search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Terrace garden"

    • ரஸ்தாவூரில் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்ப்பதற்கான பயிற்சி நடைபெற்றது.
    • ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை பெறமுடியும்

    நெல்லை:

    தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் இந்த நிதியாண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் பாப்பாக்குடி வட்டாரத்தில் ரூ.4.70 லட்சம் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    இந்நிலையில் வீட்டுத்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாடித்தோட்ட தளைகள் 50 சதவீதம் மானியத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது. பாப்பாக்குடி வட்டாரத்தில் ரஸ்தாவூரில் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்ப்பதற்கான பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் தோட்ட க்கலை உதவி இயக்குநர் சுபாவாசுகி கலந்து கொண்டு அனைவரும் தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை தங்களது வீட்டிலேயே அங்கக முறையில் உற்பத்தி செய்து கொள்ளலாம் எனவும், ஒரு தொகுப்பின் மொத்த விலை ரூ.900, மானியம் ரூ.450, பயனாளியின் பங்குத்தொகை ரூ.450 எனவும் ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை பெறமுடியும் எனவும் விளக்கினார்.

    இதில் ஏற்கெனவே பயன்பெற்ற பயனாளி மாரியம்மாள், பாரதமணி, சோமு ஆகியோர் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்க்கும் முறைகள் பற்றியும், காய்கறி வளர்ப்பதால் உள்ள நன்மைகளையும் விளக்கி கூறினார்கள். இப்பயிற்சியில் ரஸ்தாவூரை சேர்ந்த செம்பருத்தி, முப்புடாதி அம்மன், அன்னை தெரசா, சரோஜினி, அன்னை இந்திரா, மகளிர் மன்றம் ஆகிய பெயர்களில் செயல்படும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முடிவில் உதவி தோட்டக்கலை அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • வேப்ப எண்ணெய் 100 மில்லி மற்றும் காய்கறி வளர்ப்புக்கான கையேடு ஆகியவை வழங்கப்படும்.
    • ரூ.900, மானியம் 50 சதவீதம் போக ரூ.450 மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில்மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி அளிக்க ப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் முத்தமிழ்செல்வி அறிவுறுத்தலின் படி, தோட்டக்கலை அலுவலர் சோபியா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் கூறியதாவது:-

    மாடித்தோட்டம் தொகுப்பில் செடி வளர்ப்பு பைகள் 6 எண்கள் , தேங்காய் நார் கழிவுகள் 12 கிலோ , 6 வகையான காய்கறி விதை பொட்டலங்கள், அசோஸ்பைரில்லம் 200 கிராம்,போஸ்போபாக்டிரியா 200 கிராம், ட்ரைக் கோடர்மாவிரிடி 200 கிராம், வேப்ப எண்ணெய் 100 மில்லி மற்றும் காய்கறி வளர்ப்புக்கான கையேடு ஆகியவை வழங்கப்படும்.

    இந்த தொகுப்பின் விலை ரூ.900, மானியம் 50 சதவீதம் போக ரூ.450 மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் .

    இந்த தொகுப்பினை பெற www.tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது தஞ்சாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • இந்த மாடித்தோட்ட தளையின் உதவியுடன் காய்கறி பயிர்களான வெண்டை, கத்திரி, கீரை, முருங்கை, அவரைக்காய் மற்றும் கொடிகாய் தளைகள் வளர்த்தேன்.
    • இயற்கை உரங்களை உபயோகப்படுத்தியதால் பூச்சி மருந்து அற்ற பசுமையான மற்றும் சத்தான காய்கறிகளைப் பெற்றேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த தோட்ட க்கலை அபிவிருத்தி திட்ட த்தின்கீழ் ஊரகப்பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு 3500 தளைகள், நகர்ப்புறங்களில் மாடித்தோட்டங்கள் அமைப்பதற்கு 500 தளைகள் மற்றும் நோய்எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் 4500 தளைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர் முனிசிபல் காலனியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் கூறியதாவது:- தோட்டக்கலைத்துறை மூலம் தஞ்சாவூர்வட்டார தோட்டக்கலைஉதவி இயக்குநர் அலுவலகத்தி லிருந்து தேசிய தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில் 2 மாடித்தோட்ட தளையை மானியத்தில் ரூ.450-க்கு பெற்றேன்.

    அந்த தளையில் 6 வளர்ப்பு பைகள் மற்றும் தென்னை நார் உரம், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் - 200 கிராம், டிரைகோடெர்மா விரிடி – 100கிராம், அசாடிராக்டின் - 100 மி.லி, 6 வகையான விதை அடங்கிய பொட்டலம் மற்றும் வழிகாட்டி புத்தகம் ஆகியவை இருந்தது. இந்த மாடித்தோட்ட தளையின் உதவியுடன் காய்கறி பயிர்களான வெண்டை, கத்திரி, கீரை, முருங்கை, அவரைக்காய் மற்றும் கொடிகாய் தளைகள் வளர்த்தேன். இதன் மூலம் எங்களது குடும்பத் தேவையைபூர்த்தி செய்ததுடன் உறவினர்க ளுக்கும், காய்க றிகளை பகிர்ந்து அளித்தேன்.

    நகரப்பகுதியில் வசிக்கும் இடமற்ற ஆர்வமுள்ள குடும்பங்களுக்கு இந்த தளைகள் அடங்கி காய்கறி தொகுப்பு மிகவும் உபயோகமானதாக இருக்கும். மேலும் இயற்கை உரங்களை உபயோகப்படுத்தியதால் பூச்சி மருந்து அற்ற பசுமையான மற்றும் சத்தான காய்கறிகளைப் பெற்றேன். ஆகவே தோட்டக்கலை துறைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவர் கூறியதாவது:-

    தோட்டக்கலைத்துறை மூலம் தஞ்சாவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து தேசிய தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில் 2 மாடித்தோட்ட தளையை மானியத்தில் பெற்றேன்.இந்த மாடித்தோட்ட தளையின் உதவியுடன் காய்கறி பயிர்களை வளர்த்தேன். இது எனக்கு உறவினர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்த ளித்து, உதிவயாகவும் இருந்தது இத்திட்டத்தை அறவிகத்து நடைமுறை படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துகோள்கிறேன் என்றார்.

    ×