search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Onion"

    • வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஏற்றுமதி வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது. வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பண்டிகை காலம் என்பதால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது

    இந்நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

    உள்நாட்டில் வெங்காய விநியோகத்தை மேம்படுத்துவதற்காகவும் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி வரி விதிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

    • குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்
    • சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    குண்டடம்:

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதியாகும். இதனால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்டபகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்

    இது குறித்து மேட்டுக்கடையை சேர்ந்த ஒரு விவசாயி கூறியதாவது;-

    குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம்.

    இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களைஅதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 75 ஆயிரம் வரை செலவாகிறது.

    இந்தநிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடையை தீவிரமாக செய்துவருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே அதிக விலைக்கு விற்பனையானதால் இப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக சின்ன வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சின்ன வெங்காயம் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்து ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கடந்த சீசனில் பெறும் நஷ்டம் அடைந்தனர்.

    நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை என்றாலும் குறைந்த அளவு விவசாயிகள் சின்ன வெங்காயத்தை தற்போது அறுவடை செய்து கொண்டனர்.

    அவர்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • இன்று தக்காளி விலை ரூ.4 குறைந்து ரூ.120-க்கு உழவர் சந்தைகளில் விற்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது.

    வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தாகவும், உள்ளூர் தக்காளி வரத்து முற்றிலுமாக நின்று விட்டதாகவும், அதன் காரணமாகவே விலை ஏற்றம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தக்காளி, சின்ன வெங்காயம் உள்பட காய்கறிகளின் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.140 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் உழவர் சந்தைகளில் ரூ.110 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று ரூ.12 அதிகரித்து ரூ.124-க்கு விற்பனையானது.

    ஆனால் இன்று தக்காளி விலை ரூ.4 குறைந்து ரூ.120-க்கு உழவர் சந்தைகளில் விற்கப்பட்டது. அதேபோல் பாளை மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 முதல் ரூ.135 வரை விற்பனையானது. மேலும் மார்க்கெட்டில் இன்று காலை சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரையிலும், இஞ்சி ரூ.250-க்கும், பூண்டு ரூ.200 முதல் ரூ.240 வரைக்கும் விற்பனையானது. அதேபோல் மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது. உருளை, பீட்ரூட், புடலங்காய் தலா ரூ.40-க்கு விற்பனையானது.தொடர்ந்து தக்காளி விலை உச்சத்தில் நீடிப்பதால் இல்லத்தர சிகள் புளியை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி பயன்பாடு அதிகரித்து, தக்காளி சட்னியின் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. அதே நேரத்தில் விலை உயர்ந்த உணவு ரகங்கள் விற்பனை செய்யப்ப டும் பெரிய ஓட்டல்களில் மட்டுமே தக்காளி சட்னியை பார்க்க முடிகிறது. சிறிய ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டு விட்டது.

    • மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
    • தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம்.

    கோவை:

    தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இன்னொருபுறம் ஓட்டல்களில் தக்காளி சட்னி, வெங்காய பொரியல் ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது சாப்பாட்டு பிரியர்களை ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.

    கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூர் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    இதுதவிர வெளி மாவட்டங்களில் இருந்தும் சரக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. கோவை மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அங்கு விளையும் காய்கறிகளை அறுவடை செய்வதில் விவசாயிகளுக்கு சிரமநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மார்க்கெட்டுக்கு விளைபொருட்களை கொண்டு வரவில்லை. இன்னொருபுறம் வெளி மாவடடங்களில் இருந்தும் சரக்கு காய்கறி லாரிகளின் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம். ஆனால் இங்கு தற்போது 40 லாரிகள் மட்டுமே வந்து செல்கின்றன.

    கோவை காய்கறி மார்க்கெட்களில் உள்ளூர் காய்கறி வரத்து குறைவு, வெளியூர் சரக்கு லாரிகளின் வருகை குறைவு ஆகியவை காரணமாக சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியது.

    கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை தக்காளி விலை கிலோ ரூ. 40 ஆக இருந்தது. ஆனால் தற்போது 120 ரூபாயாக உள்ளது. அதேபோல சின்ன வெங்காயத்தின் விலை முன்பு ரூ.40 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120 ஆக உள்ளது.

    கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் பெரியஅளவில் இல்லை. எனவே விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளை தொடங்கி விட்டனர். அதேபோல வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகளில் காய்கறி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    எனவே கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் விலை சிறிதுசிறிதாக குறைய தொடங்கி உள்ளது. தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒருகிலோ சின்ன வெங்காயம் ரூ.170 ஆக இருந்தது. அதன் விலையில் தற்போது 50 ரூபாய் குறைந்து, ஒருகிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் தக்காளி விலை மட்டும் குறைாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காய்கறி மார்க்கெட்டுகளில் நேற்று வரை ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.110, ஆப்பிள் தக்காளி ரூ.140 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு நாட்டு தக்காளியின் விலை ரூ.10 அதிகரித்து தற்போது ரூ.120க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் தக்காளியின் விலையில் மாற்றம் இல்லை.

    கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்தபோதிலும், தக்காளியின் விலை அதிகரிப்பு பொதுமக்களை கவலைப்பட வைத்து உள்ளது.

    • ஏக்கருக்கு 700 கிலோ வரை விதை போட்டால், 8 ஆயிரம் கிலோ விளைச்சல் கிடைக்கும்.
    • தொடர் நஷ்டத்தை சந்திக்க விரும்பாத பெரும் பாலான விவசாயிகள் வாழை, பாக்கு என பயிர் சாகுபடியை மாற்றினர்.

    கோவை,

    தமிழகத்தில் அன்றாட சமையலில் சின்ன வெங்காயத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

    இதற்கு உணவில் சுவை சேர்க்கும் மகத்துவம் உண்டு. அதுவும் தவிர உடலுக்கு குளிர்ச்சி தரும். எனவே பொதுமக்கள் உணவில் அதிகமாக சேர்த்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வேடப்பட்டி, மாதம்பட்டி, ஜாகீர்நாயக்கன்பாளையம், தாளியூர், தீத்திப்பாளையம், தென்கரை, ஆலாந்துறை, மத்வராயபுரம், தென்னமநல்லூர், கலிக்கநாயக்கன்பட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வந்தது.

    இது மிதமான தட்பவெப்பநிலை நிலவும் பகுதிகளில் செழிப்பாக வளரும் 70 நாள் பயிர். ஆண்டுக்கு 2 முறை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

    ஏக்கருக்கு 700 கிலோ வரை விதை போட்டால், 8 ஆயிரம் கிலோ விளைச்சல் கிடைக்கும். ஆனால் கடந்த ஆண்டில் வெங்காயம் சாகுபடி செய்த பெரும்பாலான விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை.மேலும் தொடர் மழையால் வெங்காய்தை அறுவடை செய்வதிலும், அதனை பாதுகாப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. கடந்த முறை கிலோ ரூ.35 வரை வியாபாரிகளால் சின்ன வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது.

    இதன் காரணமாக தற்போது சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய பெரும்பாலான விவசாயிகள் தயக்கம் காட்டி உள்ளனர். தொடர் நஷ்டத்தை சந்திக்க விரும்பாத பெரும் பாலான விவசாயிகள் வாழை, பாக்கு என பயிர் சாகுபடியை மாற்றினர்.

    இதன் காரணமாக நடப்பாண்டில் 40 சதவீத விவசாயிகள் மீண்டும் சின்ன வெங்காயம் பயிர் செய்வதை தவிர்த்து உள்ளனர். இதனால் அதன் தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வரும் சின்ன வெங்காயம் வரத்தும் குறைய தொடங்கி யுள்ளது. முன்பெல்லாம் அதனை உரித்தால் தான் கண்ணீர் வரும் என்பார்கள். ஆனால் தற்போது அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை உள்ளது.

    அந்தளவிற்கு அதன் விலையானது உச்சத்ததை எட்டி உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.180க்கு மேல் விற்பனை யாகி வருகிறது. இதனால் சமையலில் சின்ன வெங்கா யத்தை பயன்படுத்துவதும் குறைந்து வருகிறது.

    தற்போது ஜூன் மாத தொடக்கத்தில் ஒரு சில விவசாயிகள் மீண்டும் சின்ன வெங்காய சாகு படியை தொடங்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி பருவமழை தொடங்கவில்லை.

    கடந்த ஆண்டு ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.15 முதல் 20க்கு விற்பனை யானது. தற்போது அதன் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

    முன்பெல்லாம் சின்ன வெங்காயம் பயிரிட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் மட்டுமே செலவாகும். ஆனால் தற்போது ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது. அப்படியே செலவு செய்தாலும் தற்போது ஏக்கருக்கு 4 டன் வரை மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது.

    மேலும் சின்ன வெங்காயத்தில் தற்போது நுனிக ருகல், பூஞ்சை தாக்குதல் அதிகளவில் உள்ளது. எனவே பயிர்களை காய்ப் பாற்ற 4 தடவைகள் கூடுதலாக மருந்து தெளிக்க வேண்டி உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    பருவமழையை நம்பி காத்திருந்ததால் சின்ன வெங்காயம் சாகுபடி தள்ளிபோனது. ஜூனில் கிலோ ரூ.65க்கு விற்ப னையான சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ.145க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு அறுவடை நேரத்தில் பருவமழை தொடங்கியது.

    இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த சின்ன வெங்காயத்தை அறு வடை செய்வதில், எங்களுக்கு பெருத்த சிரமநிலை ஏற்பட்டது. விளைச்சலும் போதிய அளவுக்கு இல்லை.

    இந்த ஆண்டு பருவமழை போதியளவு பெய்ய வில்லை. 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஊட்டியை போன்ற சீதோஷ்ண நிலை வேண்டும். தற்போது விவசாயிகளிடத்தில் சின்ன வெங்காயம் இருப்பு இல்லை.

    எனவே ஆகஸ்டு மாதம் வரைக்கும் வெங்காய தட்டுப்பாடு என்பது தொடரும். இதனால் விலையேற்றமும் நீடிக்கும்.

    வேளாண்துறை, வேளாண் விற்பனைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகியவை ஒன்றிணைந்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் என்னென்ன பயிரிடுகின்றனர்.

    எவ்வளவு ஏக்கரில் பயிரிடுகின்றனர். மாநிலத்தின் தேவை எவ்வளவு, அறுவடை செய்தால் கிடைக்கும் மகசூலின் அளவு போதுமானதாக இருக்குமா, விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்குமா, நஷ்டம் ஏற்படுமா, இருப்பு வைத்து விற்றால் லாபம் கிடைக்குமா என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு அதனை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    மேலும் காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் உரிய விலை கிடைக்கும் பயிர்களை சாகுபடி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தடுப்பாடும் வராது. விலையும் உயராது.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டுக்கு முன்பு வரை சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இங்கு 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மட்டுமே பயிரிடப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டை விட 10 ஏக்கர் சாகுபடி பரப்பு குறைந்து விட்டதால் தற்போது பயிரிட்டுள்ள வெங்காயத்தை ஆகஸ்டு மாத இறுதியில் மற்றும் செப்டம்பர் மாத துவக்கத்தில் தான் அறுவடை செய்ய முடியும்.

    அதுவரை தட்டுப்பாடு நிலையே நீடிக்கும். கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து வரும் வெங்காயமும் குறைந்து விட்டதால் தமிழகத்திற்கு வரும் அளவு படிப்படியாக குறைய தொடங்கும். இதனால் வெங்காயம் விலை தற்ச மயம் குறைய வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தக்காளி கிலோ ரூ.80க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • குறைவான விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது.

    இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு அங்காடிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி மயிலாடுது றையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடக்கி வைத்தார்.

    தக்காளி கிலோ ரூ. 80க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையை விட குறைவான விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை துறை இணைச் இயக்குனர் சேகர், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மற்றும் கூட்டுறவு துறை மாவட்ட இணை பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், சரக துணை பதிவாளர் ராஜேந்திரன், பொது விநியோகத் திட்டம் துணைப்பதிவாளர் அண்ணாமலை, தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்து க்கான கூட்டுறவு ஒன்றியத்தை கலெக்டர் மகாபாரதி குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்காக தொடக்கி வைத்தார்.

    • கோவை காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து தற்போது வெகுவாக குறைந்து உள்ளது.
    • கிலோக்கணக்கில் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள், இன்றைக்கு கிராம் கணக்கில் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அங்கு அவை வியாபாரிகளுக்கு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே கோவை காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து தற்போது வெகுவாக குறைந்து உள்ளது.

    கோவை மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 110-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வந்திறங்குவது வழக்கம். ஆனால் தற்போது சராசரியாக 40 லாரிகள் என்ற நிலையில் மட்டுமே காய்கறிகள் வரத்து உள்ளது. கோவை மாவட்டத்திலும் காய்கறி சாகுபடி குறைந்து உள்ளது. எனவே விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வருவது இல்லை.

    கோவை ஒட்டுமொத்த சந்தைகளுக்கு உணவு பொருட்களின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளதால், அங்கு காய்கறிகளின் விலை தற்போது உச்சத்தை எட்டி உள்ளது. இதனால் கிலோக்கணக்கில் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள், இன்றைக்கு கிராம் கணக்கில் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தற்போது நாட்டு தக்காளி ரூ.110-க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து உள்ளது.

    கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை ஒருபுறம் உச்சாணிக் கொம்பில் நிற்க, சின்ன வெங்காயத்தின் விலை இன்னொரு பக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

    இங்கு சின்ன வெங்காயம் பல்வேறு தரங்களில் ஒரு கிலோவுக்கு ரூ.140 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது. அதேபோல 2 கிலோ பெரிய வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோவை காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கோவை மட்டுமின்றி பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ளவில்லை. வெளியூர்-வெளிமாவட்டங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது.

    எனவே கோவை மார்க்கெட்டுகளுக்கான காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது.

    தமிழகத்தில் தற்போது பருவமழை குறைந்து விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர். எனவே கோவை மார்க்கெட்டுக்கான காய்கறிகளின் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலை மீண்டும் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    • இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும்
    • நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    உடலில் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    நீரிழிவு நோயைத் தவிர்க்க உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், ஆரோக்கியமான உணவு தேவை. நார்ச்சத்து நிறைந்த உணவை நீங்கள் சேர்க்க வேண்டும். வெங்காயத்தையும் சேர்க்கலாம்.

    இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும், இது கிட்டத்தட்ட எல்லா உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

    ஒரு வெங்காயத்தில் கிட்டத்தட்ட 44 கலோரிகள் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, போலெட், பொட்டாசியம், சல்பர் போன்றவை அதிகமாக இருக்கிறது. வெங்காயத்தில் கிட்டத்தட்ட 17 வகையான பிளாவினாய்ட்ஸ், (ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ்) இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு 11 ஆகும். இது மிகக் குறைந்த அளவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    வெங்காயத்தில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், குறிப்பாக ஆன்தோசயனின் மற்றும் கொர்சிட்டின், செல்களின் அழற்சியை குறைத்து நீரிழிவு நோய், இதய நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்கிறது. மேலும் கொர்சிட்டின், கணையம், கொழுப்பு, கல்லீரல் மற்றும் தசைகள் உள்ள செல்களுடன் ஒருங்கிணைந்து சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கிறது.

    கோடையில் வெங்காயம் சாப்பிடுவதோ அல்லது அதன் சாற்றைக் குடிப்பதோ வெப்பத்தை ஏற்படுத்தாது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை நிலையானதாக வைத்திருக்கும்.

    வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள அதிகமான வைட்டமின் சி நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக எஸ்சர்சியா, ஸ்டபைலோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்களின் தொற்றுக்கள் வராமல் ஓரளவு தடுக்கிறது. வெங்காயத்தில் உள்ள 'ஆனயானின் ஏ' என்ற வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    வெங்காயத்தில் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதாலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் பிளவினாய்ட்ஸ் அதிகமாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு மிகவும் குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் அதை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    - நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலை, இரவில் மழை பெய்கிறது.
    • லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்க ளில் எடுத்து வரப்படும் வெங்காயம் வரும் வழியில் மழையில் நனைந்து விடுவ தால் விரைவில் அழுகி விடுகின்றன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள், தினசரி காய்கறி மார்க்கெ ட்டுகள், சேலம் லீபஜார் மார்க்கெட் ஆகியவற்றுக்கு பெரிய வெங்காயம் மேட்டுப்பாளை யம், பெங்களூரு, மகா ராஷ்டிரா, குஜராத் மாநி லங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

    3 மாதங்கள் வரை அழுகாமல் இருக்க நன்கு உலர்த்தப்பட்டு, ஈரத்தன்மை எதுவும் இல்லாதபடி குடோன், குளிர்பதன கிடங்குகளில் பதப்படுத்தப்ப டுகிறது. ேம, ஜூன் மாதங்க ளில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிகளவில் வெங்காயத்தை இருப்பு வைப்பர்.

    சுட்டெரிக்கும் வெயில்

    தற்போது சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலை, இரவில் மழை பெய்கிறது. இதனால் குடோன்களில் இருப்பு வைத்த வெங்காயம், மழைநீர், குளிர் காற்றால் விரைவில் அழுகும் நிலையை எட்டி விடுகிறது.

    அத்துடன் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்க ளில் எடுத்து வரப்படும் வெங்காயம் வரும் வழியில் மழையில் நனைந்து விடுவ தால் விரைவில் அழுகி விடுகின்றன.

    இப்படி அழுகும் வெங்கா யத்தை அப்புறப்ப டுத்த செலவு செய்ய வேண்டும் என்பதால், ஒரு சில வியா பாரிகள் சேலத்தில் லீபஜார் சாலை, சூரமங்கலம் பிரதான சாலை, செவ்வாய்ப்பேட்டை ஆகிய இடங்களில் கொட்டி விடுகின்றனர். பருவ நிலை மாற்றத்தால் வெங்காயம் விரைவில் அழுகி விடுவதால் தொடர்ந்து வியாபாரிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

    • சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • பீன்ஸ், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் புங்கனூர், வி-கோட்டா, பலமனேர், குப்பம், மதனப்பள்ளி மற்றும் கர்நாடகா மாநிலம் கோலார், ஒட்டுப்பள்ளி, சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    தினசரி 55 முதல் 60 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் வெங்காயத்தின் விலையும் சற்று அதிகரித்து உள்ளது. ரூ.15-க்கு விற்கப்பட்ட பெரியவெங்காயம் இன்று ரூ.20-க்கு விற்பனை ஆனது. வரும் நாட்களிலும் இதே விலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக பீன்ஸ், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது.

    இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.80-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.65-க்கும், வரி கத்தரிக்காய் ரூ.45-க்கும், அவரைக்காய் ரூ.60-க்கும் விற்பனை ஆனது.

    தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது, கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலை அதிகரித்து உள்ளது. நேற்று 40 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில் இன்று 50 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்து இருக்கிறது என்றார்.

    உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், ஆண்டுதோறும் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வகையில் சின்ன வெங்காயம் சாகுபடி நேரடியாக வெங்காயம் விதைப்பு மற்றும் விதை நாற்றங்கால் என இரு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.

    நேரடியாக வெங்காயம் நடவு செய்தால் 70 முதல் 90 நாட்களில் அறுவடை செய்ய முடியும். விதை வாயிலாக சாகுபடி செய்யும் போது 120 முதல் 130 நாட்களாகும்.ஆனால் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால்வெங்காயம் சாகுபடி செய்த சில விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

    போதிய விலை கிடைக்காததால்விளை நிலத்திலேயே அழிப்பதும், அறுவடை செய்யாமல் விடுவதுமாக விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சமீப நாட்களாக, போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள வெங்காயத்தை பட்டறை அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் விலை உயராமல் உள்ளது. சிலர் அறுவடை செய்த வெங்காயங்களை மீண்டும் நிலத்துக்கு உரமாக்கி வருகின்றனர்.

    சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் வெங்காயங்கள் மழைநீரில் அழுகின. அவை விற்பனை ஆகாது என்பதால், மீண்டும் விளை நிலத்துக்கு உரமாக்கப்படுகிறது. உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட செங்கோட்டை பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.
    செங்கோட்டை:

    தமிழ்நாட்டில் தென்மாவட்டத்தில் சின்ன வெங்காய சாகுபடியில் தென்காசி மாவட்டம் முதல் இடம் வகிக்கிறது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 800 ஏக்கர்  பரப்பளவில்  சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

    மேற்குதொடர்ச்சி அடிவார பகுதியான செங்கோட்டை தாலூகா வுக்கு உட்பட்ட செங்கோட்டை நகர்பகுதி, கணக்கபிள்ளை வலசை, சீவநல்லூர், இலத்தூர் சித்திராபுரம், நெடுவயல், அச்சன்புதூர் சிவராமபேட்டை, கொடிகுறிச்சி உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் ஆண்டுதோறும்  சாகுபடி செய்யப்படுகிறது. இதனைநம்பியே வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இப்பகுதி விவசாயிகள் சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஆகிய முன்று மாதங்களில் பூமகசூலான வெங்காயம்,  மல்லி, துவரை, மோச்சை, பயறு வகைகள் உள்ளிட்ட வைகளை தென்மேற்கு பருவமழையை நம்பி பயிரிடுவர்.

    அவற்றுள் பெரும்பாலானோர் 70 நாள் பயறும் குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்வது வழக்கமாக செய்துவருகின்றனர்.

     ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் பயிரிட 600கிலோ தேவை, இதற்கான உள்ளி விதைகளை திண்டுக்கல் பகுதிகளிலிருந்து ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை வாங்கிவந்துள்ளனர். இவ்வாறு பயிரிட சாராசரியாக உழவு, பாத்தி கெட்டுதல், இயற்கை உரம் என ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்து சின்ன வெங்காயம் நடவு பணி மேற்கொள்கின்றனர்.

    70 நாட்களுக்கு பின் ஒரு ஏக்கருக்கு 7000 முதல் 7200 கிலோ சின்ன வெங்காயம் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பாண்டில் தென்காசி மாவட்டத்தில் 800 ஏக்கருக்கு மேல் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது அடி உரமிட்டு சின்ன வெங்காயம் நடுவதற்காக கரை அமைத்தனர்.

     இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் சின்ன வெங்காயம் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் பயிறுக்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது.

    பெரும்பாலானோர் இயற்கை உரங்களான மண்புழு, எறுசாணம், வேப்பம் புண்ணாக்கு, வேப்ப எண்ணை உள்ளிட்டவையே உபயோகித்து வருவதால் இங்கு விளையும் சின்ன வெங்காயத்திற்கு மதிப்பு கூடுதல் என்பதால் வியாபாரிகள் வாங்கி செல்வதில் அதிகளவில் ஆர்வம்  காட்டிவருகின்றனர்.
    ×