search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "walkout"

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.
    • அமளிக்கு மத்தியில் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.

    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் 2 சமூகத்தினர் இடையே நடந்த கலவரத்தில் 160 பேர் வரை பலியானார்கள். கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய வன்முறை இதுவரை ஓய்ந்தபாடில்லை. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து அமளியில் ஈடுபட்டுவருகின்றன. பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரியும், விவாதம் நடத்த கோரியும் அமளியில் ஈடுபடுவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதன் உச்சகட்டமாக மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. அனைத்து கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதனால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சி எம்.பி.கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். மணிப்பூர் சம்பவத்தை கண்டிக்கும் விதமாக அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    மாநிலங்களவையைப் பொருத்தவரை எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு மத்தியில் ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதாதாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கொண்டு வந்தார்.

    மசோதா மீது விவாதம் நடந்துகொண்டிருந்தபோது,  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

    • சமயபுரம் பேரூராட்சி கூட்டத்திலிருந்து வார்டு கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்
    • வார்டுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என்று குற்றச்சாட்டு

    மண்ணச்சநல்லூர்,

    மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5-வது வார்டு கவுன்சிலர் சாந்தி பேசும் போது, 5 - வது வார்டு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எந்த பணியும் நடைபெறவில்லை. காமாட்சி அம்மன் கோயில் தெருவில் இருபுறமும் சாக்கடை வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

    • சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் இன்று நடந்தது.
    • சேலம் மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் இன்று நடந்தது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். துணை மேயர் சாரதா தேவி, துணை ஆணையாளர் அசோக்குமார் மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் கவுன்சிலர் இமயவர்மன், சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளிநடப்பு செய்தார்.

    தொடர்ந்து பேசிய அ.தி.மு.க கவுன்சிலர் ஆணை வரதன், அண்ணா பூங்கா வில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும். மேலும் தனது வார்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். மேலும் மண்டல அலுவலகம் எப்போது திறக்கப்படும்? என்று கேள்விகளை எழுப்பினார்.

    தி.மு.க. கவுன்சிலர் வக்கீல் குணா பேசுகையில், சேலம் மாநகராட்சியில் உள்ள சுடுகாடுகளுக்கு அதிக அளவில் பிணங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் மயானங்களில் மின் தகன மேடை அமைக்க வேண்டும என்றார்.

    அ.தி.மு.க கவுன்சிலர் கே.சி.செல்வராஜ் பேசுகையில், மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. 3-வது முறையாக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் காரணம் என்ன?, புதிய பஸ் நிலையத்தில் தனி நபர்கள் அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளனர்.

    புதிய பஸ் நிலைய பகுதியில் காலியாக உள்ள இடம் தனியாருக்கு வாட கைக்கு கொடுக்கப்படு வது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.

    தி.மு.க கவுன்சிலர் தெய்வலிங்கம் பேசுகையில், கூடுதல் வரி வசூலாகும் வார்டுகளில் அதிக நிதி ஒதுக்கீடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர், சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்றார். தி.மு.க கவுன்சிலர் திருஞானம் பேசுகையில், பொன்னம்மா பேட்டை-அம்மாபேட்டை மெயின் ரோடு பகுதியில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் வெளியூர் பஸ்களை பைபாஸ் சாலையில் இயக்க வேண்டும் என்றார்.

    எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்த பல்வேறு தீர்மானங்களுக்கு விளக்கம் கேட்டார். தொடர்ந்து சேலம் மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தொடர்ந்து கவுன்சிலர்க ளின் கேள்விகளுக்கு அதி காரிகள் மூலம் பார்வை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.

    • பட்ஜெட் சமர்பிக்கப்படுவதற்கு முன்னால் மாமன்ற குழுதலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை.
    • மேலாண்மை, வரி ,பாதாள சாக்கடை வரி போன்றவற்றை கடுமையாக உயர்த்தி உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கு போதிய அவகாசம் வேண்டும். மக்களுக்கு பயன்பட க்கூடிய திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை எனக்கூறி வெளிநடப்பு செய்தனர்.வெளியே வந்த பின்னர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி பேட்டி அளித்தார் .அவர் கூறியதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் சமர்பிக்கப்ப டுவதற்கு முன்னால்மாமன்ற குழுதலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வளர்ச்சி திட்டம், போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.அதேபோல் சொத்துவரி, திடக்கழிவு மேலாண்மை, வரி ,பாதாள சாக்கடை வரி போன்றவற்றை கடுமையாக உயர்த்தி உள்ளனர். மாநகராட்சி மக்களுக்கான சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீர்மிகு நகரம் திருப்பூர் என்ற இலக்கை நோக்கி செல்ல புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.

    உடனடியாக மெத்தன போக்கை கைவிட்டு உரிய காலகெடுவுக்குள் நான்காவது குடிநீர் திட்டத்தை மக்கள் பயன்பா ட்டுக்கு கொண்டுவர வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக்கூடிய திட்டம் பட்ஜெட்டில் இல்லை.தொழில் நகரமான திருப்பூர் மிகவும் நெருக்கடியான சூழலில் தள்ளப்பட்டு இருக்கின்ற இந்த காலகட்டத்தில் திருப்பூர்மாநகராட்சி மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் அல்லாமல் மிகவும்ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் வெற்று அறிக்கையாகவே உள்ளது. இந்தபட்ஜெட்டை கண்டித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது என்றார்.மேலும் சாமாளியர்களுக்கான பட்ஜெட் இல்லை என்று கூறி பா.ஜ.க.வை சேர்ந்த கவுன்சிலர் தங்கராஜூம் வெளிநடப்பு செய்தார்.

    • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போகலூர் யூனியன் கூட்டம் நடந்தது.
    • அனைத்து கவுன்சிலர்களும் கூட்ட அறையில் இருந்து எழுந்து அதிகாரிகள் எந்தவித மரியாதையும் கொடுப்பதில்லை என வெளிநடப்பு செய்தனர்.

    போகலூர்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் செல்லம்மாள் வரவேற்றார்.

    அப்போது திடீரென அனைத்து கவுன்சிலர்களும் கூட்ட அறையில் இருந்து எழுந்து அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு எந்தவித மரியாதையும் கொடுப்பதில்லை. இந்த கூட்டம் நடத்த வேண்டாம் என கூறி அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

    உடனே ஆணையாளர் செல்லம்மாள் உள்பட அலுவலர்கள் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தலைவர் சத்யா குணசேகரன் அறையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

    துணைத்தலைவர் பூமிநாதன் பேசுகையில், அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை. எப்போது போனில் தொடர்பு கொண்டாலும் மீட்டிங்கில் இருக்கிறோம் என்று சொல்கின்றனர். இப்படி இருந்தால் மக்கள் பணியை நாங்கள் எப்படி செய்வது? அலுவலகத்திற்கு வரும் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உட்கார சேர் கொடுப்பதில்லை. இது சரியா?.

    எங்களுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும்? என்றார்.

    தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், அதிகாரிகள் 11 மணிக்கு தான் அலுவலகத்திற்கு வருகிறார்கள். அவ்வாறு வந்தால் என்ன வேலை செய்ய முடியும்? அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வராவிட்டால் அவர்களின் வருகை பதிவேட்டில் ஆப்ஷன்ட் போட்டு மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    மேலும் அதிகாரிகள் தினமும் எந்த வேலையை பார்க்க செல்கிறீர்கள் என்பதை படம் எடுத்து எனது வாட்ஸ் அப்புக்கு அனுப்ப வேண்டும் என்றார். அதற்கு ஆணையாளர் செல்லம்மாள் பதில் அளிக்கையில், இனிமேல் சரியான நேரத்திற்கு வராத அலுவலர்களுக்கு ஆப் செட் போடுங்கள். அதை நான் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.

    ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகள் பயந்து பணியாற்றினார்கள். தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் ஆகிவிட்டது என்றார். கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், உரத்தூரில் டிரான்ஸ்பார்மர் அமைக்காததால் குறைந்த மின் அழுத்தம் வருகிறது.

    இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. உரத்தூர் - கொடிக்குளம் செல்லும் சாலை 15 ஆண்டுகளாக போடப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும், பொது மக்களும் அவதிப்படுகின்றனர். அதை உடனே சீரமைக்க வேண்டும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ நன்றி கூறினார்.

    பொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #DMKWalkout #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, பொங்கல் பரிசுக்கான நிதி தொடர்பாக அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    வெளிநடப்பு செய்த பின்னர், திமுக எம்எல்ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பொன்முடி எம்எல்ஏ கூறியதாவது:-



    ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்கியது தொடர்பான நிதி கணக்கில் தவறு உள்ளது. மொத்தம் உள்ள 2.01 கோடி ரேசன் கார்டுகளுக்கும் தலா 1.000 ரூபாய் வழங்கினால்கூட, 2010 கோடி ரூபாய் தான் ஆகும்.

    இதற்காக பட்ஜெட்டில் ரூ.1,985 கோடி ஒதுக்கிய நிலையில், துணை பட்ஜெட்டில் பொங்கல் பரிசுக்காக ரூ.2019.11 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு குறித்து கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் முதல் முறையாக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. #DMKWalkout #TNAssembly
    மீடியா சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி கேரள சட்டசபையில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். #KeralaAssembly #UDFWalkout
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நபர்களை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பதற்கு முன்அனுமதி பெற வேண்டும் என சமீபத்தில் அரசு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அரசு அலுவலகங்களில் செய்தியாளர்கள் திடீரென கூடுவதால் பெரும் பிரச்சினை ஆவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு கூறியது. ஆனால், இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் இன்று கேரள சட்டசபையில் எதிரொலித்தது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.ஜோசப் இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை வெளியிட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும், சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

    இதற்கு பதிலளித்து முதலமைச்சர் சார்பில் அமைச்சர் ஜெயராமன் பேசினார். அப்போது அரசு வெளியிட்ட சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாகவும், ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்றும் விளக்கம் அளித்தார். அத்துடன், சுற்றறிக்கையில் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார். 

    எனினும், அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி முழக்கமிட்டனர். சுற்றறிக்கை நகல்களையும் கிழித்து எறிந்தனர். பின்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) எம்எல்ஏக்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #KeralaAssembly #UDFWalkout
    இலங்கை பாராளுமன்றம் இன்று கூடியவுடன் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், அவர் வெளிநடப்பு செய்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தையும் முடக்கிய அவர், பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து நவம்பர் 14-ம்தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார்.  

    இதற்கிடையே, பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து அந்நாட்டின் பெரும்பான்மை பலமிக்க மூன்று பிரதான எதிர்க்கட்சிகள் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று கூறி அதிபரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. அப்போது ரணில் கட்சி எம்பிக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்திருந்தனர். அவை நடவடிக்கை தொடங்கியதும், அதிபரால் நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.

    அதேசமயம் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. #SriLankaParliament #RajapaksaWalkout
    ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
    சென்னை:

    சட்டசபை கூட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அதற்கு பதிலளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, “பல்வேறு விளக்கங்களை கூறி வரவுக்குள் தான் செலவுகள் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தையும்” தெரிவித்தார். ஆனால் பேச்சு வார்த்தைக்கு அழைப்பது பற்றி பேசவில்லை.

    இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
    சென்னை:

    தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோருவது தொடர்பாக சட்டசபையில் இன்று பேசுவதற்கு தி.மு.க. அனுமதி கேட்டது. ஆனால் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபை நிகழ்வுகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.



    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட சதி. அதிகாரிகளை ஆள்மாறாட்டம் செய்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு அமைத்துள்ள விசாரணைக் கமிஷன் என்பது கண்துடைப்பு வேலை. அந்த கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. விசாரணைக் கமிஷனால எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. எனவே, சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு அனுமதி கேட்டோம்.

    அவை தொடங்குவதற்கு முன்பே இது தொடர்பாக பேரவைத் தலைவரிடம் இதனை தெரிவித்தோம். ஆனால் முதல்வர் ஒப்புதல் அளிக்காததால் இதுபற்றி பேச வேண்டாம் என பேரவைத் தலைவர் கூறினார். துப்பாக்கி சூடு குறித்து பேரவையில் பேசக்கூடாது என்றால் நாங்கள் ஏன் அவைக்கு வரவேண்டும்? எனவே, வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothuKudiFiring #DMKWalkout
    தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #DMKCongressWalkout #NEETissue
    சென்னை:

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தமிழக மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சட்டசபையில் இன்று தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்விற்கு 2017ல் அனிதாவையும் இந்த ஆண்டு பிரதீபாவையும் இழந்திருப்பதாக கூறினார். மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு அரசு என்ன செய்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.

    நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.



    இதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விளக்கினார். தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

    அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் சபை நிகழ்வுகளை புறக்கணித்து வெளியேறினர்.  #TNAssembly #DMKCongressWalkout #NEETissue

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சனையை முன்வைத்து தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. இன்று வெளிநடப்பு செய்தது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். #ThoothukudiFiring #TNAssembly #DMKWalkout
    சென்னை:

    சட்டசபையில் இன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்ததுடன், முதலமைச்சர் பதவி விலகும்வரை இனி பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்கப் போவதில்லை எனக் கூறினார். பின்னர் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து நிருபர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-



    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை கண்துடைப்பு நாடகம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முடிவு செய்தால், அமைச்சரவையை உடனடியாக கூட்டி கொள்கை முடிவை எடுத்து தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும்.

    துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரிப்பதற்காக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் என்பது ஏமாற்று வேலை. துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கி சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #TNAssembly #DMKWalkout

    ×