search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ThangaTamilselvan"

    அதிமுக ஆட்சியை கலைக்க வாக்களிப்போம் என்று அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

    மதுரை:

    மதுரையில் இன்று அ.ம.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தான் வெற்றிபெறும். தினகரன் தலைமையில் நல்லாட்சி அமைப்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியை கலைப்போம். அதற்காக வாக்களிப்போம்.

    இது துரோகிகளின் ஆட்சி. ஊழல் ஆட்சியாக உள்ளது. ஊழலை மையமாக கொண்டு அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது.

    தி.மு.க.வோடு நாங்கள் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்? ஜெயலலிதா ஆட்சியை கலைக்க தி.மு.க. வோடு கூட்டணி வைத்தவர் தான் ஓ.பி.எஸ். பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது வருகிற 23-ந் தேதி தெரியவரும்.

    அன்றைய நாளில் தோல்வியோடு அமைச்சர்கள் காணாமல் போவார்கள். அவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மறைமுகமாக மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தேர்தல் ஆணையம் என்பது இருக்கிறதா என தெரியவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது.

    அ.தி.மு.க.வினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்சினை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதனை தடுக்க தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் குண்டர்கள் நுழைய வாய்ப்பு உள்ளது.

    தேனி தொகுதியில் மறுவாக்குபதிவு யாரும் கேட்கவில்லை. ஆனால் மறுவாக்குபதிவு நடக்கும் போது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஓபிஎஸ் மகனின் வேட்புமனுவில் பிரச்சினை இருப்பதாக ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #ADMK #ThangaTamilselvan #BJP

    தேனி:

    தேனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து எங்களுக்கு அடிக்கடி அழைப்பு வருகிறது. எங்களுடன் வந்து இணைந்து பணியாற்றுமாறு அமைச்சர்கள் பேசி வருகின்றனர். உண்மையில் அ.தி.முக.வை விட அ.ம.மு.க.வுக்குத்தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் உள்ளது. எனவே அவர்கள்தான் எங்களுடன் வந்து இணைய வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மாநில கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்கும். ஏனெனில் தேசிய கட்சிகளுக்கு மாநில நலனில் அக்கறை கிடையாது. மாநிலத்தின் உரிமைகளான முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, ஸ்டெர்லைட், நீட் தேர்வு, கச்சத்தீவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி அமைத்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஏனென்றால் இந்த 2 கட்சிகளையும் மக்கள் தூக்கி எறிவார்கள். தேர்தலில் இக்கூட்டணி படுதோல்வி அடைவது உறுதி.

    தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். ஆனால் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThangaTamilselvan #BJP

    அமமுகவை எதிர்த்து போட்டியிட்டால் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். #ThangaTamilselvan #AMMK

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் அ.ம.மு.க. சார்பில் திண்டுக்கல் மேற்கு, கிழக்கு, மாவட்ட நிர்வாகிகளுக்கான பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதிமுக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பா.ம.க., மற்றும் தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறுகின்றனர். இன்னும் தேர்தலுக்கு மே மாதம் வரை அவகாசம் உள்ளது. ஊடகங்கள் தான் இதை பெரிதுபடுத்தி காட்டுகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டத்தை பொதுமக்களை வைத்து நடத்தாமல், தி.மு.க. தொண்டர்களை வைத்து தான் நடத்தி வருகிறார்.

    அ.ம.மு.கவை அமைச்சர் ஜெயக்குமார் லெட்டர்பேடு கட்சி என்கிறார். லெட்டர்பேடு கட்சிக்கு பயந்து தான் குக்கர் சின்னத்தை நீக்க உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளனர். அ.தி.மு.க.காரர்களுக்கு திராணி இருந்தால் குக்கர் சின்னத்தை எதிர்த்து போட்டியிடட்டும். குக்கர் சின்னத்தை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிட்டால் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #AMMK

    தேசிய கட்சிகளுடன் ஓரு போதும் அ.ம.மு.க. கூட்டணி அமைக்காது என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #thangatamilselvan #bjp #parliamentelection

    ஆரணி:

    ஆரணி அடுத்த நேத்தப்பாக்கத்தில் அ.ம.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது-

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமைந்தால் 4வது இடத்திற்கு செல்லும். நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறுவார்கள்.

    தேசிய கட்சிகளுடன் ஓரு போதும் அ.ம.மு.க. கூட்டணி அமைக்காது. பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அ.ம.மு.க. தயவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. அடுத்து ஆட்சியை நிச்சயமாக பிடிக்கும் என்று கூறி வருகிறார். ஆர்.கே.நகர் இடைதேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்துள்ளது.

    ஜெயலலிதா, கருணாநிதி இறப்பிற்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தினகரன் நிரப்புவார். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு நிரந்தமான தலைவராக தினகரன் இருப்பார். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட செயலாளர் வரதன், ஆரணி தொகுதி பொறுப்பாளர் பார்த்தீபன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, நகர செயலாளர் வேலாயுதம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நேத்தப்பாக்கம் சரவணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #thangatamilselvan #bjp #parliamentelection

    ‘அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி நீக்கம், இணைப்பு ஏமாற்று வேலை’ என தங்க தமிழ்செல்வன் கூறினார். #ADMK #AMMK #ThangaTamilSelvan #OPSbrother
    தேனி:

    அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆண்டிப்பட்டியில் செயல்வீரர்கள் கூட்டம் திறந்தவெளியில் பொதுக்கூட்டம் போல் நடத்தப்பட்டது. கூட்டத்தை காட்டுவதற்காக ஊரக வேலை திட்ட பணியாளர்களை வேலை அட்டையை புதுப்பித்து தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து வந்து அமர வைக்கப்பட்டனர்.

    அந்த கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை நம்பி சென்றவர்கள் யாரும் பிழைத்ததாக சரித்திரம் இல்லை என்றார். டி.டி.வி.தினகரன் இல்லாவிட்டால், ஓ.பன்னீர்செல்வத்தால் முதல்-அமைச்சராக வந்திருக்க முடியாது.

    ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நான் இப்போது சவால் விடுகிறேன். ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்.

    மதுரையில் அ.தி.மு.க. சார்பில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா பணம் கொடுத்து தோற்கடித்து விட்டார். இதுதொடர்பாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் கொடுத்தனர். ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் விலகி விடுவோம் என கூறியதால், வேறுவழியின்றி ஓ.ராஜாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.



    இந்த அறிவிப்பு வந்த சில நாட்களில் என்ன பேரம் நடைபெற்றது என்பது தெரியவில்லை. அவரை மீண்டும் கட்சியில் இணைத்து விட்டனர். இது ஏமாற்று வேலை. தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் மரண அடி கொடுக்க தயாராகி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #AMMK #ThangaTamilSelvan
    பதவி சுகத்துக்காகவே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணை பிரியாமல் உள்ளனர் என்று அ.ம.மு.க. கொள்ளை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். #Thangatamilselvan
    திண்டுக்கல்:

    ஒட்டன்சத்திரத்தில் நடந்த அ.ம.மு.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய நிர்வாகிகள் 4 பேர் விபத்தில் சிக்கினர். அவர்கள் காயத்துடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுக்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் நாங்கள் கோர்ட்டுக்கு சென்றே அனுமதி பெற வேண்டியது உள்ளது.

    எங்கள் கட்சி கூட்டத்துக்கு சேரும் மக்களை பார்த்து தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மிரண்டு போய் உள்ளனர். அதன் காரணமாகவே பல்வேறு கெடுபிடிகளை விதித்து கூட்டம் நடத்த தடை எற்படுத்தி வருகின்றனர்.



    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1500 கோடி ஊழல் நடந்துள்ளதாக கடந்த 6 மாதத்துக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம். ஆனால் தற்போதுதான் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் அதனை கூறி வருகின்றன.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து தீர்ப்பு வரும் வரை ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முதல்வரும், துணை முதல்வரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அவர்களை பொறுத்தவரையில் மக்கள் நலன் குறித்த அக்கறை கிடையாது. பதவி சுகத்துக்காகவே ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Thangatamilselvan

    என் மீது வழக்கு போட்டு தமிழக அரசு மிரட்டி பார்க்கிறது என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.#Thangatamilselvan

    தேனி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசியதாவது:-

    எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து பேசியதற்காக என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீது செல்லமேஸ்வர் உள்பட சக நீதிபதிகள் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அவர்கள் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரப்படவில்லை.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 6 மாதம் அவகாசம் கொடுத்தும் மத்திய அரசு அமைக்கவில்லை. ஆனால் அதற்கு ஏன் அவமதிப்பு வழக்கு தொடரவில்லை.


    உள்ளாட்சி, கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய போதும் தமிழக அரசு எதையும் செய்யவில்லை. அப்போது தமிழக அரசு மீது ஏன் வழக்க தொடரவில்லை.

    ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் எம்.எல்.ஏ. இல்லாமல் அவதிப்படும் ஆதங்கத்தில் பேசியதை அவமதிப்பு என்கின்றனர்.

    தமிழக அரசு என் மீது வழக்கு போட்டு மிரட்டி பார்க்கிறது. என்னை கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னை- சேலம் 8 வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்களை அழிப்பது தேவையற்றது. சென்னை கன்னியாகுமரி சாலையை 8 வழிச்சாலையாக அமைக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார். #Thangatamilselvan

    தகுதி நீக்க வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியை நியமித்துள்ளனர். அவரை சந்தித்து தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக மனு அளிக்க உள்ளதாக தங்க தமிழிச்செல்வன் கூறினார். #thangatamilselvan

    பனைக்குளம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக்கில் உள்ள ஏ.பி.சி. திருமண மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தங்க தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கி பேசினார்.

    இதில் மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், முன்னாள் அமைச்சர்கள் வது.நடராஜன், ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் முனியசாமி, சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் ஆர்.கே. ரம்லி, நகர் செயலாளர் ரஞ்சித், திருவாடானை இரவுசேரி முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், முன்னாள் நகரசபை தலைவர் கவிதா சசிகுமார், தொகுதி பொறுப்பாளர்கள் பரமக்குடி சுப்பிரமணியன், முதுகுளத்தூர் முத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் சோமாத்தூர் சுப்பிரமணி யன், மாவட்ட இணை செயலாளர் இந்திரா மேரி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசினர்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மண்டபம் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ராமநாதபுரம் முத்தீசுவரன், போகலூர் ராஜாராம் பாண்டியன், திருப்புல்லாணி முத்துச்செல்வம், நகர் செயலாளர்கள் கீழக்கரை சுரேஷ், மண்டபம் களஞ்சியம் ராஜா உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக கூட்டத்துக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு அ.ம.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன் பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டது குறித்து பத்திரிகையில் செய்தி படித்தேன். தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து என்னுடைய உணர்வை வெளிப்படுத்தினேன். ஸ்ரீமதி என்பவர் என் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த பெண்ணை பாராட்டுகிறேன். நீதிமன்றத்தை அவமதித்ததற்காக குடிமகன் என்ற முறையில் அவர் வழக்கை தொடர்ந்து இருக்கிறார். அவரிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சகநீதிபதிகள் 4 பேர் நேரடியாக குற்றம் சாட்டி பேட்டி அளித்தனர். உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது.

    இந்த பேட்டியை அடிப்படையாக வைத்து அந்த 4 பேர் மீதும் இந்த பெண்மணி ஏன் வழக்கு தொடுக்கவில்லை. அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் வக்கீல் பதவி போய்விடும் என்ற பயமா, நான் சாதாரணமானவன் என்பதால் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறாரா, இந்த கேள்விகளை அவரிடம் கேட்க விரும்புகிறேன்.

    தகுதிநீக்க வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணாவை நியமித்துள்ளனர். அவரை சந்தித்து தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக மனு கொடுக்க இருக்கிறேன். அதை அவர் ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan 

    தங்க தமிழ்செல்வன் தனித்து விடப்படவில்லை என்று மோகனூரில் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #ttvdinakaran #thangatamilselvan #edappadipalanisamy

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் வருமாறு:-

    கேள்வி: 17 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சொல்லப்பட்டு இருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: சபாநாயகர் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது. 18 எம்.எல்.ஏ.க்களும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என அப்போது இருந்த கவர்னரிடம் மனு கொடுத்தார்கள்.

    இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது 3- வது நீதிபதி அமைத்திருக்கிறார்கள். எப்படியும் சுப்ரீம் கோர்ட்டு தான் இறுதி தீர்ப்பு வழங்க போகிறது. அதனால் தான் சுப்ரீம் கோர்ட்டுக்கே போக முடிவு எடுத்து கடந்த 21-ந்தேதி அன்று மனு தாக்கல் செய்தோம். இன்றைக்கு மனுவிசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று அதை புதன்கிழமைக்கு மாற்றி இருகிறார்கள். நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும் என காத்திருக்கிறோம்.


    கேள்வி: தங்க தமிழ்செல்வன் மட்டும் மனு தாக்கல் செய்யவில்லை. மற்றவர்கள் எல்லாம் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர் தனித்து விடப்பட்டு இருக்கிறாரா?

    பதில்: தங்க தமிழ்செல்வன் தனித்து விடப்படவில்லை. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 17 பேர் சபாநாயகர் தீர்ப்பு தவறு என்பதை சட்ட ரீதியாக நிருபிப்பதற்காக போராடுகிறோம். சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று இருக்கிறோம்.

    இதில் நம்பிக்கை இல்லை என்று ஒரு வாரத்திற்கு முன்பாகவே தங்க தமிழ்செல்வன் சொன்னார். மனுவை திரும்ப பெற போகிறேன். தேர்தல் வரட்டும் சந்திக்கிறேன் என்று சொன்னார். என்னுடைய அனுமதி பெற்றுத்தான் செய்கிறார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லோருக்கும் தெரியும்.

    கேள்வி: நீதிமன்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் தலையீடு இருக்கிறதா?

    பதில்: அதெல்லாம் காலம் உங்களுக்கு நிருபிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ttvdinakaran #thangatamilselvan #edappadipalanisamy

    தேர்தலில் என்னை நிற்கவிடாமல் தமிழக அரசு சதி செய்ய வாய்ப்பு உள்ளதாக தங்க தமிழ்செல்வன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ThangaTamilSelvan #Elecetion

    ஆண்டிப்பட்டி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டி வந்தார். அவர் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி- எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விசாரணை செய்ய 3-வது நீதிபதி நியமிக்கப்பட்ட பின்னர், உங்களை தவிர்த்து 17 எம்.எல்.ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உங்கள் நிலைப்பாடு என்ன?

    நான் வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன். மீதமுள்ள 17 பேரும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றதுதான் சரி. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் இந்த விசாரணை செய்தால் நிச்சயமாக எங்களுக்கு சாதகமாக தீர்ப்புவராது. அதனால் தான் வேறு மாநிலத்திற்கு விசாரணை மாற்ற கேட்டு உள்ளனர். அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சீக்கிரமாக தீர்ப்பை வழங்கினால் தொகுதி மக்களுக்கு நல்லது நடக்கும். 17 பேர் செல்லும் பாதை சரி. அதேபோல நான் செல்லும் பாதையும் சரி.

    கேள்வி- மனுவை வாபஸ் பெறுவதில் பொறுமை காக்க வேண்டியுள்ளது என்று நீங்கள் கூறியுள்ளீர்களே?

    மனுவை வாபஸ் வாங்குவதில் பொறுமை காக்க வேண்டும் என்று கூறவில்லை. அதில் 4 விதமான சிக்கல்கள் உள்ளது. 2 நீதிபதிகள் அமர்வில் மனுவை வாபஸ் வாங்குவதா? அல்லது 3 வது நீதிபதியிடம் வாபஸ் வாங்குவதா? ஒருவேளை மனுவாபஸ் பெறப்பட்டால் ஆண்டிப்பட்டி தொகுதி காலியாக உள்ளதாக உடனடியாக அறிவிக்கப்படுமா? அப்படியே அறிவித்தாலும் உடனடியாக தேர்தல் வராது.

    பாராளுமன்ற தேர்தலோடு தான் தேர்தல் நடக்கும் என்றும் கூறுகின்றனர். தற்போதைய கோர்ட்டு உத்தரவின்படி நான் தேர்தலில் நிற்க முடியும். ஆனால் என்னை தேர்தலில் நிற்கவிடாமல் அரசு தடுப்பதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் என் வேட்புமனுவை தள்ளுபடி செய்யவும் வாய்ப்புள்ளது. அதனால் என்னுடைய மனுவை வாபஸ் வாங்கும் நடவடிக்கையில் கொஞ்சம் அவகாசம் தேவை.


    இதுகுறித்து வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன்.

    கேள்வி- தமிழகத்தில் ஆய்வு பணியில் ஈடுபடும் கவர்னரை தடுத்தால் 7 ஆண்டு சிறை அபராதம் விதிப்பதாக கவர்னர் மாளிகை அறிக்கை விடுத்துள்ளதே?

    இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இவ்வளவு அதிகாரம் இருந்தால், இந்தியாவை ஆள்பவர்களுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும்? மத்தியில் இருப்பவர்களும், மாநிலத்தில் இருப்பவர்களும் மக்களை அடக்கி ஆள முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.

    கவர்னர் ஆய்வு செய்யட்டும் அதில் எங்களுக்கு எந்த தவறும் இல்லை. ஆனால் அதேபோல பசுமை சாலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகள் நடைபெற்ற போது ஏன் மக்களை சந்திக்கவில்லை. ஆய்வு யார் வேண்டுமானாலும் நடத்தலாம். இதேபோல அடக்கு முறை தொடர்ந்தால் வரும் தேர்தலில் மக்கள் இந்த அரசுகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

    கேள்வி-கவர்னர் ஆய்வினால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, மாறாக எங்கள் பணியைதான் அவர் எளிதாக்குகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

    கவர்னர் ஆய்வு நடத்துவதால் எந்த பணி அரசு எளிதாகியுள்ளது என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். ஜெயக்குமார் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். தமிழக அரசு அமைச்சர் ஜெயக்குமாரை பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு அடிபணிந்த அரசு தான் இது என்பதை நிரூபித்து வருகின்றனர்.

    கேள்வி- சமீபகாலகமாக உங்களுக்கும், உங்கள் அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்துவேறுபாடு இருப்பதாக செய்திகள் வருகிறதே?

    இனிவரும் காலங்களில் எல்லாம் வெளிப்படைத்தன்மையாக தான் நடக்க வேண்டும். அந்த வகையில் எங்களின் கருத்து சுதந்திரத்திற்கு எங்கள் துணை பொது செயலாளர் வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த வகையில் நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியதற்கு உடனடியாக சரி என்றார். ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக இருக்கிறோம். அதைத்தான் மக்களும் விரும்புகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan #Elecetion

    தினகரன் தலைமையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். யாரும் பிளவுபடுத்த முடியாது என்று பிரவு எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #dinakaran

    கள்ளக்குறிச்சி:

    தினகரன் அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான பிரபுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் தலைமையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்.

    இந்த அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடையே பிளவு படுத்த யார் நினைத்தாலும் அது முடியாது. தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் போல் இருந்து வருகிறோம். தமிழக மக்களுக்காக பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran 

    அரசு நெருக்கடியால் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வராது என கருதுவதாக தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார். #thangatamilselvan #edappadipalanisamy

    திண்டுக்கல்:

    டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் குறித்த சபாநாயகரின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. 3-வது நீதிபதி இவ்வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பை வழங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான தங்கதமிழ்செல்வன் வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறுவதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில் 3-வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வராது. அரசு சொல்வதைதாத்தான் நீதிமன்றம் கேட்கும் நிலையில் உள்ளது.

    எனவே நீதி கிடைக்காது என்ற நம்பிக்கையால் நீதிமன்றத்தின் நடவடிக்கையை நாட விரும்பவில்லை. என்னால் தொகுதி பக்கம் செல்ல முடியவில்லை. கடந்த 9 மாதமாக என் தொகுதி மக்களுக்காக எந்தவித அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியவில்லை. எனவே வழக்கை வாபஸ் பெறுவதன் மூலம் இடைத்தேர்தல் வரட்டும். அதில் நிரந்தரமான எம்.எல்.ஏ. வந்து தொகுதி மக்களுக்கு தேவையான பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும்.

    எனது இந்த முடிவு என்னுடைய தனிப்பட்ட முடிவுதான். தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற எம்.எல்.ஏ.க்களின் கருத்து என்ன என்பது எனக்கு தெரியாது.

    வழக்கை வாபஸ் பெற்றாலும் நான் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் அணியில்தான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தங்கத்துரை (நிலக்கோட்டை தனி):-

    தங்கதமிழ்செல்வனின் முடிவு அவரது சொந்த விருப்பம். பதவி நீக்கம்தொடர்பாக 18 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக ஐகோர்ட்டில் மனுக்கள் அளித்து உள்ளோம். அதில் தங்கதமிழ்செல்வம் மட்டுமே வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளார். மற்ற 17 பேரும் டி.டி.வி. தினகரன் சொல்படி நடந்து வருகிறோம்.

    வழக்கை வாபஸ் பெற்றாலும் அவரும் எங்கள் அணியில்தான் உள்ளார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் யாருக்கு இல்லை.

    அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் மீதான தீர்ப்பு விரைவில் வந்தது. ஆனால் எங்களது வழக்கு இத்தனை காலம் தாமதம் ஆகி உள்ளது. அதுவும் மாறுபட்ட தீர்ப்பாக அமைந்து உள்ளதால் 3-வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பாவது நல்லதாக நடக்கும் என்று நம்புகிறோம்.

    கதிர்காமு(பெரியகுளம்):-

    நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் அணிக்கும், பெரியகுளம் தொகுதி மக்களுக்கும் ஏமாற்றமாக அமைந்து உள்ளது. நான் கடந்த பல ஆண்டுகளாக இதே தொகுதியில் மருத்துவ சேவை ஆற்றி வருகிறேன். சட்டமும் படித்து உள்ளேன். நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க கூடாது என்றாலும் தற்போது அளிக்கப்பட்டு உள்ளதீர்ப்பு பெரும் விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டது.3-வது நீதிபதி நல்ல தீர்ப்பை வழங்குவார் என நம்புகிறோம். தொடர்ந்து இந்த தொகுதி மக்களுக்கு சேவையாற்றவே விரும்புகிறேன். தங்கதமிழ்செல்வன் முடிவு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. #thangatamilselvan #edappadipalanisamy

    ×