search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கதமிழ்செல்வன்"

    தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தங்கதமிழ்செல்வன் உள்பட அவரது கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #ThangaTamilSelvan
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பறக்கும்படை அதிகாரியாக இருப்பவர் நாகரத்தினம். இவர் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அனுமதியின்றி அதிக வாகனங்களில் ஒன்று கூடி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

    அதன் பேரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதேபோல் போடியில் அதிக வாகனங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வேட்பாளர் தங்கதமிழ் செல்வன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #ThangaTamilSelvan
    அமமுகவை எதிர்த்து போட்டியிட்டால் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். #ThangaTamilselvan #AMMK

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் அ.ம.மு.க. சார்பில் திண்டுக்கல் மேற்கு, கிழக்கு, மாவட்ட நிர்வாகிகளுக்கான பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதிமுக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பா.ம.க., மற்றும் தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறுகின்றனர். இன்னும் தேர்தலுக்கு மே மாதம் வரை அவகாசம் உள்ளது. ஊடகங்கள் தான் இதை பெரிதுபடுத்தி காட்டுகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டத்தை பொதுமக்களை வைத்து நடத்தாமல், தி.மு.க. தொண்டர்களை வைத்து தான் நடத்தி வருகிறார்.

    அ.ம.மு.கவை அமைச்சர் ஜெயக்குமார் லெட்டர்பேடு கட்சி என்கிறார். லெட்டர்பேடு கட்சிக்கு பயந்து தான் குக்கர் சின்னத்தை நீக்க உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளனர். அ.தி.மு.க.காரர்களுக்கு திராணி இருந்தால் குக்கர் சின்னத்தை எதிர்த்து போட்டியிடட்டும். குக்கர் சின்னத்தை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிட்டால் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #AMMK

    ஜெயலலிதா மரணத்துக்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என்று தங்கதமிழ்செல்வன் மற்றும் புகழேந்தி கூட்டாக தெரிவித்தனர். #ThangaTamilSelvan #Pugalenthi #OPS
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமி‌ஷன் தமிழக துணை முதல்வரை விசாரணைக்கு அழைக்க பயப்படுகிறது . ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது எனக் கூறிய ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை கமி‌ஷன் இதுவரை அதற்கான ஆதாரத்தை ஏன் கேட்கவில்லை. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்களை விசாரணைக் கமி‌ஷன் ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை. இவர்களை உடனடியாக விசாரிக்கா விட்டால் ஆறுமுகசாமி கமி‌ஷனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். ஜெயலலிதா மரணத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம்.



    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டு எடப்பாடி அரசு பயப்படுகிறது. எச்.ராஜா காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றி அவதூறாக பேசினார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த பின்பும் போலீஸ் துணையுடன் பொதுக்கூட்டத்திற்கு வருகை தருகிறார். அவரை கைது செய்யாமல் தமிழக அரசு ஏன் மவுனம் காத்து வருகிறது? அரசை மக்கள் கேவலமாக பார்க்க மாட்டார்களா அ.தி.மு.க. அரசை மக்கள் கூடிய விரைவில் தூக்கி எறிவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #ThangaTamilSelvan #Pugalenthi #OPS

    வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றதால் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் கூறினார். #ThangaTamilSelvan #Vijayabaskar #CBIRaid
    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கொள்கை பரப்புச்செயலாளர் தங்க தமிழ்செல்வன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்க தயாராக உள்ளோம். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ வரும் என நினைக்கவில்லை. உண்மையின் பக்கமாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.



    அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் வீடுகள் உள்பட 40 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றிருப்பது தமிழகத்திற்கு தலைக்குனிவான செயலாகும்.

    ரெயில் விபத்து ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு ஏற்று அந்த துறையின் அமைச்சர் ராஜினாமா செய்வது வழக்கம்.

    அதே போல் ரூ. 40 கோடி லஞ்சம் பெற்றதாக ஊழல் புகார் கூறப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும். தன் மீதான வழக்கை சட்டப்படியாக சந்தித்து கோர்ட்டில் நிரபராதி என நிரூபித்து மீண்டும் அவர் அமைச்சர் பதவி ஏற்கலாம். இது தான் நடைமுறை.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan #Vijayabaskar #CBIRaid

    பதவி சுகத்துக்காகவே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணை பிரியாமல் உள்ளனர் என்று அ.ம.மு.க. கொள்ளை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். #Thangatamilselvan
    திண்டுக்கல்:

    ஒட்டன்சத்திரத்தில் நடந்த அ.ம.மு.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய நிர்வாகிகள் 4 பேர் விபத்தில் சிக்கினர். அவர்கள் காயத்துடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுக்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் நாங்கள் கோர்ட்டுக்கு சென்றே அனுமதி பெற வேண்டியது உள்ளது.

    எங்கள் கட்சி கூட்டத்துக்கு சேரும் மக்களை பார்த்து தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மிரண்டு போய் உள்ளனர். அதன் காரணமாகவே பல்வேறு கெடுபிடிகளை விதித்து கூட்டம் நடத்த தடை எற்படுத்தி வருகின்றனர்.



    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1500 கோடி ஊழல் நடந்துள்ளதாக கடந்த 6 மாதத்துக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம். ஆனால் தற்போதுதான் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் அதனை கூறி வருகின்றன.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து தீர்ப்பு வரும் வரை ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முதல்வரும், துணை முதல்வரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அவர்களை பொறுத்தவரையில் மக்கள் நலன் குறித்த அக்கறை கிடையாது. பதவி சுகத்துக்காகவே ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Thangatamilselvan

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை தேவையில்லை, மிகப்பெரிய போராட்டத்தை மக்கள் நடத்தினால் அரசு தாங்காது என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.
    தேனி:

    தேனி பழனிசெட்டிபட்டியில் அ.ம.மு.க.வின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட தங்கதமிழ்செல்வன் கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு, 6 மாத அவகாசம் கொடுத்தது. மத்திய அரசு அதை செய்யவில்லையே, அது அவமதிப்பு இல்லையா? தமிழக அரசு கூட்டுறவு தேர்தலை நடத்த வேண்டுமென மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை சொல்லி இருக்கின்றன. ஆனால் தேர்தல் நடத்தவில்லை, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டியது தானே. ஏன் கொடுக்கவில்லை?

    உள்ளாட்சி தேர்தலும் நடத்தவில்லை. எல்லாவற்றிலும் கோர்ட்டை அவமதிக்கிறார்கள். நான் எனது தொகுதியில் எம்.எல்.ஏ. இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற ஆதங்கத்தில் கருத்து தெரிவித்தேன். அதற்கு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடுத்து உள்ளார்கள். அந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். வழக்கு போட்டு என்னை மிரட்டிப்பார்க்கிறார்கள். என்னை கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை இப்போதைக்கு தேவையில்லை என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுத வேண்டும். மக்களின் கருத்தை கேட்டு நாங்கள் சொன்னபிறகு சாலை போடலாம் என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமியை நான் பாராட்டுவேன். அதை விட்டுவிட்டு பிடிவாதமாக செய்தால் மிகப்பெரிய போராட்டத்தை மக்கள் நடத்துவார்கள். இந்த அரசு தாங்காது. மக்களை கண்ணீர் வடிக்க வைத்து, விவசாயிகளை வேதனைப்படுத்தும் இந்த திட்டமே தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரளாவை சேர்ந்த சரிதா நாயர் அ.ம.மு.க.வில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘எனக்கு தெரிந்து அப்படி ஒரு தகவல் இல்லை. ஊடகங்களில், பத்திரிகைகளில் தான் இதுகுறித்த படத்தை பார்த்தேன். அது தவறான செய்தி’ என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.
    ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இருக்கும் அணிக்கு நான் ஒருபோதும் செல்லமாட்டேன் என்று ஆண்டிப்பட்டி தொகுதியில் மக்களை சந்தித்து கருத்து கேட்டபோது தங்கதமிழ்செல்வன் கூறினார். #thangatamilselvan #OPS #EPS
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி தொகுதியில் மக்களை சந்தித்து கருத்து கேட்ட தங்கதமிழ்செல்வன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் மட்டுமின்றி மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே நான் ஏற்கனவே கூறியபடி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவது உறுதி. இன்று நான் சென்னைக்கு சென்று மூத்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி அதற்கான முடிவுகளை ஆண்டிப்பட்டி தொகுதி மக்களிடம் அறிவிப்பேன்.

    என்னை பொறுத்தவரையில் ஆண்டிப்பட்டியில் மக்கள் பிரச்சினையை தீர்க்க சட்டமன்ற உறுப்பினர் வரவேண்டும். நான் வழக்கை வாபஸ் பெற்றவுடன் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையெனில் 3 லட்சம் மக்களை திரட்டி சிறைநிரப்பும் போராட்டம் நடத்துவேன்.



    வழக்கை வாபஸ் பெறுவதாகவும், நாடகம் ஆடுவதாகவும் சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். ஆனால் நாடகம் நடத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். இருக்கும் அணிக்கு நான் ஒருபோதும் செல்லமாட்டேன். நான் மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் கூறி வருகிறார்கள். எனவே அது குறித்த முடிவினை தேர்தல் நேரத்தில் அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #OPS #EPS
    ஆண்டிப்பட்டி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #ThangaTamilselvan #AMMK
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தின் மீது 100 சதவீத நம்பிக்கை உள்ளது என்று கூறிய நீங்கள் தற்போது வழக்கை வாபஸ் பெறுவது எதற்கு?

    பதில்:-நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எந்த தப்பும் செய்யாத எங்களுக்கு அநீதி கிடைக்கிறது. அரசுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீதி கிடைக்கிறது. இது மாறுபட்ட தீர்ப்பு. நீதிமன்றங்கள் மத்திய, மாநில அரசின் சொல்படிதான் செயல்படுகின்றன. நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தி ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்யுங்கள்.

    கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் மனம் திருந்தி வந்ததால்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியது குறித்து?

    பதில்:- துணை சபாநாயகராக அவரை நியமனம் செய்ததே தவறு. நல்ல திறமையானவர்களை மட்டுமே துணை சபாநாயகராக நியமிக்க வேண்டும். கட்சி தாவல் சட்டத்தில் மனம் திருந்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. மனம் திருந்தியதால் ஏற்றுக்கொள்கிறோம் என்றால் அவர் என்ன கடவுளா? பொள்ளாச்சி ஜெயராமனின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    கேள்வி:- தற்போது நீங்கள் எடுத்துள்ள முடிவு ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

    பதில்:- நான் இப்போது கூட ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று வருகிறேன். என்னை கண்ட மக்கள் நீங்கள் எடுத்த முடிவு சரியானது என்று பாராட்டுகின்றனர். எங்களுக்கு உடனடியாக ஒரு எம்.எல்.ஏ. வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மக்கள் எத்தனை நாளைக்கு எம்.எல்.ஏ. இல்லாமல் இருப்பார்கள்? ஆண்டிப்பட்டி தொகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவே அந்த பிரச்சினைகளை தீர்க்க கண்டிப்பாக ஒரு எம்.எல்.ஏ. வேண்டும். எனவே வேகமாக இடைத்தேர்தலை நடத்தி யாரையாவது ஒருவரை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்ய வேண்டும்.

    கேள்வி:- தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட முடியாது என மூத்த வழக்கறிஞர் விஜயன் கூறியுள்ளாரே?

    பதில்:- தற்போது உள்ள அரசின் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. எனவே ஆண்டிப்பட்டி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை. எனவே என் தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்து கொடுங்கள்.

    கேள்வி:- வழக்கை வாபஸ் வாங்கும் அறிவிப்பில் உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை?

    பதில்:- வக்கீல்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு சொல்கிறேன்.

    கேள்வி:- டி.டி.வி.தினகரன் அணியில் இருக்கும் நீங்கள் உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு மாற திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வருகிறதே?

    பதில்:- இல்லை. அதெல்லாம் வெறும் வதந்தி. 18 பேரும் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பக்கமே இருக்கிறோம். நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காது என்று கருதியதால், நான் தொடர்ந்த வழக்கை வாபஸ் செய்வதோடு, எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். இதுகுறித்து எங்கள் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் கூறிவிட்டு, அவர் ஒப்புதல் அளித்தவுடன்தான் இந்த நடவடிக்கையை நான் மேற்கொண்டேன்.

    இவ்வாறு தங்கதமிழ்செல்வன் கூறினார். #ThangaTamilselvan #AMMK
    அரசு நெருக்கடியால் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வராது என கருதுவதாக தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார். #thangatamilselvan #edappadipalanisamy

    திண்டுக்கல்:

    டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் குறித்த சபாநாயகரின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. 3-வது நீதிபதி இவ்வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பை வழங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான தங்கதமிழ்செல்வன் வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறுவதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில் 3-வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வராது. அரசு சொல்வதைதாத்தான் நீதிமன்றம் கேட்கும் நிலையில் உள்ளது.

    எனவே நீதி கிடைக்காது என்ற நம்பிக்கையால் நீதிமன்றத்தின் நடவடிக்கையை நாட விரும்பவில்லை. என்னால் தொகுதி பக்கம் செல்ல முடியவில்லை. கடந்த 9 மாதமாக என் தொகுதி மக்களுக்காக எந்தவித அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியவில்லை. எனவே வழக்கை வாபஸ் பெறுவதன் மூலம் இடைத்தேர்தல் வரட்டும். அதில் நிரந்தரமான எம்.எல்.ஏ. வந்து தொகுதி மக்களுக்கு தேவையான பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும்.

    எனது இந்த முடிவு என்னுடைய தனிப்பட்ட முடிவுதான். தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற எம்.எல்.ஏ.க்களின் கருத்து என்ன என்பது எனக்கு தெரியாது.

    வழக்கை வாபஸ் பெற்றாலும் நான் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் அணியில்தான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தங்கத்துரை (நிலக்கோட்டை தனி):-

    தங்கதமிழ்செல்வனின் முடிவு அவரது சொந்த விருப்பம். பதவி நீக்கம்தொடர்பாக 18 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக ஐகோர்ட்டில் மனுக்கள் அளித்து உள்ளோம். அதில் தங்கதமிழ்செல்வம் மட்டுமே வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளார். மற்ற 17 பேரும் டி.டி.வி. தினகரன் சொல்படி நடந்து வருகிறோம்.

    வழக்கை வாபஸ் பெற்றாலும் அவரும் எங்கள் அணியில்தான் உள்ளார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் யாருக்கு இல்லை.

    அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் மீதான தீர்ப்பு விரைவில் வந்தது. ஆனால் எங்களது வழக்கு இத்தனை காலம் தாமதம் ஆகி உள்ளது. அதுவும் மாறுபட்ட தீர்ப்பாக அமைந்து உள்ளதால் 3-வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பாவது நல்லதாக நடக்கும் என்று நம்புகிறோம்.

    கதிர்காமு(பெரியகுளம்):-

    நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் அணிக்கும், பெரியகுளம் தொகுதி மக்களுக்கும் ஏமாற்றமாக அமைந்து உள்ளது. நான் கடந்த பல ஆண்டுகளாக இதே தொகுதியில் மருத்துவ சேவை ஆற்றி வருகிறேன். சட்டமும் படித்து உள்ளேன். நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க கூடாது என்றாலும் தற்போது அளிக்கப்பட்டு உள்ளதீர்ப்பு பெரும் விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டது.3-வது நீதிபதி நல்ல தீர்ப்பை வழங்குவார் என நம்புகிறோம். தொடர்ந்து இந்த தொகுதி மக்களுக்கு சேவையாற்றவே விரும்புகிறேன். தங்கதமிழ்செல்வன் முடிவு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. #thangatamilselvan #edappadipalanisamy

    நடிகர் கமல்ஹாசனுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைப்பது குறித்து காலம் முடிவு செய்யும் என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார். #TTVDhinakaran #ThangaTamilSelvan #KamalHaasan

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆறுதல் கூறினார். அதன் பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடைக்கானலில் நடந்த கோடை விழாவின் போது அமைச்சர் சீனிவாசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்து வணங்கியுள்ளார். முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் முதுகெலும்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக யார் காலில் விழுவதைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. தமிழக அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருவதாக முதல்வரும், துணை முதல்வரும் பேசியுள்ளனர்.

    மத்திய பா.ஜ.க. அரசிடம் தமிழக நலன்களை அடகு வைக்கவும் துணிந்து விட்டனர். காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுக்குமே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அக்கறை கிடையாது.

    ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பிடிப்பார் என்று உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளதாம். சமுக வலைதளங்களில் பரவும் செய்திகளை வைத்து யாரும் கனவு காண முடியாது. டி.டி.வி. தினகரன் முதல்வர் ஆவார் என்று முன்பே சமூக வலைதளங்களில் வெளியானது.


    ஆனால் அதனை நாங்கள் பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் தீவிரம் காட்டியதால்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் அமோக வெற்றி பெற முடிந்தது. இந்த வெற்றி மேலும் தொடரும். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடித்து உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பதை மக்களுக்கு நிரூபிப்போம்.

    நடிகர் கமல்ஹாசனின் விவசாயிகள் கோரிக்கை குறித்த மாநாட்டில் டி.டி.வி. தினகரன் பங்கேற்றார். இந்த கூட்டணி தொடருமா? என்று இப்போது சொல்ல முடியாது. மக்கள் நலன் காக்கும் விவசாயிகளை பாதுகாக்கும் கூட்டணியில் அவரும் நாங்களும் எதிர்காலத்தில் இணைந்தாலும் வியப்பில்லை.

    கோவா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் குறைந்த இடங்களை பிடித்த போதும் பா.ஜ.க. தனது அரசை அம்மாநிலங்களில் ஆட்சியில் அமர்த்தியது. ஆனால் கர்நாடகாவில் அவர்களது சூழ்ச்சியை முறியடித்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியை பிடித்துள்ளது.

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை காவிரி தண்ணீர் தர மாட்டோம் என பிடிவாதமாக கூறி வந்தனர். தற்போது மீண்டும் அந்த கூட்டணிதான் ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளபடி ஆணையத்தை விரைவாக அமைத்து காவிரி நீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TTVDhinakaran #ThangaTamilSelvan #KamalHaasan

    ×