search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallakurichi MLA Prabhu"

    ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை வீழ்த்த துணைபோக மாட்டேன் என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தெரிவித்தார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

    இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகர் விளக்க நோட்டீஸ் மீதான நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றனர்.

    இந்த நிலையில் சமீபத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. 13 இடங்களிலும், அ.தி.மு.க. 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக உயர்ந்து ஆட்சியை காப்பாற்றி உள்ளது. அது போல் தி.மு.க. கூட்டணி கட்சியின் பலம் 110 ஆனது.

    இவர்களில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து தி.மு.க. கூட்டணியின் பலம் 109 ஆகும்.

    தி.மு.க. சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக கருதப்படும் பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி மற்றும் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க. முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நான் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராகத்தான் உள்ளேன். நான் அ.தி.மு.க. தொண்டன்தான். நான் எப்போதும் அம்மாவின் விசுவாசிதான். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் நான் அ.தி.மு.க.வின் கொறடா உத்தரவு படிதான் செயல்படுவேன்.


    ஜெயலலிதா உருவாக்கிய அ.தி.மு.க. ஆட்சியை விழ்த்த நான் துணைபோக மாட்டேன். எனக்கும் மாவட்ட செயலாளராக இருக்கும் குமரகுருவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் நான் ஒதுங்கியே இருக்கிறேன்.

    தற்போது நடந்து முடிந்து உள்ள பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு காரணம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமரகுருதான். அ.தி.மு.க. தொண்டர்களை அவர் சரியாக வழிநடத்தவில்லை. இதன் காரணமாக தி.மு.க. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

    இனிமேலாவது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க. வெற்றிபெற முடியும். கட்சி தலைமையில் உள்ளவர்கள் இனியாவது தொண்டர்கள் விருப்பப்படி செயல்படவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தினகரன் தலைமையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். யாரும் பிளவுபடுத்த முடியாது என்று பிரவு எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #dinakaran

    கள்ளக்குறிச்சி:

    தினகரன் அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான பிரபுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் தலைமையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்.

    இந்த அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடையே பிளவு படுத்த யார் நினைத்தாலும் அது முடியாது. தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் போல் இருந்து வருகிறோம். தமிழக மக்களுக்காக பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran 

    ×