search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avinasi municipality"

    • துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • வ.உ.சி.பூங்காவில் மூன்று குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ளன.

     அவினாசி:

    அவினாசி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்–தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீரமானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர் சசிகலா பேசுகையில்,

    வ.உ.சி.பூங்காவில் மூன்று குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ளன. அவைகளை பாதுகாக்கும் வண்ணம் நிரந்தர காவலாளி அமைக்க வேண்டும். அதேபோல் வி.எஸ்.வி. காலனியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டியை பாதுகாக்கும் படி அதற்கு உடனடியாக கம்பி வேலி அமைக்க வேண்டும். வார்டில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தார் சாலை மற்றும் சாக்கடை வசதிகள் வேண்டி கடந்த ஒரு வருடமாக வலியுறுத்தியும் பணி நடைபெறவில்லை. எனவே அப்பணிகளையும் விரைந்து செய்து தர வேண்டும் என்றார். 

    • தினசரி 12 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது
    • ஒரு கிலோ உரம் 1 ரூபாய்க்கு வழங்க பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

    அவிநாசி :

    அவிநாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் இருந்து தினசரி 12 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது.கைகாட்டிப்புதூர் பகுதியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் அவை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.சில மாதங்களாக தொய்வுற்றிருந்த இப்பணி தற்போது வேகமெடுத்துள்ளது.

    ஒரு கிலோ சலித்தெடுத்த உரம், 5 ரூபாய்க்கும், சலித்தெடுக்காத உரம் கிலோ ஒரு ரூபாய்க்கும் வழங்க பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இங்கு கொட்டப்படும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்தும் பணியை காண்டிராக்டர் பாதியில் கைவிட்டதால் மறுடெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் துவங்கி இங்கு குவிந்துள்ள மக்காத குப்பைகள் முற்றிலும் அகற்றப்படும் பட்சத்தில் வளம் மீட்பு பூங்கா, விரைவில் நலம் பெறும்.அதேநேரம் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை வீடுகளில் இருந்தே துவங்க வேண் டும் என்ற நோக்கில் பேரூராட்சி சார்பில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்ற பேரூராட்சியின் அறிவிப்பு வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது. மக்கள் பின்பற்றுவதில்லை. இந்த அறிவிப்பும் அமலுக்கு வந்தால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திடம் பெறும் என்கின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.

    ×