search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் - இன்று மக்களவையில் கொண்டு வரும் எதிர்க்கட்சிகள்
    X

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் - இன்று மக்களவையில் கொண்டு வரும் எதிர்க்கட்சிகள்

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் மணிப்பூர் சம்பவம் எதிரொலித்தது.
    • மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதன்படி, மாநிலங்களவை எம்.பி.க்களான கேசவ ராவ், சுரேஷ் ரெட்டி, ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார், படுகுலா லிங்கையா யாதவ், ரஞ்சித் ரஞ்சன், மனோஜ் ஜா, சையது நசீர் உசைன், திருச்சி சிவா, இம்ரான் பிரதாப்காதி ஆகியோர் 267-வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளது என மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் கட்சி அலுவலகத்தில் தயாராக உள்ளது. காலை 10 மணிக்கு முன்னதாக மக்களவைச் செயலர் அலுவலகத்துக்கு வந்து சேரும் என தெரிவித்தார்.

    Next Story
    ×