என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Power"
- செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- க்கனாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
தாராபுரம்,
தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நாளை 10-ந் தேதி நடக்கிறது. எனவேநாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம்பாளையம், தளவாய்பட்டணம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல் பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல் பாளையம், கள்ளிவலசு, சிக்கனாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்களில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். வல்லநாட்டில் நடந்த ஊராட்சிசபை கூட்டத்தில் கனிமொழி எம்பி. பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
மேலும் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. மத்தியில் ஆளும் பி.ஜே.பி.க்கு காவடி தூக்கி வருகிறது. நீட் பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஸ்டெர்லைட் பிரச்சனையாக இருந்தாலும் சரி இதற்கெல்லாம் காரணம் அ.தி.மு.க. தான். அவர்களை மன்னிக்கவே கூடாது. 3 இடத்திற்கு இடைத்தேர்தல் வரவில்லை என்றாலும் கூட மற்ற சட்டமன்றத்திற்கு தேர்தல் வருகின்றது. வருகின்ற தேர்தலில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். அப்போது தமிழக பிரச்சனை அனைத்தும் தீரும். கன்னியாகுமரியில் ராகுல் பேசியது போலவே எங்கள் கூட்டணி ஆட்சி வந்தவுடன் ஜி.எஸ்.டி பிரச்சனையும் தீரும்.
இவ்வாறு அவர் பேசினார். #ParliamentElection #Kanimozhi
நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்த மாவட்டங்களில் இருந்த 1 லட்சத்து 13 ஆயிரம் மின் கம்பங்கள், 201 துணை மின் நிலையங்கள், 841 மின்மாற்றிகள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. இவற்றை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். தற்போது எந்த அளவுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-
மின் வினியோகத்தை பொறுத்தவரை நகராட்சி பகுதிகளில் ஓரளவு முழுமையாக மின் இணைப்பு கொடுத்து விட்டோம்.
11 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்த வேதாரண்யம் நகரில், 75 சதவீத வீடுகளுக்கு நேற்று மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு 2 நாளில் கிடைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதேபோல் முத்துப்பேட்டை நகருக்கு மின் இணைப்பு கொடுக்க வேலைகள் நடந்து வருகிறது. நாளை அல்லது நாளை மறுநாளில் இருந்து அங்கு மின்சாரம் கிடைத்து விடும்.
திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதமும், மன்னார்குடி நகராட்சியில் 92.66 சதவீதமும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 92.42 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 75.02 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிராம பகுதிகளில் 30 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.
நிறைய வீடுகளில் மின் இணைப்பு சேதம் அடைந்திருப்பதால் 30-ந்தேதி வரை பில் கட்ட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலக்கெடுவை நீட்டிப்பது பற்றி முதல்-அமைச்சருடன் கலந்து பேசி அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் நேற்று நள்ளிரவில் இருந்து 220 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.இதுபற்றி அணுமின் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொழில் நுட்ப கோளாறால் முதல் அணுஉலையும் இயங்காமல் இருக்கிறது. இதனால் தற்போது மொத்தம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம், கோவளம், நெய்வேலி, கொக்கிலமேடு, வெண்புருஷம், சூலேரிக்காடு, கல்பாக்கம் பகுதி மீனவ கிராமங்களில் 2-வது நாளாக இன்றும் காற்றின் வேகம் அதிகரித்து சாரல் மழை பெய்து வருகிறது. கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகு, வலை, மிஷின்களை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மழை, காற்று, கடல்சீற்றம் என அப்பகுதி கடலோர கிராம மக்களும், மீனவர்களும் பீதியில் உள்ளனர். இந்த நேரத்தில் அணு உலையும் நிறுத்தப்பட்டதால் கடலோர பகுதி மீனவர்களிடையே தற்போது சுனாமி பயமும் நிலவி வருகிறது.
புதுச்சேரி:
ரபேல் விமான ஊழலை மறைக்க சி.பி.ஐ.துறை அதிகாரிகளை சுய லாபத்திற்காக மத்திய பா.ஜனதா மாற்றி உள்ளதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அதுபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால்நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
முதல்- அமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுவை பொறுப் பாளருமான சஞ்சய்தத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
டெல்லியில் ராகுல்காந்தி சி.பி.ஐ. அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார். ஊழலை ஒழிப்பேன் எனக்கூறி மோடி ஆட்சிக்கு வந்தார்.
ஆனால், பா.ஜனதா ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ராஜஸ்தானில் நிலக்கரி ஊழல், மத்திய பிரதேசத்தில் டாக்டர் நியமனத்தில் ஊழல், சத்தீஸ்கரில் அரிசி வாங்கியதில் ஊழல் என பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழலை காங்கிரஸ் கட்சி ஆதாரத்தோடு எடுத்துக்கூறி வருகிறது.
தமிழகத்தில் முதல்- அமைச்சர் மீது சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. அமைச்சர்களின் வீடுகளில் சோதனைகள் நடக்கிறது.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை பா.ஜனதா முடக்குகிறது, கண் காணிக்கிறது. ஆனால் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழலை கண்டும், காணாமலும் உள்ளது.
இதைத்தான் ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் கேட்டார். பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தும் கேள்வி எழுப்பி வருகிறார். ஆனால், மோடி இவை எதற்கும் பதில் கூறவில்லை.
ஊழலை ஒழிப்பேன் என சொன்ன மோடி ஊழலுக்கு உறுதுணையாக உள்ளார். மோடிக்கு கடைசிகாலம் நெருங்கிவிட்டது. இன்னும் 5 மாதங்களில் மோடியின் ஆட்சி வீட்டிற்கு போகும். நாம் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும். அதற்கு உறக்க மின்றி நாம் பணியாற்ற வேண்டும்.
புதுவையின் பாராளு மன்ற வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும். ராகுல்காந்தியை பிரதமராக்க புதுவை எம்.பி. கை கொடுக்க வேண்டும். இதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக் கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் பாலன், விஜயவேணி, தனவேலு, டெல்லி பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் துணைத்தலைவர்கள் விநாயகமூர்த்தி, நீல. கங்காதரன், பொதுச் செயலாளர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கருணாநிதி, தனுசு, ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ரவிச்சந்திரன்,
இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் விக்னேஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் விக்கிர மாதித்தன், மகிளா காங்கிரஸ் தலைவி பிரேமலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். #pmmodi #narayanasamy #congress
டெல்லி விஞ்ஞான பவனில், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி என்ற அமைப்பின் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதில் அவர் பேசியதாவது:-
கடந்த 200 ஆண்டுகளாக, பூமிக்கு அடியில் கிடைக்கும் நிலக்கரி போன்ற பொருட்களைத்தான் மின்சார தேவைக்காக பயன்படுத்தி வந்தோம். ஆனால், பாதுகாப்பான எதிர்காலத்துக்காக, பூமிக்கு மேலே கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை போன்ற வளங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.
2030-ம் ஆண்டுக்குள், நமது மின்சார தேவையில் 40 சதவீதத்தை சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் பூர்த்திசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார். #India #NonFossilFuel #Modi
ஒட்டன்சத்திரத்தில் நடந்த அ.ம.மு.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய நிர்வாகிகள் 4 பேர் விபத்தில் சிக்கினர். அவர்கள் காயத்துடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுக்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் நாங்கள் கோர்ட்டுக்கு சென்றே அனுமதி பெற வேண்டியது உள்ளது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து தீர்ப்பு வரும் வரை ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முதல்வரும், துணை முதல்வரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அவர்களை பொறுத்தவரையில் மக்கள் நலன் குறித்த அக்கறை கிடையாது. பதவி சுகத்துக்காகவே ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #Thangatamilselvan
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.முக. இளைஞர்-இளம் பெண்கள் பாசறை சார்பில் மதுரை மாநகர் பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட ஜெய்ஹிந்துபுரத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமுக்கு பாசறை செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மாநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க. இளைஞர்- இளம்பெண்கள் பாசறை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இன்றைக்கு இளைஞர்களுக்கு எதிர்காலம் நம்பிக்கை எல்லாம் அ.தி. மு.கவில் மட்டுமே உள்ளது. இதனை உணர்ந்துள்ள இளைஞர்கள் திரளாக அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள்.
1½ கோடி தொண்டர்களுடன் வலுவான இயக்கமாக அ.தி.மு.க. திகழ்ந்து வருகிறது. அ.தி.மு.க. இயக்கம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது.
திவாகரன் இன்றைக்கு ஒரு புதிய கட்சி தொடங்கி இருக்கிறார். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே புதிய கட்சியால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க.வை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் கிடையாது. சிலர் கட்சி தொடங்கியதால் அ.தி.மு.க.வுக்கு கடுகளவு கூட இழப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #admk #ministersellurraju
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்