search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன் அணியை யாரும் பிளவுபடுத்த முடியாது: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு பேட்டி
    X

    தினகரன் அணியை யாரும் பிளவுபடுத்த முடியாது: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு பேட்டி

    தினகரன் தலைமையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். யாரும் பிளவுபடுத்த முடியாது என்று பிரவு எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #dinakaran

    கள்ளக்குறிச்சி:

    தினகரன் அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான பிரபுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் தலைமையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்.

    இந்த அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடையே பிளவு படுத்த யார் நினைத்தாலும் அது முடியாது. தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் போல் இருந்து வருகிறோம். தமிழக மக்களுக்காக பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran 

    Next Story
    ×