search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Price status"

    • கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
    • இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது

    நெல்லை:

    நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் காய்கறி களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    விலை மேலும் உயர்வு

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காய்கறி விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. பாளை மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ. 120 முதல் ரூ.130 வரை விற்பனையான நிலையில் இன்று மேலும் 30 ரூபாய் உயர்ந்து இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 150-க்கு விற்பனையானது. அதனை தள்ளுவண்டி மற்றும் தெருவோர கடைகளில் வாங்கி சென்று விற்பனை செய்யும் வியாபாரிகள் ரூ.170 வரையிலும் விற்பனை செய்தனர்.

    தொடர்ந்து தக்காளியின் விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பெருமழை காரணமாக தக்காளியின் விலை தொடர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை போல் இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. பீன்ஸ் ரூ.100-க்கும், கேரட், உள்ளி ரூ.80-க்கும், அவரை மற்றும் மிளகாய் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பாளை மார்க்கெட் வியாபாரி ஈசாக் கூறுகையில், ஆந்திராவில் இருந்து மட்டும் தான் தற்போது தக்காளி வந்து கொண்டிருக்கிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தக்காளி வரத்து முற்றிலும் நின்று விட்டது.

    ஆந்திராவில் இருந்து இன்று 30 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.3500-க்கு வந்து சேர்ந்துள்ளது. இதில் 3 கிலோ வரை சேதம் அடைந்துவிடும். இதை எல்லாம் சரிகட்டும் விதமாகவும், மேற்கொண்டு லாபமும் பெற வேண்டும் என்பதாலும் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்கிறோம் என்று கூறினார்.

    ×