search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegitables"

    • கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
    • இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது

    நெல்லை:

    நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் காய்கறி களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    விலை மேலும் உயர்வு

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காய்கறி விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. பாளை மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ. 120 முதல் ரூ.130 வரை விற்பனையான நிலையில் இன்று மேலும் 30 ரூபாய் உயர்ந்து இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 150-க்கு விற்பனையானது. அதனை தள்ளுவண்டி மற்றும் தெருவோர கடைகளில் வாங்கி சென்று விற்பனை செய்யும் வியாபாரிகள் ரூ.170 வரையிலும் விற்பனை செய்தனர்.

    தொடர்ந்து தக்காளியின் விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பெருமழை காரணமாக தக்காளியின் விலை தொடர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை போல் இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. பீன்ஸ் ரூ.100-க்கும், கேரட், உள்ளி ரூ.80-க்கும், அவரை மற்றும் மிளகாய் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பாளை மார்க்கெட் வியாபாரி ஈசாக் கூறுகையில், ஆந்திராவில் இருந்து மட்டும் தான் தற்போது தக்காளி வந்து கொண்டிருக்கிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தக்காளி வரத்து முற்றிலும் நின்று விட்டது.

    ஆந்திராவில் இருந்து இன்று 30 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.3500-க்கு வந்து சேர்ந்துள்ளது. இதில் 3 கிலோ வரை சேதம் அடைந்துவிடும். இதை எல்லாம் சரிகட்டும் விதமாகவும், மேற்கொண்டு லாபமும் பெற வேண்டும் என்பதாலும் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்கிறோம் என்று கூறினார்.

    • ரஸ்தாவூரில் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்ப்பதற்கான பயிற்சி நடைபெற்றது.
    • ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை பெறமுடியும்

    நெல்லை:

    தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் இந்த நிதியாண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் பாப்பாக்குடி வட்டாரத்தில் ரூ.4.70 லட்சம் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    இந்நிலையில் வீட்டுத்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாடித்தோட்ட தளைகள் 50 சதவீதம் மானியத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது. பாப்பாக்குடி வட்டாரத்தில் ரஸ்தாவூரில் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்ப்பதற்கான பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் தோட்ட க்கலை உதவி இயக்குநர் சுபாவாசுகி கலந்து கொண்டு அனைவரும் தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை தங்களது வீட்டிலேயே அங்கக முறையில் உற்பத்தி செய்து கொள்ளலாம் எனவும், ஒரு தொகுப்பின் மொத்த விலை ரூ.900, மானியம் ரூ.450, பயனாளியின் பங்குத்தொகை ரூ.450 எனவும் ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை பெறமுடியும் எனவும் விளக்கினார்.

    இதில் ஏற்கெனவே பயன்பெற்ற பயனாளி மாரியம்மாள், பாரதமணி, சோமு ஆகியோர் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்க்கும் முறைகள் பற்றியும், காய்கறி வளர்ப்பதால் உள்ள நன்மைகளையும் விளக்கி கூறினார்கள். இப்பயிற்சியில் ரஸ்தாவூரை சேர்ந்த செம்பருத்தி, முப்புடாதி அம்மன், அன்னை தெரசா, சரோஜினி, அன்னை இந்திரா, மகளிர் மன்றம் ஆகிய பெயர்களில் செயல்படும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முடிவில் உதவி தோட்டக்கலை அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • இன்று தக்காளி விலை ரூ.4 குறைந்து ரூ.120-க்கு உழவர் சந்தைகளில் விற்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது.

    வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தாகவும், உள்ளூர் தக்காளி வரத்து முற்றிலுமாக நின்று விட்டதாகவும், அதன் காரணமாகவே விலை ஏற்றம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தக்காளி, சின்ன வெங்காயம் உள்பட காய்கறிகளின் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.140 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் உழவர் சந்தைகளில் ரூ.110 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று ரூ.12 அதிகரித்து ரூ.124-க்கு விற்பனையானது.

    ஆனால் இன்று தக்காளி விலை ரூ.4 குறைந்து ரூ.120-க்கு உழவர் சந்தைகளில் விற்கப்பட்டது. அதேபோல் பாளை மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 முதல் ரூ.135 வரை விற்பனையானது. மேலும் மார்க்கெட்டில் இன்று காலை சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரையிலும், இஞ்சி ரூ.250-க்கும், பூண்டு ரூ.200 முதல் ரூ.240 வரைக்கும் விற்பனையானது. அதேபோல் மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது. உருளை, பீட்ரூட், புடலங்காய் தலா ரூ.40-க்கு விற்பனையானது.தொடர்ந்து தக்காளி விலை உச்சத்தில் நீடிப்பதால் இல்லத்தர சிகள் புளியை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி பயன்பாடு அதிகரித்து, தக்காளி சட்னியின் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. அதே நேரத்தில் விலை உயர்ந்த உணவு ரகங்கள் விற்பனை செய்யப்ப டும் பெரிய ஓட்டல்களில் மட்டுமே தக்காளி சட்னியை பார்க்க முடிகிறது. சிறிய ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டு விட்டது.

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுப்பள்ள நிலையில் கடலூர் உழவர்சந்தைக்கு அரசு பஸ்கள் மூலம் நேற்று முதல் காய்கறிகள் வந்தது.
    கடலூர்:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 6-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம் நீடிக்கிறது.

    கடலூர் மாவட்டத்திலும் சுமார் 7 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் வர்த்தகம் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்ட செல்ல முடியவில்லை. இதனால் பல தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.

    கடலூர் மாவட்டத்துக்கு கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அரிசி, பருப்பு, வெங்காயம், காய்கறிகள், பழங்கள் லாரிகளில் கொண்டுவரப்படும். லாரிகள் ஓடாததால் வெளி மாநிலங்களில் இருந்துவரும் காய்கறிகள் வரத்து அடியோடு நின்றது.

    இதைத்தொடர்ந்து கடலூர் உழவர்சந்தைக்கு அரசு பஸ்களில் நேற்று முதல் காய்கறிகள் வந்திறங்கின. எம்.புதூர், எஸ்.புதூர், வடலூர் போன்ற பகுதிகளில் இருந்து அரசு பஸ்களில் காய்கறிகள், வாழைத்தார்கள், பழங்கள் கொண்டுவரப்பட்டன.

    விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 500 லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

    சென்னை கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், திண்டுக்கள் போன்ற பகுதிகளில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக காய்கறிகள் எதுவும் வரவில்லை. இதனால் காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

    மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கும் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக மரக்காணம் பகுதியில் உப்புகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் டன் உப்புகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    லாரிகள் ஓடாததால் உப்பளத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமக விழுப்புரம் மாவட்டத்தில் லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களும் என 20 ஆயிரத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    ×