என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அமமுகவை எதிர்த்து போட்டியிட்டால் அதிமுக டெபாசிட் இழக்கும் - தங்கதமிழ்செல்வன்
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் அ.ம.மு.க. சார்பில் திண்டுக்கல் மேற்கு, கிழக்கு, மாவட்ட நிர்வாகிகளுக்கான பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிமுக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பா.ம.க., மற்றும் தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறுகின்றனர். இன்னும் தேர்தலுக்கு மே மாதம் வரை அவகாசம் உள்ளது. ஊடகங்கள் தான் இதை பெரிதுபடுத்தி காட்டுகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டத்தை பொதுமக்களை வைத்து நடத்தாமல், தி.மு.க. தொண்டர்களை வைத்து தான் நடத்தி வருகிறார்.
அ.ம.மு.கவை அமைச்சர் ஜெயக்குமார் லெட்டர்பேடு கட்சி என்கிறார். லெட்டர்பேடு கட்சிக்கு பயந்து தான் குக்கர் சின்னத்தை நீக்க உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளனர். அ.தி.மு.க.காரர்களுக்கு திராணி இருந்தால் குக்கர் சின்னத்தை எதிர்த்து போட்டியிடட்டும். குக்கர் சின்னத்தை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிட்டால் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #AMMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்