search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dead inquiry commission"

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் திவாகரன் மகன் இன்று ஆஜரானார்.#Jayalailthaa
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. நேற்று ஜெயலலிதாவின் உதவியாளர்கள் பூங்குன்றன், கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்து இருந்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றதற்கான ஆதாரம் இருப்பதாக திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் கூறி இருந்தார். இதையடுத்து அவரை விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை விசாரணை ஆணையத்தில் ஜெய் ஆனந்த் ஆஜரானார். அப்போது அவர் தனது விளக்கத்தை அளித்தார். #Jayalailthaa
    ×