search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை
    X

    கோப்புபடம். 

    அவினாசி பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை

    • துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • வ.உ.சி.பூங்காவில் மூன்று குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ளன.

    அவினாசி:

    அவினாசி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்–தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீரமானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர் சசிகலா பேசுகையில்,

    வ.உ.சி.பூங்காவில் மூன்று குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ளன. அவைகளை பாதுகாக்கும் வண்ணம் நிரந்தர காவலாளி அமைக்க வேண்டும். அதேபோல் வி.எஸ்.வி. காலனியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டியை பாதுகாக்கும் படி அதற்கு உடனடியாக கம்பி வேலி அமைக்க வேண்டும். வார்டில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தார் சாலை மற்றும் சாக்கடை வசதிகள் வேண்டி கடந்த ஒரு வருடமாக வலியுறுத்தியும் பணி நடைபெறவில்லை. எனவே அப்பணிகளையும் விரைந்து செய்து தர வேண்டும் என்றார்.

    Next Story
    ×