search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhivakaran"

    ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் பணம் கொடுத்து தான் ஜெயித்தார் என்று அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன் தெரிவித்தார். #Dhivakaran #TTVDhinakaran #Jayalalithaa #ApolloHospital
    கோவை:

    அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அங்கு சசிகலா குடும்பம் மட்டும் சாப்பிடவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள், அவர்களது உறவினர்கள் என பலர் சாப்பிட்டனர். அப்பல்லோவில் உணவு விலை அதிகம் என்பதால் பில் அதிகம் வர காரணம்.

    ஜெயலலிதாவை அப்பல்லோவில் அனுமதித்த போது சசிகலாவின் குடும்பத்தில் ஒட்டு மொத்தம் 10 பேர் தான் இருந்தனர். சசிகலா மீது தற்போது குற்றச்சாட்டு கூறுபவர்கள் அப்போது சசிகலாவின் காலில் விழுந்தவர்கள். அப்போது அவர்கள் கோமா நிலையிலா இருந்தார்கள்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை ஆணையத்தில் நான் ஆஜராகி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். அவர்கள் குறிப்பிட்ட கேள்விகளை மட்டுமே கேட்டனர்.



    ஜெயலலிதாவிடம் எந்த மாதிரியான அறிமுகம் ஏற்பட்டது என்பது குறித்து தான் கேள்வி கேட்டனர்.

    நான் தற்போது சசிகலா குடும்பத்தை விட்டு ஒட்டு மொத்தமாக வெளியே வந்து விட்டேன். தனிக்கட்சி ஆரம்பித்து 4 மாதம் ஆகி விட்டது.

    மாவட்ட செயலாளர், நகர செயலாளர், பூத் கமிட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கட்சியை வலுப்படுத்தி வருகிறேன்.

    டி.டி.வி. தினகரன் ஜாதிக்கட்சி நடத்துகிறார். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தான் கட்சி பதவி வழங்கி உள்ளார். அவர் பதவி கொடுத்தவர்கள் அனைவரும் எங்கள் உறவினர்கள். அவர்கள் எங்கு கூட்டம் போட்டாலும் போய் விடுவார்கள்.

    டி.டி.வி. தினகரன் தனது கட்சி அங்கீகாரத்துக்கு பதிவு செய்யவில்லை. எங்கள் கட்சியில் 95 சதவீத வேலைகள் முடிந்து விட்டது.

    ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவரை சரியான வழி காட்டுதல் இல்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்தது தான் இந்த குழப்பத்திற்கு காரணம். தேர்தலில் டி.டி.வி. தினகரன் தனக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என நினைக்கிறார். அவர் ஆர்.கே. நகர் தேர்தலில் பணம் கொடுத்து தான் ஜெயித்தார்.

    20 ரூபாய் நோட்டுக்களை கொடுக்கவில்லை என்றால் அவர் ஜெயித்திருக்க மாட்டார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைய வாய்ப்பு உள்ளது. இதனை கட்சி, ஆட்சியில் இருப்பவர்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால் அமைச்சர்கள் தான் யார் வந்தாலும் சேர்த்து கொள்வோம் என கூறி வருகிறார்கள்.

    இதில் யார் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் தான் உணர்வுபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைப்படி அழைப்பு வந்தால் நாங்கள் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். எங்கள் கட்சிக்கு வருபவர்கள் வரட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhivakaran #TTVDhinakaran #Jayalalithaa #ApolloHospital
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கிய பிறகு அ.தி.மு.க.வுக்கு தினகரன் உரிமை கோருவது ஏன்? என்று திவாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். #Dhivakaran #TTVDhinakaran
    மன்னார்குடி:

    அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை விட அ.ம.மு.க. வலுவாக இல்லை. அ.ம.மு.க.வில் இருப்பவர்கள் பலர் எங்களுடைய உறவினர்கள்தான். தமிழகத்தின் மேற்கு, வடக்கு, மத்திய மாவட்டங்களில் அ.ம.மு.க.விற்கு தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. ஒரே பகுதியில் இருந்து கூட்டத்தை அழைத்துக்கொண்டு நாடக செட்டு போல கூட்டங்களை நடத்துகிறார்கள். அவர்களது கூட்டங்களில், உள்ளூர் பிரமுகர்கள் இருக்க மாட்டார்கள். அப்படித்தான் மேலூரிலும் முதல் கூட்டம் போடப்பட்டது.

    அ.தி.மு.க.வில் இருந்து வருகிற சேதாரங்கள் மட்டுமே அ.ம.மு.க. மற்றும் எங்கள் கட்சிக்கு வருகின்றனர். அங்குள்ள உள்ளூர் அரசியல் பிரச்சனை காரணமாக இந்த சேதாரங்கள் உள்ளன. இதனை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் உற்று நோக்க வேண்டும்.


    மேலும் தினகரனின் அரசியல் என்பது நயவஞ்சகத்தனமானது. அ.ம.மு.க.வை தொடங்கிய பின்னர் அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரும் வழக்குகளை ஏன் நடத்த வேண்டும்?

    சசிகலாவும், தினகரனும் அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் எப்படி பொதுச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளர் பதவி வகிக்க முடியும்?

    தினகரனை நம்பி செந்தில் பாலாஜி பல கோடி ரூபாயை அ.ம.மு.க.வுக்கு செலவு செய்துள்ளார். அவரே கட்சி மாறி விட்ட நிலையில் மற்ற எம்.எல்.ஏக்களும் நம்பிக்கையிழந்துள்ளனர். அ.தி.மு.க எல்லோரும் சேர்ந்து வளர்த்த கட்சி. அதனை பாதுகாக்க வேண்டுமானால் அனைவரும் பேராசையை கைவிட்டு சில தியாகங்களை செய்ய முன்வர வேண்டும்.

    அதன் மூலம் கட்சியையும், தொண்டர்களையும் வலுப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வில் கூட்டுத் தலைமையாக இருந்தாலும் கட்சியை ஒருங்கிணைக்க தூய்மையான எண்ணத்தோடு செயல்பட வேண்டும். ஆனால் அ.தி.மு.க.வினரது செயல்பாடுகள் செயற்கையாகத் தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhivakaran #TTVDhinakaran
    அ.தி.மு.க.வின் குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம் என்று மதுரையில் இன்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் தெரிவித்தார். #Dhivakaran #Sasikala
    மதுரை:

    அ.தி.மு.க.வின் குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம் என்று மதுரையில் இன்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் தெரிவித்தார்.

    அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதை வரவேற்கிறேன்.



    அ.தி.மு.க.வின் குழப்பமான நிலைக்கு சசிகலாதான் காரணம். திறமை வாய்ந்த ஒருவரை தலைவராக நியமித்திருந்தால் இதுபோன்ற பிரச்சினை வந்திருக்காது.

    தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தது தவறானது. தினகரன் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறார்.

    இடைத்தேர்தலை நேரடியாக சந்திக்க வேண்டுமே தவிர பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தக்கூடாது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் பயணிப்பவர்களுக்கு எங்கள் கட்சி நல்லதொரு கூடாரமாக திகழும்.

    நான் அ.தி.மு.க.வில் சேர மாட்டேன். அதில்நான் பங்கு கோரவில்லை. அவர்களே பல்வேறு நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள். நாம் ஏன் தொந்தரவு தர வேண்டும் என்று தனி இயக்கம் கண்டிருக்கிறோம். எங்களிடம் நல்லவர்கள் 2 பேர் இருந்தால்கூட போதும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhivakaran #Sasikala

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பால் ஜெயலலிதாவின் உழைப்பால் வெற்றி பெற்ற 18 தொகுதிகளை அ.தி.மு.க இழந்துவிட்டது என்று மன்னார்குடியில் திவாகரன் தெரிவித்தார். #18MLAsCaseVerdict #Dhivakaran
    மன்னார்குடி:

    அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், மன்னார்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    18 எம்.எல் ஏக்கள் நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பையொட்டியே வந்திருக்கிறது. சபாநாயகருடைய செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிடாது என்பது உண்மை என்றாலும் சபாநாயகருடைய தீர்ப்பு பாரபட்சம் கொண்டதாகும்.

    ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தும் அவர்கள் பணியில் தொடர்கிறார்கள். ஆனால் முதல்வரை மாற்ற வேண்டுமென கேட்டதால் 18 எம்.எல்.ஏ.க்களும் நீக்கப்பட்டது பாரபட்சமான தீர்ப்பு என்பது என் கருத்தாகும்.


    மேலும் இதை பேசி தீர்வு கண்டிருந்தால் ஜெயலலிதாவின் உழைப்பால் வெற்றி பெற்ற 18 தொகுதிகளை அ.தி.மு.க இழந்திருக்காது. இந்த தீர்ப்பால் இழப்பு அ.தி.மு.க.வுக்கு தான். 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு அ.தி.மு.க. அரசுக்கு ஊதப்பட்ட சங்கு.

    மீண்டும் தேர்தல் வந்தாலும் இழந்த தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம். அது எதிர்கட்சிகளுக்கே சாதகமாய் அமையும்

    சொந்த காரணங்களுக்காக, ஆசைகளுக்காக பொதுச்செயலாளர் சசிகலாவை சிறைக்கு அனுப்பிவிட்டு தான்தான் எல்லாம் என்ற மாயையை தோற்றுவித்து 18 எம்.எல்.ஏக்களையும் ஏமாற்றி பலிகடாவாக்கியவர் தினகரன் தான்.

    தற்போது தினகரன் மேல்முறையீடு செய்வதால் பலன் ஒன்றுமில்லை. ஏற்கனவே 18 தொகுதிகளிலும் மக்கள் பணி நடைபெறவில்லை. மேலும் தாமதப்படுத்துவது நல்லதல்ல. உடனே தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCaseVerdict #Dhivakaran
    தி.மு.க. தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அண்ணா திராவிட கழக பொதுச்செயலாளர் திவாகரன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். #MKStalin #Dhivakaran

    சென்னை:

    அண்ணா திராவிட கழக பொதுச்செயலாளர் திவாகரன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  திராவிட முன்னேற்ற கழகத்தின் 50 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது தலைவராக தேர்வாகியுள்ள மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.

    கட்சியின் வளர்ச்சியில் அடிமட்ட தொண்டனாக தனது பாதையை தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்று தலைவராக வளர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அவர் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி பாதைக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். #MKStalin #Dhivakaran

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் திவாகரன் மகன் இன்று ஆஜரானார்.#Jayalailthaa
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. நேற்று ஜெயலலிதாவின் உதவியாளர்கள் பூங்குன்றன், கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்து இருந்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றதற்கான ஆதாரம் இருப்பதாக திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் கூறி இருந்தார். இதையடுத்து அவரை விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை விசாரணை ஆணையத்தில் ஜெய் ஆனந்த் ஆஜரானார். அப்போது அவர் தனது விளக்கத்தை அளித்தார். #Jayalailthaa
    தஞ்சையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் மற்றும் திவாகரன் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்து பேசினர். #Dhivakaran #MKStalin
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று நடந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிட கழக பொதுச்செயலாளருமான திவாகரன் கலந்து கொண்டார். இதே திருமணத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    அப்போது இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்து பேசினர். இதைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்று விட்டார்.

    பின்னர் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-


    சென்னை- சேலத்துக்கு 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் தமிழக அரசு விடாப்பிடியாக செயல்படுவது ஏன் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக முதல்- அமைச்சருக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். அதில் மக்கள் கருத்தை கேட்டு மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்றும் படி தெரிவித்துள்ளேன். இந்த திட்டம் தொடர்பாக மக்களிடம் பேசிவிட்டு மக்களின் சம்மதத்தை பெற்று செயல்படுத்த வேண்டும்.

    மேலும் எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதனை சரியாக ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும். 8 வழிச்சாலை திட்டத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுவதால் அவர்களின் கருத்தை கேட்டு அதன்படி அரசு செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்வது முறையற்ற செயல் ஆகும். காவல்துறை முதல்வரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. இது தொடர்பாக முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்டம் தோறும் அண்ணா திராவிடர் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் தேர்வு நடந்து வருகிறது. மீனவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி அண்ணா திராவிடர் கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். இதில் எனது மகன் ஜெயானந்த் கலந்து கொள்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhivakaran #MKStalin #ChennaiSalemGreenExpressWay
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கிடைத்த தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று மன்னார்குடியில் திவாகரன் கூறினார். #18MLAscase #Dhivakaran #TTVDhinakaran
    மன்னார்குடி:

    அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டில் மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளது. இனி 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு பிறகு இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும்.


    இந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோக வேண்டும் என்பது தான் தினகரனின் விருப்பம் மற்றும் முயற்சி. அந்த முயற்சி பலிக்காமல் போய் விட்டது.

    எனவே இந்த தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடியாகவே நான் கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAscase #Dhivakaran  #TTVDhinakaran
    அ.தி.முக.வை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் கிடையாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #admk #ministersellurraju

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.முக. இளைஞர்-இளம் பெண்கள் பாசறை சார்பில் மதுரை மாநகர் பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட ஜெய்ஹிந்துபுரத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமுக்கு பாசறை செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க. இளைஞர்- இளம்பெண்கள் பாசறை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இன்றைக்கு இளைஞர்களுக்கு எதிர்காலம் நம்பிக்கை எல்லாம் அ.தி. மு.கவில் மட்டுமே உள்ளது. இதனை உணர்ந்துள்ள இளைஞர்கள் திரளாக அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள்.

    1½ கோடி தொண்டர்களுடன் வலுவான இயக்கமாக அ.தி.மு.க. திகழ்ந்து வருகிறது. அ.தி.மு.க. இயக்கம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது.

    திவாகரன் இன்றைக்கு ஒரு புதிய கட்சி தொடங்கி இருக்கிறார். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே புதிய கட்சியால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க.வை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் கிடையாது. சிலர் கட்சி தொடங்கியதால் அ.தி.மு.க.வுக்கு கடுகளவு கூட இழப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #admk #ministersellurraju

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். #annadravidarparty
    திருவாரூர்:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியும் வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள பாஜக போன்ற பெரிய கட்சிகள் முதல் கமல், ரஜினி என அனைவரும் முயற்சித்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக அதிமுகவை கைப்பற்ற முயன்று தோல்வியடைந்த சசிகலாவின் சகோதரர் தினகரன் புதிய கட்சி ஒன்றை துவங்கினார். இவரது இந்த புதிய கட்சி அறிவிப்பில் அவருடன் இருந்த நாஞ்சில் சம்பத் உட்பட பலரும் அதிருப்தி அடைந்து அவரை விட்டு விலகினர்.

    அதே சமயத்தில், தினகரன் உடனிருந்த அவரது சகோதரர் திவாகரன், பல்வேறு கருத்து வேறுபாடுகளினால் தினகரனை விட்டு விலகுவதாக அறிவித்தார். மேலும், தாம் புதிய கட்சி துவங்குவதாகவும் அறிவித்தார்.

    இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், தனது கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் வெளியிட்டார்.



    அண்ணா திராவிடர் கழகம் என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளதாகவும், கட்சிக்கான கொடி கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். அதன் நடுவில் பச்சை நிறத்தில் நட்சத்திரம் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக பொதுமக்களும், அரசியல் விமர்சகர்களும் விமர்சித்து வருகின்றனர். #annaadravidarparty
    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் செயல்பாடுகள் சரியில்லை எனவும் அவர்களை அரசு பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் திவாகரன் வலியுறுத்தியுள்ளார். #SterliteProtest #Thoothukudi #Dhivakaran
    திருச்சி:

    பெரும்பிடுகு முத்தரையரின் 1343-வது சதய விழாவையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு அம்மா அணி சார்பில் திவாகரன் மாலை அணிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343-வது சதய விழாவை முன்னிட்டு அவரை போற்றும் வகையில் மாலை அணிவித்து மரியாதை செய்தோம். முத்தரையரின் சாதனைகள் போற்றப்பட வேண்டியதாகும்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் மாவட்டந்தோறும் முத்தரையரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அம்மா அணி சார்பில் நாங்கள் மரியாதை செய்கிறோம்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எப்போதோ மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இதுவரை 11 பேர் வரை பலியானதாக கூறுகிறார்கள். இந்த சம்பவம் தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நஷ்ட ஈடு தொகையை அதிகப்படுத்த வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.


    மேலும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் செயல்பாடுகள் சரியில்லை. அவர்களை தமிழக அரசு பதவி நீக்கம் செய்யவேண்டும். இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறப்படுவதால் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள நீதி விசாரணை சரியான முறையில் நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி கேட்டதற்கு, அவர் எப்போதுமே அப்படித்தான் கருத்து தெரிவிப்பார் என்றார். #SterliteProtest #Thoothukudi  #Dhivakaran

    சசிகலா எனது சகோதரி அல்ல என்றும் அவரை இனி முன்னாள் சகோதரி என்றே அழைப்பேன் எனவும் மன்னார்குடியில் திவாகரன் கூறினார் #Sasikala #TTVDhinakaran #Dhivakaran
    மன்னார்குடி:

    சசிகலா குடும்பத்தில் அவரது சகோதரர் திவாகரனுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

    தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியது குறித்து எங்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசிக்கவில்லை. மேலும் தினகரன் தன்னிச்சையாகவே செயல்படுகிறார் என்று திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் "தற்போது திவாகரன் உடல்நலக்குறைவால் உளறிக்கொண்டு இருக்கிறார். இதை யாரும் பெரிது படுத்த வேண்டாம்" என்று தினகரன் கூறினார்.

    இதனால் இருவருக்கும் இடையே மோதல் விஸ்வரூபமெடுத்ததால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே கடந்த மாதம் 29-ந் தேதி மன்னார்குடியில் திவாகரன் ‘அம்மா அணி’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

    மேலும் புதிய கட்சிக்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமிக்க போவதாகவும், சென்னை, மன்னார்குடியில் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் என்று தெரிவித்தார்.

    திவாகரனின் புது கட்சி அறிவிப்பு குறித்து பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சசிகலா தனது வக்கீல் செந்தூர் பாண்டியன் மூலம் திவாகரனுக்கு ஒரு நோட்டீசை அனுப்பினார்.

    அதில் சசிகலா பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது என்றும் எனது அக்கா, என் உடன்பிறந்த சகோதரி எனும் உரிமையை கோரி சசிகலாவை பற்றி ஊடகங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    சசிகலா வக்கீல் மூலம் கொடுத்த நோட்டீசால் திவாகரன் கடும் அதிர்ச்சி அடைந்தார். புதிய கட்சியான அம்மா அணியை தொடர்ந்து நடத்துவதா? அல்லது வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் மன்னார்குடியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று காலை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை அவர் கேட்டறிந்தார்.

    இதையடுத்து திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    சசிகலா குடும்பத்தில் இருந்து நான் விடுப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். நான் எப்போது இந்த நிலை வரும் என்று எதிர்பார்த்து இருந்தேன்.

    சசிகலாவின் தம்பி என்ற ஒரே காரணத்தால் தான் எனது வீட்டில் 2,3 முறை வருமான வரி சோதனை நடந்தது. சிறைக்கும் சென்று உள்ளேன். நான் ஆன்மீகவாதி, ஆராய்ச்சியாளர். ஆன்மீகவாதியான நான் பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி உள்ளேன். நான் நடத்தி வரும் கல்லூரியில் 4000 மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் கல்லூரியை விட்டு வெளியே செல்லும் போது நல்ல பண்புகளை பெற்று செல்கிறார்கள்.

    எங்கள் குடும்பத்தை மன்னார்குடி மாபியா கும்பல் என்று சொல்கிறார்கள். என்னால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. இனிமேல் அந்த பெயர் இருக்காது. சசிகலா எனது சகோதரி அல்ல. அவரை இனி முன்னாள் சகோதரி என்று அழைப்பேன். திவாகரன் என்ற பெயரை மட்டுமே விரும்புபவன்.

    என்னை பற்றி சசிகலாவிடம் டி.டி.வி.தினகரன் அவதூறு கூறி வருகிறார். சசிகலாவை தூண்டி விட்டு என் மூலம் பழி வாங்க நினைக்கிறார். சசிகலாவை பழிவாங்க தினகரன் துடிக்கிறார். நான் தொடங்கிய அம்மா அணி கட்சி பணி தொடரும். தவறுகளை நான் என்றும் தட்டி கேட்பேன். எங்களது கட்சியில் தீபா வந்தால் சேர்ப்பேன். அதைபோல் வேறு யாரும் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம்.

    நான் சில உண்மைகளை கூறியதால் தினகரனுக்கு கோபம் வந்தது. வெற்றிவேல் மூலம் தூண்டி விட்டார். வெற்றிவேல் காங்கிரசில் இருந்து வந்தவர்.

    தினகரன் என்னை பற்றி அவதூறாக பேசி வருகிறார். நான் மன நிலை பாதிக்கப்பட்டு பேசுவதாக கூறுகிறார். காவிரி பிரச்சனையில் நான் எவ்வளவு தெளிவாக பேட்டியில் கூறினேன் என்பது எல்லோருக்கும் தெரியும். கெட்ட எண்ணம் காரணமாக தினகரன் என்னை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.

    தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் பாதி சரியில்லாமல் உள்ளது. இதை அவர் திருத்திக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sasikala #TTVDhinakaran #Dhivakaran
    ×