search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister speach"

    தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #DMKCongressWalkout #NEETissue
    சென்னை:

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தமிழக மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சட்டசபையில் இன்று தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்விற்கு 2017ல் அனிதாவையும் இந்த ஆண்டு பிரதீபாவையும் இழந்திருப்பதாக கூறினார். மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு அரசு என்ன செய்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.

    நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.



    இதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விளக்கினார். தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

    அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் சபை நிகழ்வுகளை புறக்கணித்து வெளியேறினர்.  #TNAssembly #DMKCongressWalkout #NEETissue

    ×