search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்காச்சோளம்"

    • 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிடப்பட்ட மக்காசோளப்பயிர்கள் மான்களால் சேதப்படுத்தி உள்ளது.
    • விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகளும், மருந்துகளும் வழங்க வேண்டும்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள ஆசூர் பஞ்சாயத்தில் தளவாய்புரம் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

    இந்த மக்காச்சோள பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகும் நிலையில் கதிர்கள் விளைந்துள்ளது.

    இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மான்கள் கூட்டம் கூட்டமாக நள்ளிரவில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் தோட்டத்திற்குள் புகுந்து அதனை தின்றும், சேதப்படுத்தியும் செல்கிறது.

    இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் இந்த பகுதியில் நாற்கர சாலை யோரத்தில் தேவராஜன் என்பவர் 5 ஏக்கர் நிலத்தில் மக்காசோளப்பயிர் பயிரிட்டுள்ளார்.

    அதேபோல் கந்தசாமி என்பவருக்கு 5 ஏக்கர், சுப்பு ராஜ் என்பவருக்கு 6 ஏக்கர், கிருஷ்ணசாமி என்பவருக்கு 4 ஏக்கர் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிடப்பட்ட மக்காசோளப்பயிர்கள் மான்களால் சேதப்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, நகைகளை வங்கியில் அடமானம் வைத்து விவசாயம் செய்து வருகிறோம். மான்கள் பயிர்களை சேதப்படுத்திய நிலையில் தற்போது எந்த பலனும் கிடைக்காமல் வங்கியில் வைத்த நகைகளை திருப்ப முடியாமல் நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம்.

    எனவே மாவட்ட நிர்வாகம், விளை நிலங்களை பார்வையிட்டு எங்களுக்கு நிவாரண வழங்க வேண்டும்.

    மேலும் இந்த பகுதியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகளும், மருந்துகளும் வழங்க வேண்டும்.

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாலுகா அலுவலகம் முன்பு நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.

    • இறவை மற்றும் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஒரு குவிண்டால் 2 ஆயிரத்து 400 முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி அதிகளவு நடந்து வருகிறது. ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், இரு பருவங்களிலும் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் படைப்புழு தாக்குதல், வறட்சி, உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களினால் சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.

    அதிலும் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் மக்காச்சோளம் சாகுபடி தாமதமானது.

    தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், இறவை மற்றும் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஏக்கர் வரை மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மக்காச்சோளம் சாகுபடிக்கு வழக்கமாக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி வந்தது. தற்போது படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நான்கு முறை மருந்து தெளிக்க வேண்டியுள்ளதால் விதைப்பு முதல் அறுவடை வரை சாகுபடி செலவினம் 35 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஆனால் மார்க்கெட்டில் விலை குறைந்தே காணப்படுகிறது.

    தற்போது ஒரு குவிண்டால் 2 ஆயிரத்து 400 முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இந்த விலையும் வரத்து அதிகரிக்கும் போது குறைந்து விடும். இதனால் உடுமலை சுற்றுப்பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.

    கால்நடைகளுக்கு தீவனத்திற்காக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆதார விலை நிர்ணயித்தல், அரசு கொள்முதல், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.
    • இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது.

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு பிரதான சாகுபடியாக மக்காச்சோளம் இருந்தது. தீவன உற்பத்திக்கு மக்காச்சோளம் தேவை அதிகமாக இருப்பதால் நல்ல விலையும் கிடைத்து வந்தது. வழக்கமாக ஆகஸ்டு மாதத்தில் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதையொட்டி நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயிரின் வளர்ச்சி தருணத்தில் பருவ மழை பெய்யும். எனவே அந்த சீசனில் 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும். இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது. மழையும் பெய்யவில்லை. இதனால் நான்காம் மண்டல ஆயக்கட்டு பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம் நடவு செய்ய ஆர்வம் காட்டவில்லை. சிலர் மட்டும் உலர் தீவன தேவைக்காக மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.

    இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் மானாவாரியாக மக்காச்சோளம் நடவு செய்ய துவங்கியுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மக்காச்சோளம் 90 - 110 நாட்கள் வயதுடையது. பயிரின் வளர்ச்சித்தருணம் மற்றும் கதிர் பிடிக்கும் போது மழை பெய்தால் இறவை பாசனம் போல மானாவாரியிலும், விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. குறித்த நேரத்தில் மழை பெய்யாவிட்டால் பயிரின் வளர்ச்சி பாதித்து கதிர்கள் சரியாக பிடிக்காது. விளைச்சலும் ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 10 மூட்டையாக குறைந்து விடும்.இருப்பினும் மக்காச்சோள பயிர்களை கால்நடைகளுக்கு உலர் தீவனமாக பயன்படுத்தலாம். வறட்சியால் தீவனத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மானாவாரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகிறோம் என்றனர்.  

    • புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள்.
    • வண்ணக்கோழி ரகங்களை எளிதான முறையில் வீடுகளில் வளர்க்க முடியும்.

    நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக்கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். வண்ணக்கோழி ரகங்களை எளிதான முறையில் வீடுகளில் புறக்கடை முறையில் வளர்க்க முடியும்.

    நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் சமீபகாலங்களில் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வண்ணக் கோழி இனங்கள் உருவ ஒற்றுமையில் நாட்டுக்கோழி போன்றே காணப்பட்டாலும், இவை நாட்டு கோழிகளை விட மேம்பட்டவை. வண்ணக் கோழிகளை வீடுகளில் புறக்கடை முறையில் எளிதாக வளர்த்து பொருளாதாரம் ஈட்டலாம்.

    நாட்டு கோழிகளை வணிகரீதியாக வளர்க்கும் போது சில குறைபாடுகள் உள்ளன. ஆனால், நாட்டு கோழிகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள வண்ணக்கோழிகளில் அந்த குறைபாடுகள் களையப்பட்டுள்ளன. வண்ணக்கோழிகள் நாட்டுக் கோழிகளை விட துரிதமாக எடை கூடும். இவை அனைத்து வகையான தட்பவெப்ப நிலையிலும் வளரக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

    மேலும், நாட்டுக்கோழிகளை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியும், அதிக முட்டைகள் இடும் திறனும் கொண்டது. இதன் முட்டைகள் நாட்டுக் கோழி முட்டைகளை போலவே பழுப்பு நிறம் கொண்டதால் நாட்டுக் கோழி முட்டைகளின் விலைக்கே விற்பனை செய்யலாம்.

    பொதுவாக, கோழிகளுக்கு வழக்கமான தீவனத்துடன் கரையான்களை உணவாக அளிக்கும் போது கோழியின் உடல் வளர்ச்சி வளர்ச்சி விகிதம் 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. கரையான்களில் 36 சதவீதம் புரதம், 44 சதவீதம் கொழுப்பு உள்ளது.

    கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் இதனால் தீவனச்செலவு பெரும்பகுதி குறைந்து விடும். கரையான்களை வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யலாம். கிழிந்த கோணிப்பை, பழைய துணி, காய்ந்த மாட்டு சாணம், உலர்ந்த இலை, கூழான மரக்கட்டைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மண் பானைக்குள் போட்டு அந்த பானையில் அடைத்து, நீர் தெளித்து தரையில் கவிழ்த்து வைக்கவும். 24 மணி நேரத்தில் இதில் கரையான் உற்பத்தி ஆகி இருக்கும்.

    வண்ணக்கோழிகளுக்கு கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு ஆகியவற்றை 30 முதல் 35 பங்கும், கடலைப் புண்ணாக்கு 15 பங்கும், தவிடு வகைகள் 15 பங்கும், சமையலறை கழிவுகள் 5 சதவிகிதமும், கரையான் 10 பங்கும், புளியங்கொட்டை 10 பங்கும், கருவாட்டு தூள் 5 பங்கு, தாது உப்பு 1 பங்கு மற்றும் வைட்டமின் கலவை 1 பங்கும் எடுத்து நன்றாக இவற்றை கலந்து கொண்டு கோழி தீவனம் தயாரிக்கலாம்.

    இவைதவிர வேலி மசால், குதிரை மசால் மற்றும் அசோலா போன்ற நீலப்பச்சை பாசியை 5 முதல் 10 சதவிகிதம் அறுவடை செய்து கொடுக்கலாம். வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களை அளிக்கலாம்.

    வண்ணக்கோழிகளை நோய்களில் இருந்து பாதுகாக்க தகுந்த காலகட்டத்தில் தடுப்பூசிகளை அளிப்பது நல்லது. இந்த வகை கோழிகளின் குஞ்சுகளுக்கு பிறந்த 6-வது நாள் லசோட்டா தடுப்பூசியும், 12-வது நாள் கம்போரா தடுப்பூசியும், 27-ம் நாள் மீண்டும் லசோட்டா தடுப்பூசியும், இரண்டாவது மாதத்தில் ராணிகெட் தடுப்பூசியும், தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை ராணிகெட் தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.

    நாட்டுக் கோழிகளை ஒப்பிடும் போது வண்ணக் கோழிகள் அதிக அளவு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. நாட்டுக் கோழிகள் 8 வார கால அளவில் 600 முதல் 800 கிராம் எடை அளவே எடை கூடுகிறது. ஆனால், வண்ணக் கோழிகள் இதே 8 வாரங்களில் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 கிராம் எடையை அடைகிறது. அதே போல், நாட்டு கோழிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 7௦ முட்டைகள் வரை இடுகிறது.

    ஆனால், வண்ணக் கோழிகள் 100 முதல் 120 முட்டைகளை இடுகிறது.மேலும், நாட்டுக் கோழி முட்டையின் எடை 45 முதல் 50 கிராம் அளவே இருக்கிறது.ஆனால், வண்ணக் கோழிகளின் முட்டை 55 முதல் 65 கிராம் வரை இருக்கிறது. எனவே, தொழில்முனைவோர் வண்ணக் கோழிகளை வளர்த்து லாபம் பெறலாம்.

    • பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோ ளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிரா கவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.
    • மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பாளை யம், சோளசிராமணி, குரும்பலமகாதேவி, கொத்த மங்கலம், சிறுநல்லிக்காவில், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, வடகரை யாத்தூர், பெரிய சோளி பாளையம், இருக்கூர், ஆனங்கூர், அய்யம்பாளை யம், பிலிக்கல்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் தங்க ளது நிலத்தில் மக்காச்சோ ளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிரா கவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மக்காச்சோளத்தை விற்பனை செய்து வருகின்ற னர். சில வியாபாரிகள் மக்காச் சோளக் கதிரை வாங்கி உள்ளூர் பகுதிக ளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    அதை வாங்கிய பொது மக்கள் சோளக்கதிரை உப்பு போட்டு வெகவைத்து சாப்பிடுகின்றனர். பல இடங்களில் மக்காச்சோ ளத்தை வாங்கி பாப்கான் தயாரித்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்ற னர். மக்காச் சோளத்தை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டுவரும் மக்காச்சோள மாவு தயாரிக்கும் அலைகளுக்கும், மாடு, கோழி தீவனம் தயாரிக்கும் மில்களுக்கும், அதேபோல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலை யில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறை வால் ஒரு கிலோ மக்காச்சோ ளம் ரூ.23 வரை விற்பனை யானது. மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் இணை இயக்குனர் ஆலோசனை தெரிவித்துள்ளார்
    • படைபுழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விவசாயிகள், மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வில்லையெனில் புழுவின் தாக்குதல் தீவிரமாகிப் பயிர்ச் சேதம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்திட கேட்டுகொள்ளப்படுகிறது.

    படைபுழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும். வளர்ந்த புழுக்கள் இலையுறையினுள் சென்றும் தண்டுப் பகுதிகளையும், மக்காச்சோளப் பயிரின் அடிப்பகுதியையும், நுனிப்பகுதியையும் தின்று சேதம் விளைவிக்கும். ஒரே தொகுப்பாக ஒரே சமயத்தில் மக்காச்சோ ளத்தை விதைப்பதன் மூலம் படைப்புழு தாக்குதலை குறைக்கலாம். உளுந்து மற்றும் பாசிப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை ஊடுபயிர் சாகுபடி செய்ய வேண்டும்.ஒரு ஏக்கருக்கு 10 எண்கள் பறவை தாங்கிகள் வைப்பதன் மூலம் விதைத்தது முதல் 30 நாட்கள் வரை மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

    படைப்புழுவின் தாக்குதல் அதிகரிக்கும்பொழுது 15 முதல் 20 நாட்களில், அசாடிராக்டின் ஒரு சதவீத இ.சி. 400 மி.லி. அளவு அல்லது இமாமெக்டின் பென்சோயெட் 5 எஸ்.ஜி. 80 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். மக்காச்சோளப் பயிரானது 40-45 நாட்கள் வளர்ந்த நிலையில், ஸ்பெனிடோரம் 12 எஸ்.சி 100 மி.லி அல்லது நவ்லுரான் 10 இ.சி என்ற மருந்து 300 மி.லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.மேலும் இப்பூச்சியின் தாக்குதல் 60 முதல் 65 நாட்கள் வளர்ந்த பயிரில் தென்பட்டால் புளுபென்டையமைடு 480 எஸ்.சி. 80 மி.லி. அல்லது குளோரோன்டிரிபுரோல் 18.5 எஸ்.சி. 80 மி.லி. ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

    • வரி விதிப்பால் விவசாயிகள் நஷ்டப்படும் நிலை உள்ளது.
    • உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் 90 சதவீதம் கோழித் தீவனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

    பல்லடம்:

    கோழி தீவனத்துக்குப் பயன்படுத்தும் மக்காச்சோளத்துக்கு 1சதவீத செஸ் வரியை ரத்து செய்ய அரசுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பெரும்பான்மையாக மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனா். உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் 90 சதவீதம் கோழித் தீவனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மக்காச்சோளத்தை விற்பனை செய்யும்போது கோவை, திருப்பூா், ஈரோடு, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் 1சதவீதம் செஸ் வரி கட்ட கட்டாயப்படுத்தப்படுகிறது. வேறு எந்த மாவட்டத்திலும் இந்த வரி விதிப்பு இல்லை.

    இந்த வரி விதிப்பால் விவசாயிகள் நஷ்டப்படும் நிலை உள்ளது. ஏற்கெனவே இடுபொருள்கள் விலை உயா்வாலும் கூலி உயா்வாலும் கஷ்டத்தில் மக்காச்சோளத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மேலும் சிரமத்தையும் கஷ்டத்தையும் இந்த வரி விதிப்பு கொடுக்கிறது.

    விவசாயிகளின் நலனில் மிகவும் அக்கறையோடு செயலாற்றி வரும் தாங்கள் விவசாயிகளுக்கும், கோழி வளா்ப்பு பண்ணையாளா்களுக்கும் உதவும் வகையில் மேற்கண்ட கோவை, திருப்பூா், ஈரோடு, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் நடைமுறையில் உள்ள 1சதவீதம் செஸ் வரியை ரத்து செய்து உதவ வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

    • படைப்புழு தாக்குதல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது.

    உடுமலை :

    உடுமலையில் பிரதான சாகுபடியான மக்காச்சோ ளத்தில் படைப்புழு தாக்கு தல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவை தாயகமாகக்கொண்டு பரவிய பால் ஆர்மி வார்ம் எனப்படும் படைப்புழுவால் கடந்த சில ஆண்டுகளாக உடுமலை பகுதியில் மக்கா ச்சோள சாகுபடி கடும் சேதத்தை சந்தித்து வரு கிறது. விவசாயிகளுக்கு 2018ல் அரசு நிவாரணம் வழங்கி யது. 2019ல் நோய்தடு ப்புக்கான மருந்து களும், வேளாண்துறை வாயிலாக மானியத்தில் வழங்கப்ப ட்டது.கடந்த 2 ஆண்டுகளாக மக்காச்சோள விவசா யிகளின் பிரச்னை யை தமிழக அரசு கண்டுகொ ள்ளவில்லை. உடுமலை வட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள சாகுபடி படைப்புழு தாக்குதலால் பாதிக்க ப்பட்டுள்ளது.பயிரின் வளர்ச்சி தருணத்தில் மட்டு மல்லாது, மக்காச்சோள கதிர்களையும் இப்புழுக்கள் உண்பதால், 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது. எனவே மக்காச்சோளம் சாகுபடி செய்து பாதித்தவ ர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். 

    • மக்காச்சோளம் மொத்தம் 19 ஆயிரம் கிலோ அளவில் இருந்தது.
    • குவிண்டால் ஒன்று ரூ.2,211-க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,202-க்கும் விலை போனது.

    தாராபுரம் :

    தாராபுரம், அலங்கியம், தளவாண்பட்டிணம், சந்திராபுரம், கொங்கூர் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடக்கிறது. மக்காச்சோளத்தை அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை காய வைத்து விற்பனை செய்கிறார்கள்.

    அதன்படி அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். திருப்பூர், திண்டுக்கல், பழனி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளத்தை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர். மக்காச்சோளம் மொத்தம் 19 ஆயிரம் கிலோ அளவில் இருந்தது. அதனை வாங்க மேற்கூறிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2,211-க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,202-க்கும் விலை போனது. அதன் மூலம் மொத்தமாக ரூ.4 லட்சத்து 23 ஆயிரத்துக்கு மக்காச்சோளம் ஏலம்போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பெ.அருள்குமார் செய்திருந்தார்.

    • பருவமழையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள், பருவமழையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு நீண்ட, மத்திய, குறுகியகால பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது அதில் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அறுவடை செய்ய ப்பட்ட மக்காச்சோளத்தை காயவைப்பதற்கு உலர்கள ங்கள் இல்லாததால் நான்கு வழி சாலையில் உலர்த்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் பெரம்பலூர்,சேலம், திண்டுக்கல், மதுரை, திருப்பூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
    • விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

    உடுமலை:

    இந்தியாவில் கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மக்காச்சோளத்தை அதிக அளவில் பயிரிடுகின்றன. நம் நாடு 2020-21ம் ஆண்டு 3.43மில்லியன் மெட்ரிக் டன் மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்துள்ளது. தமிழகத்தில் 2020-21ம் ஆண்டில் 4 லட்சம் எக்டர் பரப்பில் 25.64 லட்சம் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்துள்ளது. தமிழகத்தில் பெரம்பலூர்,சேலம், திண்டுக்கல், மதுரை, திருப்பூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

    தமிழகத்திற்கு மக்காச்சோளம் வரத்தானது ஆந்திரா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறது. இந்த 3 மாநிலங்கள் தமிழகத்தின் மக்காச்சோள தேவையை 30 சதவீதம் பூர்த்தி செய்கின்றன.கோழி, கால்நடை தீவனத்திற்கான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக உள்நாட்டு சந்தையில் சமீபகாலமாக விலை அதிகரித்து வருகிறது.

    வேளாண் பல்கலைக்கழகம் விலை முன்னறிவிப்பு திட்டமானது கடந்த 27 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளின் படி தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது மார்ச் முதல் ஏப்ரல் வரை குவிண்டாலுக்கு 2000 ரூபாய் முதல் 2200 ரூபாய் ஆக இருக்கும். விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.மேலும், விபரங்களுக்கு 0422- 2431405/ 243278 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குன்னம் அருகே அறுவடை செய்யப்பட்ட 100 மூட்டை மக்காச்சோளம் தீயில் எரிந்து நாசமானது
    • பக்கத்தில் தட்டைகளுக்கு வைத்த தீ பரவியதால் விபரீதம்

    குன்னம்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மற்றும் வேப்பந் தட்டை தாலுகா பகுதிகளில் விவசாயிகள் பல்லாயிரக் கணக்கா ன ஏக்க–ரில் மக் காச்சோளம் பயி–ரிட்டுள்ள–னர். தற்போது அந்த பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 10 நாட்களாக அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடு–பட்டு வருகின்றனர்.இந்தநிலையில் பெரம்ப–லூர் மங்களம் கீழத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 55) என்பவர் அந்த பகுதி–யில் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார்.

    பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து 100 மூட் டைகளில் கட்டி வயல்வெளி–யில் பாதுகாப்பாக வைத்தி–ருந்தார்.இதற்கிடையே நேற் றைய தினம் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அறுவடைக்குப் பின் தோட்டத்தில் கிடந்த உதிரிகள் மற்றும் சோள தட்டைகளை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது.இதில் எதிர்பாராத விதமாக அந்த தீ ஆறுமு–கத்தின் தோட்டத்தி–லும் பரவியுள்ளது.

    உடனடியாக மங்களமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இருந்தபோதிலும் அறு–வடை செய்து 100 மூட்டை–களில் கட்டி வைத்திருந்த முத்துச்சோளம் முழுவதும் தீக்கிரையானது. இது தொடர்பாக ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பக் கத்து தோட்ட விவசாயி செந்தில்குமாரிடம் விசா–ரணை நடத்தி வருகிறார்.அறுவடை செய்து தோட் டத்தில் வைத்திருந்த 100 மூட்டை மக்காச்சோள பயிர் கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட விவசாயி நஷ்டஈடு கோரியுள்ளார்.

    ×