search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் ராகுல் என்னை கட்டிபிடித்தது குழந்தைதனமான செயல் - பிரதமர் மோடி விமர்சனம்
    X

    பாராளுமன்றத்தில் ராகுல் என்னை கட்டிபிடித்தது குழந்தைதனமான செயல் - பிரதமர் மோடி விமர்சனம்

    பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி என்னை கட்டிபிடித்தது குழந்தைதனமான செயல் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். #RahulHugsModi #NoConfidenceMotion

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி பேச்சு முடிந்ததும் தங்களை கட்டி பிடித்தது பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்துள்ள பிரதமர், பாராளுமன்றத்தில் ராகுல்காந்தியின் செயல் பாட்டை நீங்கள் உற்று நோக்கினால் அவர் செய்தது அனைத்துமே குழந்தைதனமான செயல் என்பது உங்களுக்கே தெரியும்.

    அப்படியும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் அவர் என்ன கட்டிபிடித்து இருக்கைக்கு சென்று கண் சிமிட்டியதை நீங்கள் பாருங்கள். அதன்பிறகு முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.


    அசாம் தேசிய குடியுரிமை பட்டியல் தொடர்பாக மம்தாபானர்ஜி கடுமையாக விமர்சிக்கிறார். உள்நாட்டு கலவரம் ஏற்படும், ரத்த ஆறு ஓடும் என்று அவர் கூறுகிறார். அவருடைய பேச்சு நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது.

    அவர் இந்திய அரசின் அமைப்புகளை நம்பவில்லை என்பது தான் இது காட்டுகிறது. எந்த இந்திய குடிமகனும் இந்த பட்டியல் காரணமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது. அது நீண்டகால திட்டமாகும். எனவே யாருக்கும் பாதிப்பு வராது.

    சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல் அடிப்படையில் தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சிலர் அரசியல் ஆக்க பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×