கி செல்கின்றனர். உற்பத்தி அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    ×