search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bollworm"

    • படைப்புழு தாக்குதல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது.

    உடுமலை :

    உடுமலையில் பிரதான சாகுபடியான மக்காச்சோ ளத்தில் படைப்புழு தாக்கு தல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவை தாயகமாகக்கொண்டு பரவிய பால் ஆர்மி வார்ம் எனப்படும் படைப்புழுவால் கடந்த சில ஆண்டுகளாக உடுமலை பகுதியில் மக்கா ச்சோள சாகுபடி கடும் சேதத்தை சந்தித்து வரு கிறது. விவசாயிகளுக்கு 2018ல் அரசு நிவாரணம் வழங்கி யது. 2019ல் நோய்தடு ப்புக்கான மருந்து களும், வேளாண்துறை வாயிலாக மானியத்தில் வழங்கப்ப ட்டது.கடந்த 2 ஆண்டுகளாக மக்காச்சோள விவசா யிகளின் பிரச்னை யை தமிழக அரசு கண்டுகொ ள்ளவில்லை. உடுமலை வட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள சாகுபடி படைப்புழு தாக்குதலால் பாதிக்க ப்பட்டுள்ளது.பயிரின் வளர்ச்சி தருணத்தில் மட்டு மல்லாது, மக்காச்சோள கதிர்களையும் இப்புழுக்கள் உண்பதால், 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது. எனவே மக்காச்சோளம் சாகுபடி செய்து பாதித்தவ ர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். 

    ×