search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை உரம்"

    • இந்த மாடித்தோட்ட தளையின் உதவியுடன் காய்கறி பயிர்களான வெண்டை, கத்திரி, கீரை, முருங்கை, அவரைக்காய் மற்றும் கொடிகாய் தளைகள் வளர்த்தேன்.
    • இயற்கை உரங்களை உபயோகப்படுத்தியதால் பூச்சி மருந்து அற்ற பசுமையான மற்றும் சத்தான காய்கறிகளைப் பெற்றேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த தோட்ட க்கலை அபிவிருத்தி திட்ட த்தின்கீழ் ஊரகப்பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு 3500 தளைகள், நகர்ப்புறங்களில் மாடித்தோட்டங்கள் அமைப்பதற்கு 500 தளைகள் மற்றும் நோய்எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் 4500 தளைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர் முனிசிபல் காலனியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் கூறியதாவது:- தோட்டக்கலைத்துறை மூலம் தஞ்சாவூர்வட்டார தோட்டக்கலைஉதவி இயக்குநர் அலுவலகத்தி லிருந்து தேசிய தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில் 2 மாடித்தோட்ட தளையை மானியத்தில் ரூ.450-க்கு பெற்றேன்.

    அந்த தளையில் 6 வளர்ப்பு பைகள் மற்றும் தென்னை நார் உரம், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் - 200 கிராம், டிரைகோடெர்மா விரிடி – 100கிராம், அசாடிராக்டின் - 100 மி.லி, 6 வகையான விதை அடங்கிய பொட்டலம் மற்றும் வழிகாட்டி புத்தகம் ஆகியவை இருந்தது. இந்த மாடித்தோட்ட தளையின் உதவியுடன் காய்கறி பயிர்களான வெண்டை, கத்திரி, கீரை, முருங்கை, அவரைக்காய் மற்றும் கொடிகாய் தளைகள் வளர்த்தேன். இதன் மூலம் எங்களது குடும்பத் தேவையைபூர்த்தி செய்ததுடன் உறவினர்க ளுக்கும், காய்க றிகளை பகிர்ந்து அளித்தேன்.

    நகரப்பகுதியில் வசிக்கும் இடமற்ற ஆர்வமுள்ள குடும்பங்களுக்கு இந்த தளைகள் அடங்கி காய்கறி தொகுப்பு மிகவும் உபயோகமானதாக இருக்கும். மேலும் இயற்கை உரங்களை உபயோகப்படுத்தியதால் பூச்சி மருந்து அற்ற பசுமையான மற்றும் சத்தான காய்கறிகளைப் பெற்றேன். ஆகவே தோட்டக்கலை துறைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவர் கூறியதாவது:-

    தோட்டக்கலைத்துறை மூலம் தஞ்சாவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து தேசிய தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில் 2 மாடித்தோட்ட தளையை மானியத்தில் பெற்றேன்.இந்த மாடித்தோட்ட தளையின் உதவியுடன் காய்கறி பயிர்களை வளர்த்தேன். இது எனக்கு உறவினர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்த ளித்து, உதிவயாகவும் இருந்தது இத்திட்டத்தை அறவிகத்து நடைமுறை படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துகோள்கிறேன் என்றார்.

    ×