என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "no confidence motion"
- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் மணிப்பூர் சம்பவம் எதிரொலித்தது.
- மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன்படி, மாநிலங்களவை எம்.பி.க்களான கேசவ ராவ், சுரேஷ் ரெட்டி, ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார், படுகுலா லிங்கையா யாதவ், ரஞ்சித் ரஞ்சன், மனோஜ் ஜா, சையது நசீர் உசைன், திருச்சி சிவா, இம்ரான் பிரதாப்காதி ஆகியோர் 267-வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.
இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளது என மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் கட்சி அலுவலகத்தில் தயாராக உள்ளது. காலை 10 மணிக்கு முன்னதாக மக்களவைச் செயலர் அலுவலகத்துக்கு வந்து சேரும் என தெரிவித்தார்.
இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தையும் முடக்கிய அவர், பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து நவம்பர் 14-ம்தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார்.
இதற்கிடையே, பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. அப்போது ரணில் கட்சி எம்பிக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்திருந்தனர். அவை நடவடிக்கை தொடங்கியதும், அதிபரால் நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.
அதேசமயம் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. #SriLankaParliament #RajapaksaWalkout
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி பேச்சு முடிந்ததும் தங்களை கட்டி பிடித்தது பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்துள்ள பிரதமர், பாராளுமன்றத்தில் ராகுல்காந்தியின் செயல் பாட்டை நீங்கள் உற்று நோக்கினால் அவர் செய்தது அனைத்துமே குழந்தைதனமான செயல் என்பது உங்களுக்கே தெரியும்.
அப்படியும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் அவர் என்ன கட்டிபிடித்து இருக்கைக்கு சென்று கண் சிமிட்டியதை நீங்கள் பாருங்கள். அதன்பிறகு முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
அசாம் தேசிய குடியுரிமை பட்டியல் தொடர்பாக மம்தாபானர்ஜி கடுமையாக விமர்சிக்கிறார். உள்நாட்டு கலவரம் ஏற்படும், ரத்த ஆறு ஓடும் என்று அவர் கூறுகிறார். அவருடைய பேச்சு நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது.
அவர் இந்திய அரசின் அமைப்புகளை நம்பவில்லை என்பது தான் இது காட்டுகிறது. எந்த இந்திய குடிமகனும் இந்த பட்டியல் காரணமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது. அது நீண்டகால திட்டமாகும். எனவே யாருக்கும் பாதிப்பு வராது.
சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல் அடிப்படையில் தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சிலர் அரசியல் ஆக்க பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார்.
ஜெயலலிதா இருந்திருந்தால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக (தீர்மானத்துக்கு ஆதரவாக) ஓட்டுப்போட்டு இருப்பார்கள் என்று அப்போது அவர் கூறினார். அத்துடன் தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடையும். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், மத்திய அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்துள்ள போதிலும், அடுத்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு நூற்றுக்கும் குறைவான இடங்களே கிடைக்கும்.
ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டாட்சி முன்னணி என்ற புதிய அணியை தொடங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி நடைபெற இருக்கும் பிரமாண்ட பேரணிக்கு அந்த கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். மத்தியில் பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்கான பணிகளை இந்த மாதமே தொடங்க இருக்கிறோம். இது அடுத்த மாதத்தில் இருந்து தீவிரம் அடையும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார். #MamtaBanarjee #ADMK #Jayalalithaa #BJP
மத்தியில் ஆட்சி செய்யும் அரசு மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையில்லாத எண்ணம் ஏற்பட்டால், பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற இரு அவைகளில் மக்களவையில் மட்டுமே இத்தகைய தீர்மானத்தை கொண்டு வர முடியும்.
பாராளுமன்றத்தில் 50 எம்.பி.க்களின் ஆதரவுடன் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர இயலும். அந்த தீர்மானம் மீது பாராளுமன்ற சட்ட விதி 198-வது பிரிவின் கீழ் விவாதம் நடந்து ஓட்டெடுப்பு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்.
எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்பதும், ஏற்காததும் சபாநாயகரின் இறுதி முடிவுக்கு உட்பட்டதாகும். அதுபோல நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எப்போது, எப்படி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற அனைத்தையும் சபாநாயகரே முடிவு செய்வார். ஒவ்வொரு கட்சி தலைவர்களும் விவாதத்தில் பேச நேரம் ஒதுக்கி கொடுப்பதும் சபாநாயகர்தான்.
அதன்படி இந்திய பாராளு மன்றவரலாற்றில் இதுவரை 27 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது. நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, மெரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மோடி ஆகிய 8 பிரதமர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அவர் அரசு மீது 1966-ம் ஆண்டு முதல் 1975-ம்ஆண்டு வரை 9 ஆண்டுகளில் 12 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1981-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டுக்குள் 3 தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டார்.
லால்பகதூர் சாஸ்திரி, நரசிம்மராவ் இருவரும் தலா 3 தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தனர். அந்த 3 தடவையும் அவர்கள் வெற்றி பெற்றனர்.
1993-ம் ஆண்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து நரசிம்மராவ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அந்த தீர்மானம் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மிக, மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நரசிம்மராவ் வெற்றி பெற்றார். அதாவது நரசிம்மராவுக்கு ஆதரவாக 265 வாக்குகளும் எதிராக 251 வாக்குகளும் கிடைத்தது. இதனால் 14 வாக்குகள் வித்தியாசத்தில் நரசிம்மராவ் வெற்றி பெற்றார்.
வாஜ்பாய், ராஜீவ்காந்தி இருவரும் தலா ஒரு தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தனர். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. 1999-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க நடந்த ஓட்டெடுப்பில் வாஜ்பாய் தோல்வியை தழுவினார்.
1967 மற்றும் 1992-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் பிரதமர்களை எதிர்த்து வாஜ்பாய் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வாஜ்பாய் 2003-ம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள நேரிட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவிய ஒரே பிரதமர் மெரார்ஜி தேசாய் ஆவார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. இதனால் அவர் ஓட்டெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
பாராளுமன்றத்தில் அதிக தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தவர் என்ற பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ஜோதிர்மாய் பாசுக்கு உண்டு. அவர் பாராளுமன்றத்தில் 4 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். 4 தடவையும் இந்திராவுக்கு எதிராக அவர் தீர்மானம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர்களில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும், விவாதத்தையும், ஓட்டெடுப்பையும் சந்திக்காத ஒரே பிரதமர் என்ற தனி சிறப்பு மன்மோகன்சிங்குக்கு உண்டு. 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த அவரை எதிர்த்து ஒரு தடவை கூட பா.ஜ.க.வினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Parliament #NoConfidenceMotion
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியுற்றது பற்றி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
அந்தச் சோதனையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கைமாறாக அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளது என்று இதனைக் கொள்ளலாம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #ITRaid
* இந்திய பாராளுமன்ற வரலாற்றில், மத்திய அரசுக்கு எதிராக இதுவரை 27 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
* இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது பல்வேறு காலகட்டங்களில் அரசுக்கு எதிராக 15 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் 4 தீர்மானங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ஜோதிர்மாய் பாசு கொண்டு வந்தார்.
* லால் பகதூர் சாஸ்திரி, நரசிம்மராவ் ஆகியோர் பிரதமராக இருந்த போது தலா 3 முறையும், மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது 2 முறையும், ராஜீவ் காந்தி, வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக இருந்த போது தலா ஒரு முறையும் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
* ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது அவரது அரசு மீது 1963-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜே.பி.கிருபளானி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். இதுதான் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம்.
* மோடி அரசு மீது நேற்று கொண்டு வரப்பட்டது 27-வது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகும்.
* இதற்கு முன் கடைசியாக 2003-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொண்டு வந்தார்.
* 1979-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது அவரது அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்த போதே பிரதமர் பதவியை மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்தார்.
மேற்கண்ட தகவல்களை நாடாளுமன்ற செயலகம் தெரிவித்து உள்ளது. #NoConfidenceMotion #BJP #IndiaTrustsModi
ஆந்திர மாநிலத்துக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு முறையாக நிறைவேற்றவில்லை என தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. விவாதம் முடிந்தவுடன் வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் மீதான இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்கபோவதில்லை எனவும், மத்திய அரசுடன் சுமூகபோக்கையே கடைபிடிக்கப்போவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க எம்.பி ஜெயவர்தன், தமிழகத்தின் குறைகளை எடுத்துரைத்தார். அதன்படி, தமிழகத்துக்கு 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பேரிடர் பாதிப்பு, வர்தா புயல் பாதிப்புகளுக்கு போதிய அளவிலான நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை எனவும் தமிழகத்துக்கு தேவையான நிதி குறைவாகவே அளிக்கப்படுவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவது மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என குறிப்பிட்ட அ.தி.மு.க எம்.பி ஜெயவர்தன், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பையும் பதிவு செய்தார். #NoConfidenceMotion
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்