search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடி- திவாகரன்
    X

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடி- திவாகரன்

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கிடைத்த தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று மன்னார்குடியில் திவாகரன் கூறினார். #18MLAscase #Dhivakaran #TTVDhinakaran
    மன்னார்குடி:

    அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டில் மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளது. இனி 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு பிறகு இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும்.


    இந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோக வேண்டும் என்பது தான் தினகரனின் விருப்பம் மற்றும் முயற்சி. அந்த முயற்சி பலிக்காமல் போய் விட்டது.

    எனவே இந்த தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடியாகவே நான் கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAscase #Dhivakaran  #TTVDhinakaran
    Next Story
    ×