என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » jeyavarthan
நீங்கள் தேடியது "jeyavarthan"
மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி ஜெயவர்தன், தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். #NoConfidenceMotion
புதுடெல்லி:
ஆந்திர மாநிலத்துக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு முறையாக நிறைவேற்றவில்லை என தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. விவாதம் முடிந்தவுடன் வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் மீதான இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்கபோவதில்லை எனவும், மத்திய அரசுடன் சுமூகபோக்கையே கடைபிடிக்கப்போவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க எம்.பி ஜெயவர்தன், தமிழகத்தின் குறைகளை எடுத்துரைத்தார். அதன்படி, தமிழகத்துக்கு 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பேரிடர் பாதிப்பு, வர்தா புயல் பாதிப்புகளுக்கு போதிய அளவிலான நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை எனவும் தமிழகத்துக்கு தேவையான நிதி குறைவாகவே அளிக்கப்படுவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவது மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என குறிப்பிட்ட அ.தி.மு.க எம்.பி ஜெயவர்தன், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பையும் பதிவு செய்தார். #NoConfidenceMotion
ஆந்திர மாநிலத்துக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு முறையாக நிறைவேற்றவில்லை என தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. விவாதம் முடிந்தவுடன் வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் மீதான இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்கபோவதில்லை எனவும், மத்திய அரசுடன் சுமூகபோக்கையே கடைபிடிக்கப்போவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க எம்.பி ஜெயவர்தன், தமிழகத்தின் குறைகளை எடுத்துரைத்தார். அதன்படி, தமிழகத்துக்கு 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பேரிடர் பாதிப்பு, வர்தா புயல் பாதிப்புகளுக்கு போதிய அளவிலான நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை எனவும் தமிழகத்துக்கு தேவையான நிதி குறைவாகவே அளிக்கப்படுவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவது மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என குறிப்பிட்ட அ.தி.மு.க எம்.பி ஜெயவர்தன், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பையும் பதிவு செய்தார். #NoConfidenceMotion
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X