என் மலர்
நீங்கள் தேடியது "விலை உயர்வு"
- 12 நாட்களில் மட்டும் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் உயர்ந்துள்ளது.
- இனி வரும் நாட்களிலும் வெள்ளி விலை வேகமாக உ ச்சம் பெறும் என்று கூறப்படுகிறது.
சேலம்:
தமிழகத்தில் தங்கத்திற்கு அடுத்தபடியாக வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி உள்பட வெள்ளி நகைகளை வாங்கி பொதுமக்கள் அதிக அளவில் அணிந்து வந்தனர். தற்போது வெள்ளியின் விலை தினசரி புதிய உச்சத்தை எட்டி வருவதால் ஏழை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
குறிப்பாக நேற்று வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ. 4 லட்சமாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு மேலும் 25 ஆயிரம் அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரித்தது. ஒரு கிராம் வெள்ளி விலை 425 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த 12 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளி ரூ. 3 லட்சமாக இருந்த நிலையில் மின்னல் வேகத்தில் உயர்ந்து 12 நாட்களில் ரூ.4 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் 12 நாட்களில் மட்டும் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டிற்காக தொழில் அதிபர்கள் வெள்ளியில் அதிக அளவில் தொடர்ந்து முதலீடு செய்வதால் வெள்ளி விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் வெள்ளி விலை வேகமாக உ ச்சம் பெறும் என்று கூறப்படுகிறது.
இந்த தொடர் விலை உயர்வால் சேலம் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் பட்டறைகளுக்கும் புதிய ஆர்டர்கள் வருவதில்லை. இதனால் வேலை இழந்த வெள்ளி பட்டறை தொழிலாளர்கள் வேறு வேலைக்கு சென்று விட்டனர். இதனால் வெள்ளி பட்டறைகள் களை இழந்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. வெள்ளி விலை உயர்வால் ஏழை மக்கள் வெள்ளி கொலுசுகள் உள்பட வெள்ளி நகைகளையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- பண்ணையாளர்கள் நேரடியாக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடுவதில்லை.
- திருப்பூரில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும் கறிக்கோழி பண்ணையாளர்கள் அல்ல.
கறிக்கோழி விலை உயர்வு போராட்டத்தினால் ஏற்பட்டது அல்ல இது தற்காலிகமான ஒன்றே. விரைவில் நிலைமை சீராகும் என கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கோவையில் பிராய்லர் கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூறியதாவது:-
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, இந்த பிரச்னையை தேவையற்ற விதத்தில் பெரிதாக்கி வருகின்றனர்.
உண்மையில், 90 சதவீத கறிக்கோழி பண்ணையாளர்கள் கிலோவுக்கு ரூ.7.50 முதல் ரூ.12 வரை பெறுகின்றனர். கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே வழங்கப்படுகிறது என்ற தகவல் முற்றிலும் தவறானது.
வெறும் 5 சதவீத பண்ணையாளர்களே அந்த அளவிற்கு பெறுகின்றனர்.
தமிழ்நாட்டில் தான் நாட்டிலேயே சராசரியாக அதிக தொகை கறிக்கோழி வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இது உற்பத்தி 90 சதவீதம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இயல்பாக ஏற்ற இறக்கங்களைக் கொண்ட ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாக உள்ளது. பண்ணையாளர்கள் நேரடியாக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடுவதில்லை.
நாள்தோறும் 23 லட்சம் முதல் 25 லட்சம் வரை கறிக்கோழிகள் வழக்கம் போல் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு வருகின்றன. 'விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்' என்ற பெயரில் தான் இந்த பிரச்னை தொடர்ந்து தீவிரப்படுத்தப்படுகிறது. இதற்கு விரைவில் முடிவு காண வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்ட ஆலோசனைப்படி அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இது அரசு கொள்முதல் செய்யும் தொழில் அல்ல. ஒப்பந்த நிறுவனங்களுக்கும்ம் பண்ணையாளர்களுக்கும் இடையிலான வர்த்தகமாகவே இது நடைபெறுகிறது. அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே அரசு தலையிட முடியும்.
பண்ணையாளர்கள் தாங்களே சொந்தமாக கோழிகளை வளர்க்கிறோம் என கூறுகின்றனர். தற்போது கோழிக் குஞ்சுகளின் விலை ரூ.60-ஐ எட்டியுள்ள நிலையில், பலர் இந்தத் தொழிலில் புதிதாக ஈடுபட்டு வருகின்றனர். எந்த விவசாயியையும் வற்புறுத்தியோ, மிரட்டியோ இந்தத் தொழிலை செய்ய யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

மேலும், தென்னை நார் மஞ்சி விலையை குறைக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை சலுகை விலையில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை பணியாளர்களும் ஒப்பந்த நிறுவனங்களும் இணைந்து முன்வைக்க வேண்டும்.
பண்ணைகளில் கோழிகளுக்கு தீவனம் அல்லது தண்ணீர் வைக்க வேண்டாம் என தவறான தகவல்களை பரப்பக் கூடாது. திருப்பூரில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும் கறிக்கோழி பண்ணையாளர்கள் அல்ல.
டிசம்பர் மாதமே வளர்ப்பு தொகையை ரூ.1 உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. கோடை காலத்தில் கூடுதலாக கிலோவுக்கு ரூ.1 வழங்கவும், விற்பனை விலை உயரும்போதும் அதேபோல் கிலோவுக்கு ரூ.1 அதிகரித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 3 லட்சம் கோழிக் குஞ்சுகள் இறந்ததாக தகவல் உள்ளது.
கோழிக் குஞ்சுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் தான் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போதைய கறிக்கோழி விலை உயர்வு இந்த போராட்டத்தினால் ஏற்பட்டது அல்ல; இது தற்காலிகமான ஒன்றே. விரைவில் நிலைமை சீராகும்.
சந்தை விலைகளில் முழுமையான கட்டுப்பாடு விதிக்க இயலாது. தமிழ்நாடு அதிக நுகர்வோர்களைக் கொண்ட மாநிலமாகவும் உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.
தற்போதைய விலை உயர்வு படிப்படியாக குறையும். மேலும் தற்போது விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்பவர் மூலம் ரூ.20 வழங்க வேண்டும் என கேட்கிறார்கள் அதற்கு வாய்ப்பே இல்லை தெரிவித்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை கடந்து இப்போது ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
- வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்தை கடக்குமா? என பலர் கேட்டு வருகின்றனர்.
தங்கம், வெள்ளி விலை கடந்த ஓராண்டுக்கு மேலாக புதிய பாதையில் பயணிக்கிறது. ஏற்றம்-இறக்கம் என்ற நிலை நீடித்தாலும், பெருமளவில் ஏறுமுகத்திலேயே இரண்டும் இருந்து புதிய உச்சத்தை தாண்டுகிறது.
தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டுமா? என பேசி வந்த நிலையில், அதனையும் கடந்து இப்போது ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்தை கடக்குமா? என பலர் கேட்டு வந்த சூழலில், ரூ.1 லட்சம் மட்டுமல்ல, ரூ.2 லட்சம் ஏன் ரூ.3 லட்சத்தையும் தாண்டி, அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இவ்வளவு நிலைகளை கடந்தும், மேலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து கொண்டே வருவதைதான் பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் நேற்றும் விலை உயர்ந்து இருந்தது.
நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், பவுனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே இன்று மதியமும் தங்கள் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று காலை சவரனுக்கு ரூ.2,800 கூடிய நிலையில், தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ. 1,320 கூடியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்து ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.515 உயர்ந்து ரூ.14,415-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.340-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200
19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600
18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240
17-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240
16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-1-2026- ஒரு கிராம் ரூ.340
19-1-2026- ஒரு கிராம் ரூ.318
18-1-2026- ஒரு கிராம் ரூ.310
17-1-2026- ஒரு கிராம் ரூ.310
16-1-2026- ஒரு கிராம் ரூ.306
- கிராமுக்கு ரூ. 290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனை
- கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 330 ரூபாய்க்கு விற்பனை
கடந்த சிலநாட்களாகவே தங்கத்தின்விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துவருகிறது. 50 ஆயிரம், 60 ஆயிரம் என உயர்ந்து தற்போது 1 லட்சத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒருநாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது. இன்று காலை கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,610-க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் தற்போது கிராமுக்கு ரூ. 290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900க்கும், சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200க்கும் விற்பனையாகிறது.
தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 330 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- மைக்ரோசிப்களின் பற்றாக்குறையின் தாக்கம் ஏற்கனவே நிறுவனங்களில் கடுமையாக உள்ளது.
- விலை உயர்வு காரணமாக மொபைல் போன்களின் விற்பனை 10-12 சதவீதம் குறையக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
டிவி, மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் அடுத்த 2 மாதங்களில் கணிசமாக அதிகரிக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
மைக்ரோசிப்களின் பற்றாக்குறை, அதன் விளைவாக அவற்றின் விலை அதிகரிப்பு மற்றும் ஏஐ ஏற்றுக்கொள்வது இதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன.
மைக்ரோசிப்களின் பற்றாக்குறையின் தாக்கம் ஏற்கனவே நிறுவனங்களில் கடுமையாக உள்ளது.
கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்திற்குள் மைக்ரோசிப் விலைகள் 120 சதவீதம் அதிகரிக்கும்.

இது டிவி மற்றும் தொலைபேசி நிறுவனங்களை விலைகளை அதிகரிக்க கட்டாயப்படுத்தும். இந்த விளைவு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், அதனால்தான் பல நிறுவனங்கள் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை குறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. விலை உயர்வு காரணமாக மொபைல் போன்களின் விற்பனை 10-12 சதவீதம் குறையக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- மொத்த விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு முன்பே விலையை உயர்த்திவிட்டனர்.
- சிகரெட் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், பதுக்கலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
சென்னை:
புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால், சிகரெட் விலை கணிசமாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. மெல்லும் புகையிலை மீதான வரி 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாகவும், ஹூக்கா புகையிலை வரி 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், பைப் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகளின் வரி 60-ல் இருந்து 325 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.
இந்தநிலையில், புதிய விலையேற்றம் அமலுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சில கடைகளில் சிகரெட் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. முன்பு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட கோல்டு பில்டர் சிகரெட்டுகள் தற்போது ரூ.12-க்கு விற்கப்படுகின்றன.
அதேபோல, கிங்ஸ் ரூ.20, சிசர் பில்டர் ரூ.10 என ஒரு சிகரெட்டுக்கு 2 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக, டீக்கடைகள் மற்றும் சிறிய கடைகளில் கேட்டபோது, ''மொத்த விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு முன்பே விலையை உயர்த்திவிட்டனர். கோல்டு பில்டர் பாக்கெட் (10 சிகரெட்டுகள்) முன்பு ரூ.92-க்கு கிடைத்தது, தற்போது ரூ.97-க்கு வாங்க வேண்டியுள்ளது. பாக்கெட்டில் விலை ரூ.100 என அச்சிடப்பட்டு உள்ளதால், கேள்வி கேட்க முடியவில்லை'' என தெரிவித்தனர்.
சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக விலை உயர்த்தப்படவில்லை என்றும், சில வியாபாரிகள் சிகரெட்டுகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிகரெட் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், பதுக்கலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
விலையேற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதற்கு முன்பே சிகரெட் விலை உயர்ந்துள்ளதால், தமிழ்நாட்டில் புகைப்பிடிப்பவர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
- வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.
- தங்கத்திற்கு போட்டியாக நீ மட்டும் தான் ஏறுவீயா... நானும் ஏறுவேன் என்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
தங்கம்..!
தங்கத்தின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. அதிலும் பெண்களை கேட்கவே வேண்டாம். புதுப்புது டிசைன்களில் தங்கம் வாங்கி அணியனும்னு என்று ஆர்வம் கொள்வார்கள். இளம்வயது பெண்கள் திருமணத்திற்காக பார்த்து பார்த்து நகை எடுப்பார்கள். திருமணம் ஆன பெண்களோ தனக்கோ அல்லது தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்கு என நகை வாங்குவார்கள்.
இப்படி சேமிப்பு, எதிர்கால நலன், அவசர தேவை, திருமணம் போன்றவற்றிற்கு தங்கம் பயன்படும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு 20 சவரன், 50 சவரன் என வசதிக்கேற்ப பெற்றோர்கள் நகை அணிவித்து திருமணம் செய்து வைப்பார்கள்.

இப்படிப்பட்ட தங்கம் இரு விதமாக விற்பனை செய்யப்பட்டது. அதாவது 22 கிராட், 24 கிராட் என்று... (இதனை சாதாரண நகை என்றும் 916 நகை என்றும் சொல்வர்). அரசாங்கம் ஒரு விதிமுறையை கொண்டு வந்தது. அந்த விதியில் இனி சாதாரண நகை என்று சொல்லப்படும் 22 கிராட் நகை விற்கக்கூடாது. 24 கிராட் முத்திரையிடப்பட்ட நகை தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று. இதனால் ஏழை மக்கள் சிரமம் அடைந்தனர்.

சரி அதுபோகட்டும் என்று பார்த்தால், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்று தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையானது. ஆண்டின் தொடக்கத்தில் சற்று தான் உயர்ந்தது என்று பரவாயில்லை என்று தோன்றியது அன்று...

ஆனால் இன்று அதன் தொடக்கமாக தங்கம் விலை உச்சத்தில் விற்பனையாகிறது. அதாவது வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. தங்கத்திற்கு போட்டியாக நீ மட்டும் தான் ஏறுவீயா... நானும் ஏறுவேன் என்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், பார் வெள்ளி 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஒவ்வொரு மாத இறுதியில் விற்பனையான தங்கம் மற்றும் வெள்ளி விலை விவரம்:-
| மாதம் | கிராம் | சவரன் | கிராம் | பார் வெள்ளி |
| ஜனவரி | ரூ.7,730 | ரூ.61,840 | ரூ.107 | ரூ.1,07,000 |
| பிப்ரவரி | ரூ.7,960 | ரூ.63,680 | ரூ.105 | ரூ.1,05,000 |
| மார்ச் | ரூ.8,425 | ரூ.67,600 | ரூ.113 | ரூ.1,13,000 |
| ஏப்ரல் | ரூ.8,980 | ரூ.71,840 | ரூ.111 | ரூ.1,11,000 |
| மே | ரூ.8,920 | ரூ.71,360 | ரூ.111 | ரூ.1,11,000 |
| ஜூன் | ரூ.8,915 | ரூ.71,320 | ரூ.119 | ரூ.1,19,000 |
| ஜூலை | ரூ.9,170 | ரூ.73,360 | ரூ.125 | ரூ.1,25,000 |
| ஆகஸ்ட் | ரூ.9,620 | ரூ.76,960 | ரூ.134 | ரூ.1,34,000 |
| செப்டம்பர் | ரூ.10,860 | ரூ.86,880 | ரூ.161 | ரூ.1,61,000 |
| அக்டோபர் | ரூ.11,300 | ரூ.90,400 | ரூ.165 | ரூ.1,65,000 |
| நவம்பர் | ரூ.11,800 | ரூ.94,400 | ரூ.192 | ரூ.1,92,000 |
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு ஏற்ற, இறக்கங்கள் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து இன்று (06-12-2025) முறையே ஒரு சவரன் தங்கம் ரூ.96,320-க்கும் ஒரு கிராம் ரூ.12,040-க்கும், வெள்ளி ஒரு கிராம் வெள்ளி 199 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொருளாதார மந்த நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் விலை உயருகிறது என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும் இனி விலை குறையுமா? என்றால் அது சாத்தியமே இல்லை தான் என்கிறார்கள். மேலும் இனி பிறக்கப்போகும் 2026-ம் ஆண்டில் தங்கம் விலை 15 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 24 ஆயிரம் வரை விற்பனையாகலாம் என்ற தகவலை சொல்லும் போது இடி இறங்கியது போல் இருந்தது. இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் சற்று யோசித்தே செயல்படுவதே நல்லது.
- தற்போது உற்பத்தி செலவு, பணியாளர்கள் சம்பளம் என செலவு அதிகரித்து உள்ளது.
- பனியன் ஆடைகளை வாங்கும் வியாபாரிகள் சிலர் அதற்கான தொகையை சரிவர கொடுப்பதில்லை.
திருப்பூர்:
திருப்பூரில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) கலந்துரையாடல் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறுகுறு தொழில்களில் ஜாப் ஒர்க்கிற்கான பணத்தை 45 நாட்களுக்குள் வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
அதேபோல் ரீடெய்லர்களும் பணத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் தற்போது உற்பத்தி செலவு, பணியாளர்கள் சம்பளம் என செலவு அதிகரித்து உள்ளது. மேலும் பனியன் ஆடைகளின் விலையை உயர்த்தி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை விலையை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பனியன் ஆடைகளை வாங்கும் வியாபாரிகள் சிலர் அதற்கான தொகையை சரிவர கொடுப்பதில்லை. அவர்களை பிளாக் லிஸ்ட்டில் (கருப்பு பட்டியல்) கொண்டு வருவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மதுரை:
உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்து செல்கின்றனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவில் வருகை தருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், முறுக்கு, லட்டு, அதிரசம் ஆகியவற்றின் விலை கடந்த 2011-ம் வருடத்தில் இருந்து ரூ.10லிருந்து ரூ.15 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செய்யப்பட்ட இந்த விலையேற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 175 கிராம் சர்க்கரை பொங்கல், 150 கிராம் புளியோதரை, 140 கிராம் வடை, 50 கிராம் அப்பம், 40 கிராம் தேன்குழல் முறுக்கு, 60 கிராம் லட்டு இவை யாவும் தற்போது 15 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 15 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த இந்த பிரசாதங்கள் தற்போது 50 சதவீதம் விலை ஏற்றம் கண்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த விலையேற்றம் உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 8 கிராம் குங்குமம் 3 ரூபாய்க்கும், 40 கிராம் குங்குமம் 15 ரூபாய்க்கும், 100 கிராம் குங்குமம் 35 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவில் வளாகத்திற்குள் பொற்றாமரை குளம் பகுதியில் 2 பிரசாத கடைகளும், அம்மன் சன்னதி, முக்குறுணி விநாயகர் ஆலயம், கொடிமரம் அருகே என மொத்தம் 6 பிரசாத ஸ்டால்கள் உள்ளன. கோவிலுக்கு வெளியே கிழக்கு கோபுரம் அருகில் ஒரு பிரசாத ஸ்டால் என 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பக்தர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய இந்த பிரசாதங்களின் விலை ஏற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சள் பை 21 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அது மட்டும் ரூபாய் 15 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
- பாகிஸ்தானுக்கு பெரும்பாலான தக்காளி விநியோகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுகொண்டிருந்தது.
ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அண்மையில் இரு நாடுகளுக்கும் எல்லையில் ஏற்பட்ட சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கத்தாரின் மத்யஸ்தத்தால் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்த மோதலால் அக்டோபர் 11 முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மூடப்பட்டிருப்பதால் இரு நாடுகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதனால் பாகிஸ்தானில் தக்காளியின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. எல்லை மூடப்படுவதற்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. மேலும் பாகிஸ்தானுக்கு பெரும்பாலான தக்காளி விநியோகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் எல்லை மூடப்பட்டு விநியோகம் நின்றதால் தக்காளியின் விலை பாகிஸ்தானில் 400 சதவீதம் உயர்ந்து 1 கிலோ தக்காளி 600 ரூபாயாக்கு விற்கப்படுகிறது. பாகிஸ்தான் உணவில் தக்காளி முக்கிய பங்காற்றும் நிலையில் இந்த விலை உயர்வு மக்களை அதிகம் பாதித்து வருகிறது.
எல்லை மூடப்பட்டதால் போக்குவரத்து தடைபட்டு அத்தியாவசிய பொருட்கள் விநோயோகம் நின்றதால் இரு நாடுகளும் ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் டாலர்களை இழந்து வருவதாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் கான் ஜான் அலோகோசி கூறினார்.
- கேடிஎம் RC 200 அதிகபட்சமாக ரூ.12,000 விலை உயர்வைப் பெற்றுள்ளது.
- இந்திய சந்தையில் பிராண்டின் பிரபலமான மாடல்களில் 250 டியூக் ஒன்றாகும்.
இந்திய சந்தையில் விற்கப்படும் தனது பைக்குகளின் விலையை கேடிஎம் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. இந்த விலை மாற்றங்கள் மூலம், பைக்குகளின் விலை ரூ.12,000 வரை அதிகமாகிறது. மாடல்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது. உள்ளீட்டு செலவுகள் அதிகரித்து வருவதாலும், பணவீக்கம் காரணமாக ஏற்படும் வேறுபாட்டை சரிசெய்யவும், தங்கள் மாடல்களின் விலையை உயர்த்திய பிற நிறுவனங்களுடன் கேஎடிஎம் இணைந்து உள்ளது.
ஆஸ்திரிய பிராண்டின் விலை உயர்வில் கேடிஎம் 390 டியூக் மாடல் விலை குறைந்தபட்சமாக ரூ.1,000 அதிகரித்துள்ளது. இதன் மூலம் பைக்கின் விலை ரூ.2.96 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) மாறியுள்ளது. முன்னதாக, இந்த நிறுவனம் பைக்கின் விலையை ரூ.18,000 குறைத்திருந்தது. இதனால் பைக்கின் விலை ரூ.3.13 லட்சத்திலிருந்து ரூ.2.95 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) குறைந்தது.
இதற்கிடையில், கேடிஎம் 250 டியூக் மற்றும் RC 390 இப்போது ரூ.5,000 விலை உயர்ந்துள்ளன. இதன் மூலம் 250 டியூக்கின் விலை ரூ.2.30 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் RC 390 இப்போது ரூ.3.23 லட்சமாக (இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்) உள்ளது. பஜாஜ் பல்சர் N250, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R மற்றும் சுசுகி ஜிக்ஸர் 250 போன்ற இந்திய சந்தையில் பிராண்டின் பிரபலமான மாடல்களில் 250 டியூக் ஒன்றாகும்.
கேடிஎம் RC 200 அதிகபட்சமாக ரூ.12,000 விலை உயர்வைப் பெற்றுள்ளது. இந்த மாற்றத்துடன், பைக் இப்போது ரூ.2.33 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்கப்படும், முந்தைய ரூ.2.21 லட்சத்துடன் ஒப்பிடும்போது இந்த பைக் ஹீரோ கரிஸ்மா எக்ஸ்.எம்.ஆர்., பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200, சுசுகி எஸ்.எஃப். 250, மற்றும் யமஹா ஆர்15 வி4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- விலை உயர்வு இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விலை உயர்வானது, ரூ.90,000 முதல் ரூ.12.2 லட்சம் வரை இருக்கும்.
மெர்சிடிஸ் பென்ஸ் கார் அனைவரையும் ஈர்க்கும் டிசைன் கொண்டது. இந்த நிறுவனத்தின் மாடலை பயன்படுத்த பெரும்பாலானோர் ஆர்வம் கொள்வர்.
இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் சில மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தள்ளது. இந்த விலை உயர்வு இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ந்தேதி முதல் கட்டமாகவும், செப்டம்பர் 1-ந்தேதி இரண்டாவது கட்டமாகவும் விலை உயர்வானது அமல்படுத்தப்பட உள்ளது.
ஜூன் 1-ந்தேதி முதல் சி-கிளாஸ், இ-கிளாஸ், ஜிஎல்சி, ஜிஎல்இ, ஜிஎல்எஸ், ஈக்யூஎஸ் மற்றும் மேபேக் எஸ்-கிளாஸ் போன்ற கார் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுகிறது. அதன்படி விலை உயர்வானது, ரூ.90,000 முதல் ரூ.12.2 லட்சம் வரை இருக்கும். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் இரண்டாம் கட்ட விலை உயர்வானது முதல் ஜெர்மன் வாகன உற்பத்தியாளரின் முழு மாடல் வரிசையையும் உள்ளடக்கும். வாகனங்களின் விலையில் 1.5 சதவீதம் வரை மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு கட்டங்களான விலை உயர்வானது வாடிக்கையாளர்களின் திட்டமிடலுக்கு அதிக நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
விலை உயர்வு குறித்து மெர்சிடிஸ் நிறுவனம் கூறுகையில், சமீபத்திய விலை உயர்வுக்குக் கடந்த நான்கு மாதங்களில் யூரோவிற்கு எதிராக இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மதிப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்ததே காரணம் என கூறியுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸைத் தவிர, ஆடி இந்தியாவும் அதன் வாகனங்களின் விலைகளை 2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வானது வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.






