search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்ன வெங்காயம் சாகுபடி குறைந்தது ஏன்? விவசாயிகள் கருத்து
    X

    சின்ன வெங்காயம் சாகுபடி குறைந்தது ஏன்? விவசாயிகள் கருத்து

    • ஏக்கருக்கு 700 கிலோ வரை விதை போட்டால், 8 ஆயிரம் கிலோ விளைச்சல் கிடைக்கும்.
    • தொடர் நஷ்டத்தை சந்திக்க விரும்பாத பெரும் பாலான விவசாயிகள் வாழை, பாக்கு என பயிர் சாகுபடியை மாற்றினர்.

    கோவை,

    தமிழகத்தில் அன்றாட சமையலில் சின்ன வெங்காயத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

    இதற்கு உணவில் சுவை சேர்க்கும் மகத்துவம் உண்டு. அதுவும் தவிர உடலுக்கு குளிர்ச்சி தரும். எனவே பொதுமக்கள் உணவில் அதிகமாக சேர்த்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வேடப்பட்டி, மாதம்பட்டி, ஜாகீர்நாயக்கன்பாளையம், தாளியூர், தீத்திப்பாளையம், தென்கரை, ஆலாந்துறை, மத்வராயபுரம், தென்னமநல்லூர், கலிக்கநாயக்கன்பட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வந்தது.

    இது மிதமான தட்பவெப்பநிலை நிலவும் பகுதிகளில் செழிப்பாக வளரும் 70 நாள் பயிர். ஆண்டுக்கு 2 முறை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

    ஏக்கருக்கு 700 கிலோ வரை விதை போட்டால், 8 ஆயிரம் கிலோ விளைச்சல் கிடைக்கும். ஆனால் கடந்த ஆண்டில் வெங்காயம் சாகுபடி செய்த பெரும்பாலான விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை.மேலும் தொடர் மழையால் வெங்காய்தை அறுவடை செய்வதிலும், அதனை பாதுகாப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. கடந்த முறை கிலோ ரூ.35 வரை வியாபாரிகளால் சின்ன வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது.

    இதன் காரணமாக தற்போது சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய பெரும்பாலான விவசாயிகள் தயக்கம் காட்டி உள்ளனர். தொடர் நஷ்டத்தை சந்திக்க விரும்பாத பெரும் பாலான விவசாயிகள் வாழை, பாக்கு என பயிர் சாகுபடியை மாற்றினர்.

    இதன் காரணமாக நடப்பாண்டில் 40 சதவீத விவசாயிகள் மீண்டும் சின்ன வெங்காயம் பயிர் செய்வதை தவிர்த்து உள்ளனர். இதனால் அதன் தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வரும் சின்ன வெங்காயம் வரத்தும் குறைய தொடங்கி யுள்ளது. முன்பெல்லாம் அதனை உரித்தால் தான் கண்ணீர் வரும் என்பார்கள். ஆனால் தற்போது அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை உள்ளது.

    அந்தளவிற்கு அதன் விலையானது உச்சத்ததை எட்டி உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.180க்கு மேல் விற்பனை யாகி வருகிறது. இதனால் சமையலில் சின்ன வெங்கா யத்தை பயன்படுத்துவதும் குறைந்து வருகிறது.

    தற்போது ஜூன் மாத தொடக்கத்தில் ஒரு சில விவசாயிகள் மீண்டும் சின்ன வெங்காய சாகு படியை தொடங்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி பருவமழை தொடங்கவில்லை.

    கடந்த ஆண்டு ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.15 முதல் 20க்கு விற்பனை யானது. தற்போது அதன் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

    முன்பெல்லாம் சின்ன வெங்காயம் பயிரிட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் மட்டுமே செலவாகும். ஆனால் தற்போது ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது. அப்படியே செலவு செய்தாலும் தற்போது ஏக்கருக்கு 4 டன் வரை மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது.

    மேலும் சின்ன வெங்காயத்தில் தற்போது நுனிக ருகல், பூஞ்சை தாக்குதல் அதிகளவில் உள்ளது. எனவே பயிர்களை காய்ப் பாற்ற 4 தடவைகள் கூடுதலாக மருந்து தெளிக்க வேண்டி உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    பருவமழையை நம்பி காத்திருந்ததால் சின்ன வெங்காயம் சாகுபடி தள்ளிபோனது. ஜூனில் கிலோ ரூ.65க்கு விற்ப னையான சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ.145க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு அறுவடை நேரத்தில் பருவமழை தொடங்கியது.

    இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த சின்ன வெங்காயத்தை அறு வடை செய்வதில், எங்களுக்கு பெருத்த சிரமநிலை ஏற்பட்டது. விளைச்சலும் போதிய அளவுக்கு இல்லை.

    இந்த ஆண்டு பருவமழை போதியளவு பெய்ய வில்லை. 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஊட்டியை போன்ற சீதோஷ்ண நிலை வேண்டும். தற்போது விவசாயிகளிடத்தில் சின்ன வெங்காயம் இருப்பு இல்லை.

    எனவே ஆகஸ்டு மாதம் வரைக்கும் வெங்காய தட்டுப்பாடு என்பது தொடரும். இதனால் விலையேற்றமும் நீடிக்கும்.

    வேளாண்துறை, வேளாண் விற்பனைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகியவை ஒன்றிணைந்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் என்னென்ன பயிரிடுகின்றனர்.

    எவ்வளவு ஏக்கரில் பயிரிடுகின்றனர். மாநிலத்தின் தேவை எவ்வளவு, அறுவடை செய்தால் கிடைக்கும் மகசூலின் அளவு போதுமானதாக இருக்குமா, விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்குமா, நஷ்டம் ஏற்படுமா, இருப்பு வைத்து விற்றால் லாபம் கிடைக்குமா என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு அதனை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    மேலும் காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் உரிய விலை கிடைக்கும் பயிர்களை சாகுபடி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தடுப்பாடும் வராது. விலையும் உயராது.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டுக்கு முன்பு வரை சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இங்கு 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மட்டுமே பயிரிடப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டை விட 10 ஏக்கர் சாகுபடி பரப்பு குறைந்து விட்டதால் தற்போது பயிரிட்டுள்ள வெங்காயத்தை ஆகஸ்டு மாத இறுதியில் மற்றும் செப்டம்பர் மாத துவக்கத்தில் தான் அறுவடை செய்ய முடியும்.

    அதுவரை தட்டுப்பாடு நிலையே நீடிக்கும். கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து வரும் வெங்காயமும் குறைந்து விட்டதால் தமிழகத்திற்கு வரும் அளவு படிப்படியாக குறைய தொடங்கும். இதனால் வெங்காயம் விலை தற்ச மயம் குறைய வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×