search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power"

    • சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
    • தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    இதனால் சேலம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.


     



    விடுமுறை நாளான நேற்று கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து சமைத்து கொண்டு வந்த ராகி கூழ், கம்மங்கூழ், மோர், சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், லெமன் சாதம், புளி சாதம் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கினர்.

    ஆடித் திருவிழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மற்றும் 11, 12ந் தேதி ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் கோவிலுக்கு விடிய, விடிய அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் வைக்கும் இடமான கோவில் பின்புறம் பக்தர்களின் வசதிக்காக தண்ணீர், அடுப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வருகிற 16ந் தேதி காலை 10.30 மணிக்கு பால்குட விழாவும், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனையும் நடக்கிறது. 

    • 10-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்.
    • ஆனையூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    மதுரை

    ஆனையூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக நாளை மறுநாள் (10-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை தினமணி நகர், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐ.ஓ.சி. நகர், வி.எம்.டபிள்யூ காலனி, ரெயிலார் காலனி, சங்கீத் நகர், சொக்கலிங்கம் நகர், கூடல்நகர் 1 முதல் 15 தெருக்கள், வானொலி நிலைய மெயின்ரோடு, செல்லையா நகர், ஆனையூர் செக்டார் (1 மற்றும் 2), ஜெ.ஜெ. நகர், சஞ்சீவி நகர், சாந்தி நகர், பாசிங்கபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாக்குடி பிரிவு, சிக்கந்தர்சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லட்சுமிபுரம், மிளகரணை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • மின் சக்தி 2047 மின்சார பெருவிழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வாயிலாக அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
    • கூட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம்' என்ற வாசகத்தோடு, மின் சக்தி 2047 மின்சார பெருவிழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வாயிலாக அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி சேலம் செயற்பொறியாளர் புஷ்பலதா முல்லைச் சந்திரன்,

    பெத்தநாயக்கன்பாளையம் உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன், ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவர் கா. அன்பழகன், மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மின்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் தரமான மின் சாதனங்களை பயன்படுத்துதல் உட்பட, பல்வேறு விழிப்புணர்வு கருத்துரைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    • துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மின்பாதையை பாராமரிக்க ஒத்துழைப்பு வழங்கும்படி மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் தச்சநல்லூர் மற்றும் தியாகராஜ நகர் துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்னேஷ் நகர், பாலாஜி அெவன்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்திஸ்வரம், இருதய நகர், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, முத்தூர், கொடிக்குளம் மற்றும் ஸ்ரீராமன்குளம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    அன்றைய தினம் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையை பாரமரிக்க ஒத்துழைப்பு வழங்கும்படி மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை, பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம் பாளையம், அம்மா பாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, மு.பு.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, பி.என்.நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • நெல்லை மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட நகர்புற கோட்டத்தில் பழையபேட்டை உப மின் நிலையம் உள்ளது.
    • மின்தடை சாதனம் நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட நகர்புற கோட்டத்தில் பழையபேட்டை உப மின் நிலையத்தில் இருந்து பேட்டை பகுதிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செல்லும் மின் பாதைக்கு உண்டான காலாவதியான 11 கிலோ வோட் மின்தடை சாதனம் மாற்றப்பட்டு புதிய மின்தடை சாதனம் நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    இப்பணியை செயற்பொறியாளர் (பொறுப்பு) ஷாஜஹான் தலைமையில் சிறப்பு பராமரிப்பு பிரிவு தாழையூத்து, மின் அளவி சோதனை பிரிவு தாழையூத்து, உப மின் நிலையம் மற்றும் பழையபேட்டை உபகோட்ட பிரிவு அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் செய்து முடிக்கப்பட்டது.

    சென்னிமலை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யபட்டுள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு, கஸ்பாபேட்டை, காசிபாளையம், எழுமாத்தூர், சிவகிரி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் ஈரோடு நகர் பகுதியான சூரம்பட்டி நால்ரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு,

    மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன்நகர், சக்திநகர், வக்கீல் தோட்டம், பெரியசேமூர், ராம்நகர், பழைய பாளையம், பெரியவலசு, பாப்பாத்தி க்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, கொத்துக்காரன்தோட்டம், 16 ரோடு, நாராயணவலசு, குமலன்குட்டை, டவர்லைன் காலனி, திருமால்நகர், அசோகபுரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்திரோடு, நேதாஜிரோடு, காந்திஜிரோடு, பெரியார் நகர், ஈ.வி.என்.ரோடு, மேட்டூர்ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இதேபோல் காசிபாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் சூரம்பட்டிவலசு, ரெயில்நகர், கே.கே.நகர், சென்னிமலைரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம்நகர், அண்ணாநகர், சேனாதிபதிபாளையம், தொழிற்பேட்டை பகுதி, காசிபாளையம், சாஸ்திரிநகர், ஜீவாநகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், காந்திஜிரோடு, ஈ.வி.என்.ரோடு, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் முதலாவது முதல் 8-வது பகுதி வரை, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பழைய ரெயில் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    கஸ்பாபேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன் பாளையம்,

    நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆண்டகோத்தாம் பாளையம், ஆனைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதிநகர், மூலப்பா ளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான் வலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    எழுமாத்தூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம் பாளையம், வே.புதூர், ஆனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, 24 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    சிவகிரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பா ளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன் கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகப்பட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம், ராக்கம்மா புதூர், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தகடை, வடக்கு புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    • புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியால் இன்று முதல் 3 நாட்கள் மின் சப்ளையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மின் சப்ளையில் ஏற்படும் சிரமங்களை பொது மக்கள் புரிந்து கூடுதல் திறன் உடைய மின்மாற்றி பொருத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பரமக்குடி

    பரமக்குடி நகர் காட்டு பரமக்குடியில் உள்ள துணை மின் நிலையம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இருந்த போதிலும் வளர்ந்து வரும் தொழில் நகரமான பரமக்குடி பகுதிக்கு மின் தட்டுப்பாடு நிலவி வந்தது.

    இதனை கருத்தில் கொண்டு மின்சார துறை சார்பில் 16 எம்.வி.ஏ திறன் கொண்ட பவர் டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணியை தற்போது தொடங்கியுள்ளது. இந்த பணி இன்று (19-ந் தேதி) முதல் வருகிற 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதையொட்டி மின் சப்ளையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் சிட்கோ பீடருக்கு காவனூர் உப மின் நிலையம் வழியாகவும், பெருமாள் கோவில், கமுதக்குடி பகுதிகளுக்கு பார்த்திபனூர் உப மின் நிலையம் வழியாகவும், எமனேஸ்வரம் பகுதிக்கு இளையான்குடி உப மின் நிலையம் வழியாகவும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    எனவே தொடர்ந்து 3 நாட்களுக்கு மின் சப்ளையில் ஏற்படும் சிரமங்களை பொது மக்கள் புரிந்து கூடுதல் திறன் உடைய மின்மாற்றி பொருத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

    இதனால் உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிடியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாம்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம்,கெத்துமுட்டி பாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம், பள்ளியூத்து, ராட்டைசுற்றிபாளையம், அவல்பூந்துறை, கனகபுரம், கவுண்டிச்சிபாளையம், செங்காட்டுவலசு, பூங்காட்டுவலசு, சென்னிமலைபாளையம், புதுப்பாளையம் மற்றும் பல்லாபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • கொடுமுடி, சிவகிரி, எழுமாத்தூர், கஸ்பாபேட்டை பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மின் வாரிய செயற்பொ–றியாளர் முத்துவேல் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    கொடுமுடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வெங்க மேடு, அரசம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், சோளக்ககாளிபாளையம், ஆவுடையார்பாறை மற்றும் நாகமநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதேபோல் சிவகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப் பாளையம், பழமங்கலம், வீர சங்கிலி, கல்லாபுரம், விலாங்காட்டு வலசு, எல்லகடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மேலப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டபாளையம், அம்மன்கோயில்,தொப்பம்பாளையம், பெரும்பரப்பு, வடுகப்பட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைகிணறு, கரட்டுப்புதூர், காட்டுபாளையம், ராக்காம்பாளையம், இச்சிப்பாளையம், முத்தையன்பாளையம், கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தகடை, வடக்குபுதுபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதேபோல் எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் எழுமாத்தூர், மண்கரடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ள பெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளை யம், ஆனந்தம்பாளையம், ஏரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி, பூந்துறை, சேமூர், மற்றும் 88 வேலம்பாளையம் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதேபோல் கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் கஸ்பா பேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன் பாளையம், செல்லம் பா–ளையம், கோவிந்த நாயக்கம்பாளையம்,

    நஞ்சை ஊத்துக்குளி, செங்காளிபாளையம், மேட்டுப்பாளையம், ஆனைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.எஸ்.ஏ.நகர் இந்தியன்நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், கவுண்டன்பாளையம், சாவடிப்பாளையம், ரகுபதி நாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • பெத்தாம்பாளையம் பகுதியில் 14-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி வரும் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெத்தாம்பாளையம், கொளத்தான் பாளையம், மூலக்கடை, செங்கோடன் பாளையம், பூச்சம்பதி, கே.ஜி.புதூர், திட்டுக்காடு, புலவர் பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், எம்.ஜி.பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    ×