search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forecast information"

    • தமிழகத்தில் பெரம்பலூர்,சேலம், திண்டுக்கல், மதுரை, திருப்பூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
    • விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

    உடுமலை:

    இந்தியாவில் கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மக்காச்சோளத்தை அதிக அளவில் பயிரிடுகின்றன. நம் நாடு 2020-21ம் ஆண்டு 3.43மில்லியன் மெட்ரிக் டன் மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்துள்ளது. தமிழகத்தில் 2020-21ம் ஆண்டில் 4 லட்சம் எக்டர் பரப்பில் 25.64 லட்சம் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்துள்ளது. தமிழகத்தில் பெரம்பலூர்,சேலம், திண்டுக்கல், மதுரை, திருப்பூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

    தமிழகத்திற்கு மக்காச்சோளம் வரத்தானது ஆந்திரா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறது. இந்த 3 மாநிலங்கள் தமிழகத்தின் மக்காச்சோள தேவையை 30 சதவீதம் பூர்த்தி செய்கின்றன.கோழி, கால்நடை தீவனத்திற்கான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக உள்நாட்டு சந்தையில் சமீபகாலமாக விலை அதிகரித்து வருகிறது.

    வேளாண் பல்கலைக்கழகம் விலை முன்னறிவிப்பு திட்டமானது கடந்த 27 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளின் படி தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது மார்ச் முதல் ஏப்ரல் வரை குவிண்டாலுக்கு 2000 ரூபாய் முதல் 2200 ரூபாய் ஆக இருக்கும். விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.மேலும், விபரங்களுக்கு 0422- 2431405/ 243278 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×