search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க தமிழ்செல்வன் தனித்து விடப்படவில்லை: டி.டி.வி.தினகரன் பேட்டி
    X

    தங்க தமிழ்செல்வன் தனித்து விடப்படவில்லை: டி.டி.வி.தினகரன் பேட்டி

    தங்க தமிழ்செல்வன் தனித்து விடப்படவில்லை என்று மோகனூரில் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #ttvdinakaran #thangatamilselvan #edappadipalanisamy

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் வருமாறு:-

    கேள்வி: 17 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சொல்லப்பட்டு இருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: சபாநாயகர் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது. 18 எம்.எல்.ஏ.க்களும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என அப்போது இருந்த கவர்னரிடம் மனு கொடுத்தார்கள்.

    இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது 3- வது நீதிபதி அமைத்திருக்கிறார்கள். எப்படியும் சுப்ரீம் கோர்ட்டு தான் இறுதி தீர்ப்பு வழங்க போகிறது. அதனால் தான் சுப்ரீம் கோர்ட்டுக்கே போக முடிவு எடுத்து கடந்த 21-ந்தேதி அன்று மனு தாக்கல் செய்தோம். இன்றைக்கு மனுவிசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று அதை புதன்கிழமைக்கு மாற்றி இருகிறார்கள். நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும் என காத்திருக்கிறோம்.


    கேள்வி: தங்க தமிழ்செல்வன் மட்டும் மனு தாக்கல் செய்யவில்லை. மற்றவர்கள் எல்லாம் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர் தனித்து விடப்பட்டு இருக்கிறாரா?

    பதில்: தங்க தமிழ்செல்வன் தனித்து விடப்படவில்லை. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 17 பேர் சபாநாயகர் தீர்ப்பு தவறு என்பதை சட்ட ரீதியாக நிருபிப்பதற்காக போராடுகிறோம். சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று இருக்கிறோம்.

    இதில் நம்பிக்கை இல்லை என்று ஒரு வாரத்திற்கு முன்பாகவே தங்க தமிழ்செல்வன் சொன்னார். மனுவை திரும்ப பெற போகிறேன். தேர்தல் வரட்டும் சந்திக்கிறேன் என்று சொன்னார். என்னுடைய அனுமதி பெற்றுத்தான் செய்கிறார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லோருக்கும் தெரியும்.

    கேள்வி: நீதிமன்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் தலையீடு இருக்கிறதா?

    பதில்: அதெல்லாம் காலம் உங்களுக்கு நிருபிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ttvdinakaran #thangatamilselvan #edappadipalanisamy

    Next Story
    ×