search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Jayakumar"

    அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #ADMK #DMDK
    ஆலந்தூர்:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்குச் சென்று வந்தேன். ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு பெரிய சுமை என்ற நிலைமை மாறி 90 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.

    நிறுவனங்களை ஒருங்கிணைத்து கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி சிறு குறு தொழில்களை உற்சாகப்படுத்த ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது

    ரியல் எஸ்டேட் தொழில் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது.

    அதைப்போல பல்வேறு பொருட்களுக்கான வரி குறைப்பு செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மக்களுக்கு இலவசம் தருவதை யாரும் கொச்சைப்படுத்தக்கூடாது. அ.தி.மு.க. அரசு மக்கள் நல அரசு, சமூக நீதிக்கான அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை சுமார் 5 லட்சம் அரசு வேலைக்கான காலிப்பணியிடங்களை நிரப்பி இருக்கிறோம். அதேபோல் 3.5 லட்ச காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம்.

    எல்லோருக்கும் அரசு வேலை என்பது எந்த அரசாலும் கொடுக்க முடியாது. அதனால் பெண்கள், இளைஞர்கள் தொழில் முனைவோரை உற்சாகப்படுத்தும் விதத்தில் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீடு கட்டித்தருவது, பிற்படுத்தப்பட்டோர், மீனவர்கள், நெசவாளர்கள் போன்றவர்களுக்கு பல சலுகைகளை அரசு ஏற்படுத்தி தருகிறது. இது எல்லாம் தவறா? வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி தொகையாக 2,000 தருவது எந்தவிதத்திலும் தவறல்ல.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில் தான் தேர்தல் கூட்டணி. அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியை பார்த்து ஸ்டாலின் விரக்தியின் உச்சகட்டத்திற்கு போய்விட்டார். அதனால் தான் அரசியல் நாகரீகங்களுக்கு அப்பாற்பட்டு எங்களை கண்டபடி திட்டுகிறார்.

    டி.டி.வி. தினகரன் ஒரு தனி மரம். இனி அவருடைய அரசியல் இங்கே எடுபடாது. அவர் ஒரு வெற்று காகிதம். அதைப்போல கமல்ஹாசனுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இந்த மூன்று பேருக்கும் அ.தி.மு.க. மெகா கூட்டணியை பார்த்து காய்ச்சல் வந்துவிட்டது.

    கிராமசபை, ஊராட்சி சபை ஏன் ஐ.நா. சபை நடத்தினாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    தே.மு.தி.க.வில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவது அந்த கட்சியினுடைய தனிப்பட்ட செயல். அதனால் கூட்டணி பேச்சு வார்த்தை முற்றுப்பெற்றது என்று சொல்லி விட முடியாது.



    ஸ்டாலின் விஜயகாந்தை சந்திக்கும்போது அரசியலும் பேசினார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார். இதிலிருந்து உண்மை தெரிகிறது. ஸ்டாலினுக்கு தே.மு.தி.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு போய்விடக்கூடாது என்ற எண்ணம்.

    தேர்தல் கூட்டணிக்காக தி.மு.க. எல்லோரது கால்களிலும் விழுகிறது. இதுதான் அவர்களின் நிலைமை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை இன்னும் கூட்டணிக்கான கதவு திறந்திருக்கிறது, பேச்சு வார்த்தை நடக்கும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே திருவான்மியூரில் உள்ள பள்ளியில் இன்று, காலை உணவு திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, “அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை.

    மு.க.ஸ்டாலின் கோபத்தின் விரக்தியில் இருக்கிறார். இது தலைவனாக இருப்பதற்கு அழகல்ல.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரும் மனுவை கவர்னர் இதுவரை நிராகரிக்கவில்லை. 7 பேரையும் விடுதலை செய்வது பற்றி கவர்னர் முடிவு எடுக்க அரசு வலியுறுத்த முடியாது” என்றார். #MinisterJayakumar #ADMK #DMDK
    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதில் எந்த இழுபறியும் கிடையாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #ADMK #MinisterJayakumar #DMDK #BJP #Amitshah
    சென்னை:

    திருவான்மியூரில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதில் எந்த இழுபறியும் கிடையாது. எல்லாம் நல்லது நடக்கும். கூட்டணி முடியும் நேரம் முடியும்.

    தற்போது அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்து வருகிறது. இது வெற்றி கூட்டணியாக மாறும். கடந்த தேர்தலின்போது 37 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது ‘நாற்பதும் நமதே’ என்பதே எங்கள் கோ‌ஷம் ஆகும்.

    விஜயகாந்தை சந்தித்த பிறகு மு.க.ஸ்டாலின் கூறுகையில், இதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கூறி இருக்கிறார். அவர் பயத்தின் உச்சத்தில் உள்ளார். அதனால் தான் வாய் குழறுகிறது. ஸ்டாலினின் இன்றைய நிலை இதுதான்.

    எங்களை பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து விட்டோம். பலம் பொருந்திய சக்தி வாய்ந்த மெகா கூட்டணியாக உள்ளோம். இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவதற்கு ஆயத்தமாகி வருகிறது.

    அந்த கட்சிகள் அ.தி.மு.க. அணிக்கு போகக்கூடாது என மு.க.ஸ்டாலின் எல்லா முயற்சிகளையும் செய்கிறார். அது எடுபடப்போவதில்லை.



    எங்களது அணிக்கு தேசிய முற்போக்கு கூட்டணி என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறுவது பற்றி எனக்கு தெரியாது. அ.தி.மு.க. என்பது ஒரு மாபெரும் இயக்கம். ஆரம்பத்தில் இருந்து அ.தி.மு.க. தலைமையில் தான் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நான் பா.ஜனதா கட்சியை மட்டும் சொல்லவில்லை. இந்த கூட்டணிக்கு பெயர் கொடுப்பதை அ.தி.மு.க. கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterJayakumar #DMDK #BJP #Amitshah
    அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி அமைந்ததில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ADMK #BJP #Jayakumar #MKStalin
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.- பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். “டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வை விமர்சித்து புத்தகமே போட்டுள்ளார்.

    அதில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி எழுதி இருக்கிறார். ஆனால் இன்றைக்கு மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

    மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-



    அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி அமைந்ததில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல். அ.தி.மு.க.வில் மெகா கூட்டணி அமைந்து விட்டது என்ற ஆதங்கம் மு.க.ஸ்டாலின் பேச்சில் தெரிகிறது.

    அ.தி.மு.க. கூட்டணி பற்றி மு.க.ஸ்டாலின் சொல்வது மக்களிடம் எடுபடாது. அ.தி.மு.க. கூட்டணி இயற்கையாக அமைந்தது. இது மக்கள் நலக் கூட்டணி ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #BJP #Jayakumar #MKStalin
    பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது என்றும் 48 மணி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Jayakumar
    சென்னை:

    தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் டாக்டர் உ.வே.சா.வின் 165-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாநில கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது. 48 மணி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை வெளிப்படையாக எப்படி கூற முடியும். கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க. தெளிவாக உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் தாமதம் எதுவும் இல்லை.

    கூட்டணி வி‌ஷயத்தில் அ.தி.மு.க. விரைவு ரெயில் வேகத்தில் செல்கிறது. தி.மு.க. சரக்கு ரெயில் வேகத்தில் செல்கிறது.


    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அரசு ஏற்கனவே எடுத்த முடிவு சரியானது. அரசாணை வெளியிட்டது கொள்கை முடிவுதான். ஆலை எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் செயல்படாது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உளறி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #DMK
    தேர்தல் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து தான் வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #ADMK #MinisterJayakumar #BJP
    சென்னை:

    தென் சென்னை எம்.பி. ஜெயவர்தன் ஏற்பாட்டில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும். அ.தி.மு.க. கொள்கை என்பது தேர்தலில் மக்களை சந்தித்து அந்த தேர்தல் மூலம் மகத்தான வெற்றி பெற்று மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செய்வது தான். அதை எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இப்போது வரை செய்து வருகிறோம். இது எங்களது கொள்கை.

    எனவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை. ரஜினி அவரது கொள்கையை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

    கேள்வி:- பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எந்த அளவில் உள்ளது?

    பதில்:- இது தேர்தல் காலம். இந்த சமயத்தில் பேச்சுவார்த்தைகள், குழு, தேர்தல் அறிக்கை குழு கூட்டணி குறித்து பேசும் குழு, தேர்தல் அறிக்கை குழு என அமைக்கப்பட்டுள்ளது.

    எங்கள் கட்சியில் அவரவர் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே கூட்டணி என்று வரும் போது நிச்சயம் வெளியில் தெரியவரும். தலைவர்கள் சந்திப்பை வைத்து கூட்டணியை உறுதிப்படுத்த முடியாது.

    கட்சித் தலைமையால் வெளியிடப்படுகிற அறிவிப்பு தான் உறுதியான அறிவிப்பாக எடுத்து கொள்ள முடியும். அது நல்ல அறிவிப்பாக நிச்சயமாக இருக்கும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் தான் மெகா கூட்டணி நிச்சயம் அமையும்.

    எனவே தேர்தலில் அ.தி. மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் தான் போட்டியே தவிர வேறு எவரும் போட்டி கிடையாது.



    கே:- பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை 12 மணி வரை நடந்துள்ளதே?

    ப:- எங்கள் தரப்பில் பேசி இருக்கலாம். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து தான் வரும். அதுவரை பொறுத்திருங்கள்.

    கே:- தமிழகத்தில் பா. ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

    ப:- எங்களைப் பற்றி கேளுங்கள் பதில் சொல்கிறேன். இந்த கேள்விக்கு நீங்கள் பா.ஜனதாவினரிடம் தான் பதில் கேட்க வேண்டும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை மக்களை எதிர் கொண்டு மகத்தான வெற்றி பெறும்.

    கே:- தேர்தலில் எதை மையப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட போகிறீர்கள்?

    ப:- எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. மாநிலத்துக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் கிடைக்க வேண்டும். இதற்காக முழு அளவுக்கு எங்கள் குரல் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterJayakumar #BJP
    பாராளுமன்றத்தில் நேற்று தம்பிதுரை பேசியதில் தவறு இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் தெரிவித்துள்ளார். #TNAssembly #Jayakumar #Ponmudi
    சென்னை:

    சட்டசபையில் இன்று பொன்முடி (தி.மு.க.) பேசுகையில், ஜி.எஸ்.டி.யால் தமிழகத்துக்கு நன்மையா? கெடுதலா? என்று உங்களால் சொல்ல முடியுமா? பாராளுமன்றத்தில் நேற்று உங்கள் கட்சியில் பொறுப்பில் உள்ளவரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசும் போது, ஜி.எஸ்.டி.யால் தான் எல்லாமே முடங்கி விட்டது, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் சிறு-குறு தொழில் நிறைய மூடப்பட்டு விட்டதாக பேசி இருக்கிறார் என்றார்.

    பொன்முடி மேலும் பேசும்போது, மத்திய பட்ஜெட்டை பாராட்டி முதல்-அமைச்சர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதற்கு நேர்மாறாக தம்பிதுரை பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறாரே இது அவரது தனிப்பட்ட கருத்தா? கட்சி கருத்தா? என்று கேட்டார்.

    அமைச்சர் ஜெயக்குமார்:- மாநில அரசுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் பேசியிருக்றார். இதில் என்ன தவறு உள்ளது.



    பொன்முடி:- நேற்று செம்மலை இங்கு பேசும்போது, முதல்-அமைச்சர் சிக்சராக அடிக்கிறார். முதல் சிக்சர், 2-வது சிக்சர் என்று பேசினார். நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எத்தனை சிக்சர் அடித்தாலும் மு.க.ஸ்டாலின் போடும் பந்தில் ஆளும் கட்சி கண்டிப்பாக கிளீன்போல்டு ஆகி விடும்.

    அமைச்சர் ஜெயக்குமார்:- உறுதியாக சொல்கிறேன். அது “நோ-பால்” ஆகி விடும்.

    (சட்டசபையில் பலத்த சிரிப்பு எழுந்தது)

    அமைச்சர் தங்கமணி:- கிரவுண்டுக்குள் வந்து பந்து போட்டால்தான் போல்டு ஆகும். கிரவுண்டுக்குள்ளேயே வேலை இல்லாதபோது பந்துக்கு என்ன வேலை.

    இவ்வாறு அடுத்தடுத்து சிரிப்பலையுடன் விவாதம் நடந்தது. #TNAssembly #Jayakumar #Ponmudi
    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். எனவே, தி.மு.க. தோழமை கட்சிகளும் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இதில், பாராளுமன்ற தேர்தல் பணிகள், அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட ‘பூத் கமிட்டி’ விவரங்கள், ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில், “பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும், தேர்தல் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும், அயராது உழைக்க வேண்டும்” என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.

    மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் 6.15 மணியளவில் நிறைவடைந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பேட்டி தருமாறு நிருபர்கள் அழைத்தனர். அதற்கு அவர், அண்ணன்(ஓ.பன்னீர்செல்வம்) வந்து தருவார் என்று கூறிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியே வந்தார். அப்போது அவர் திங்கட்கிழமை உங்களை(பத்திரிகையாளர்கள்) அழைத்து பேசுகிறேன் என்று தெரிவித்தார்.

    பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரம் குறித்து கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான வருகிற 24-ந்தேதி ஏழை மக்கள் இருக்கும் இடத்துக்கு தேடிச்சென்று அறுசுவை உணவு, இலவச சீருடை, ஆதரவற்றோர்-முதியோர் இல்லங்களில் உணவு போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பாராளுமன்றத் தேர்தல் பணிகள், ஏற்கனவே முடுக்கிவிடப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் எண்ணமான ‘நாற்பதும் நமதே, நாடும் நமதே’ எனும் இலக்கை அடைய, அரசின் திட்டங்களை குக்கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் மக்களோடு இருந்து பணியாற்ற வேண்டும். பூத் கமிட்டிகள் அமைத்து, எதிர் வரும் தேர்தலில் அ.தி.மு.க. இமாலய வெற்றி பெறும் வகையில் பணிகள் அமையவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.



    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஏதாவது பேசப்பட்டதா?

    பதில்:- பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், கூட்டணி குறித்து முறையான அறிவிப்பை அ.தி.மு.க. வெளியிடும். இன்றைய கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை.

    தேர்தல் தேதி அறிவித்தவுடன் யாருடன், யார் கூட்டணி? என்பது தெரியும். எதிரியாக உள்ள தி.மு.க., முதுகில் குத்திய துரோகியான அ.ம.மு.க. தவிர, அ.தி.மு.க. தலைமையில் யார் வந்தாலும், தொகுதி பங்கீடு பேசி, முடிவுகள் வெளியாகும். இன்றைய நிலையில் கூட்டணி முடிவாகவில்லை. அ.தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணி மெகா கூட்டணியாகத்தான் இருக்கும்.

    கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணிக்கு இதுவரை எந்தெந்த கட்சிகள் முன்வந்திருக்கின்றன?

    பதில்:- பலர் எங்களுடன் கூட்டணி சேர தயாராக உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட அ.தி.மு.க.வுடன் வருவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர். அதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது. அது ரகசியம்.

    கேள்வி:- ‘அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி’, என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளாரே?

    பதில்:- அவருக்கு ஏன் பேதியா கிறது? என்று தெரியவில்லை.

    கேள்வி- தமிழக பட்ஜெட் ஒரு உதவாக்கரை பட்ஜெட் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

    பதில்:- பொதுவாகவே அறிவியலாளர்கள், அறிவுப்பூர்வமாக யோசிப்பவர்கள், அரசியல் ஞானம் உள்ளவர்கள் இந்த 3 தகுதியும் உடையவர்கள் நிச்சயமாக, ‘இந்த பட்ஜெட் நாட்டுக்கு உதவும் நல்ல பட்ஜெட்’, ‘ஏழை மக்களுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட்’ என்று பாராட்டுவார்கள். இந்த மூன்று தகுதிகளுமே மு.க.ஸ்டாலினுக்கு இல்லை.

    மேற்கண்டவாறு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். #MinisterJayakumar #ADMK
    ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்ட பின்னணியில் சில அரசியல் கட்சிகள் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். #ADMK #MinisterJayakumar #JactoGeo
    ராயபுரம்:

    ராயபுரத்தில் உள்ள புனித பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமூகநலத்துறை மூலம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு ஆயிரத்து 36 பயனாளிகளுக்கு தங்கம் அளித்தனர்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டாலின், தினகரன் ஆகியோர் இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் ஆசி எங்களுக்கு உள்ளது. இதனால் எந்த கொம்பன் நினைத்தாலும் இந்த ஆட்சியை அழிக்க முடியாது.

    எனவே, ஆட்சி கவிழும் என்பது கனவல்ல நினைவாகும் என்று ஸ்டாலின் கூறியது கனவாக மட்டுமே இருக்கும்.



    அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை பிடிப்போம். 2021-ல் சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.

    அ.தி.மு.க. அரசுக்குதான் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடம் ஏற்கனவே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி அரசின் சிரமங்கள் எடுத்து சொல்லப்பட்டுள்ளது, 100 சதவீதம் வருவாயில் 71 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என அனைத்தையும் கொடுக்கிறோம். மீதம் உள்ள 29 சதவீதத்தை நல திட்டங்களுக்கு செலவிட்டு வருகிறோம்.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்ட பின்னணியில் சில அரசியல் கட்சிகள் உள்ளன.

    போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் பிடிவாத போக்கை கடைபிடித்து வருகிறார்கள். எனவே வேறு வழி இல்லாமல் தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    மாணவர்கள் நலன் கருதி அவர்கள் பள்ளிக்கு திரும்ப வேண்டும். யாரையும் நிர்பந்தம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆசிரியர்களை அச்சுறுத்த நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. நிதி இல்லை என்பதை விளக்கமாக பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் சரோஜா கூறும்போது, “தமிழகத்தில் இதுவரை 10 லட்சத்து 53 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 லட்சம் பட்டதாரி பெண்கள் பயன் பெற்றுள்ளனர்” என்றார். #ADMK #MinisterJayakumar #JactoGeo
    தனியார் ஊழியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #MinisterJayakumar #JactoGeo
    சென்னை:

    மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் கடந்த 22.1.2019 முதல் காலவரையற்ற தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இச்சங்கங்கள் வலியுறுத்தி வரும் கோரிக்கைகள் யாவும் அரசால் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்த இயலாது என பலமுறை தெரிவித்தும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தவறான பிரச்சாரத்தின் அடிப்படையில் அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, போராட்டத்தை தொடங்கி, சில தீவிரமான வழிமுறைகளை அவர்கள் தற்போது கடைபிடிக்க தொடங்கியிருப்பது வேதனை அளிக்கிறது.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியே இல்லாமல் போவதுடன், அரசு வசூலிக்கும் வரியுடன் கடன் பெற்றுத்தான் சம்பளமும், ஓய்வூதியமும் தரவேண்டிய நிலை ஏற்படும்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறு இல்லை என்றும், அவ்வாறு செய்தால் அரசு பெறும் வரி வருவாயைவிட கூடுதலாக சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவு செய்ய வேண்டி வரும் என்றும், சில ஆண்டுகளுக்குப் பிறகு எந்த மக்கள் நலத்திட்டங்களும், வளர்ச்சிப்பணிகளும் செயல்படுத்த நிதி இருக்காது என்றும் குழு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், அரசு மக்களுக்காக இயங்க வேண்டுமே தவிர, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க மட்டுமே இயங்கக்கூடாது என்று கருதித்தான் இந்தக் கோரிக்கையை, அரசின் நிர்வாக நலனையும், பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு இதை ஏற்க இயலாது என அரசு கருதுகிறது.

    ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கியதால் அரசுக்கு ஆண்டுக்கு 14,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டாலும், அறிக்கை பெற்ற உடனே அரசு ஊதிய உயர்வை அமல்படுத்தியது. இதனால், அரசின் வருவாய் பற்றாக்குறை 2017-18ஆம் ஆண்டில் 21,594 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை 24,000 கோடி ரூபாயாக உயரும். இதை அரசு வெளிச்சந்தையில் கடன் பெற்றுத்தான் செலவு செய்கிறது.

    இந்நிலையில், ஊதிய நிலுவை வழங்க வேண்டும் என்றால் அதற்காக 20,000 கோடி ரூபாய் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. இதையும் அரசு கடன் பெற்றுத்தான் வழங்க முடியும். கூடுதல் கடன் சுமையை சமாளிக்க வேண்டுமென்றால் மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை திணிப்பது ஒன்றே வழியாகும். இதை அரசு தவிர்க்கவே கருதுகிறது.

    இதனால் அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும். எனவே, தற்போதைய அரசின் நிதிநிலையில் இவர்களின் இந்தக் கோரிக்கை ஏற்க இயலாது என்பதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

    மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆனால் மாநில அரசில் இவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். மேலும் இதே கல்வித் தகுதியில் பிற அரசுப் பணிகளிலும் அரசு ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு தர இயலாது. அனைவருக்கும் ஊதியத்தை உயர்த்தித் தந்தால் மேல்நிலையில் உள்ளவர்களுக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டிய நிலை வரும்.

    இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், அரசு ஊழியர்களுக்கிடையே உள்ள ஒப்பீட்டுச் சமநிலையை இது வெகுவாக பாதிக்கும்.

    எனினும், இதே கல்வித் தகுதியுள்ள பிற பணியாளர்களை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதலாக மாதம் 2,000 ரூபாய் சிறப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் தான், இந்தக் கோரிக்கையை செயல்படுத்த இயலாது என பலமுறை தெரிவித்தும், இப்போது போராட்டத்தில் அவர்கள் ஈடுபடுவது அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்ற உள்நோக்குடன்தான் இச்சங்கங்களும் அதன் பிரதிநிதிகளும் ஈடுபட்டுள்ளனர் என்பதைத் தான் காட்டுகிறது.

    இடைநிலை ஆசிரியர்கள் 2003ற்கு பிறகு பணியில் சேரும் போதே, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தான் பணிபுரிய வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

    இதுபோன்ற செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பிற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் அதிக சம்பளம் பெறுகின்றனர் என்பதை உணர வேண்டும்.

    இந்த சங்கடங்களையெல்லாம் நடுநிலையான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நன்கு அறிவார்கள். ஆனால் சிலர் சங்கம் நடத்த வேண்டும் என்பதற்காகவும், தங்கள் பிரச்சனைகளை அரசியல்படுத்துவதற்காகவும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தூண்டிவிட்டு, தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.

    மேலும், 5000 அரசுப் பள்ளிகளை மூடுவதாகவும், 3500 அரசுப் பள்ளிகளை இணைப்பதாகவும் தவறான கருத்துக்களை மக்களிடையே பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தியாகும்.



    இவர்களின் உள்நோக்கத்தை புரிந்துகொண்டு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விழிப்போடு இருப்பதுடன், அரசின் நோக்கம் மக்கள் நலம் காப்பதே என்ற உண்மையும், எண்ணற்ற படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வளர்ச்சிப் பணிகளை அரசு தான் செய்ய வேண்டும்.

    இதை உணர்ந்து, தற்போதைய நிதி நிலையில், அரசின் நிர்வாக முன்னுரிமையைக் கருத்தில்கொண்டு, இது போன்ற தேவையற்ற போராட்டத்தை தூண்டி விடும் சங்கங்கள் வீசும் சதி வலையில் விழாமல், அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி மக்கள் பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #MinisterJayakumar #JactoGeo 
    அதிமுகவின் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கிறது. யாரை சேர்த்து கொள்வது? யார் தேவையில்லை என்பதை கட்சி தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #ADMK
    சென்னை:

    சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வென்றதை போல் தற்போது எல்லா இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். யார்? யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய தருணத்தில் அறிவிப்போம். இப்போதைக்கு எங்களின் கூட்டணி கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாரை சேர்த்து கொள்வது? யார் தேவையில்லை என்பதை கட்சி தான் முடிவு செய்யும்.

    கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் மக்கள் நலனுக்கு உகந்தவர்களா? மக்கள் முன்னேற்றத்திற்காக, தமிழக உரிமைகளுக்காக அரசின் திட்டங்களுக்கு ஆதரவு தரக்கூடியவர்களா? என்பதை அறிந்து முடிவு எடுப்போம். தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.



    பா.ஜ.க. மட்டுமல்ல, எந்த அரசாக இருந்தாலும் எதிர்க்க வேண்டிய திட்டங்களை எதிர்ப்போம். மேகதாது விஷயத்தில் மு.க.ஸ்டாலின் எங்களை குற்றம் சாட்டுவது முறையற்றது. கர்நாடக அரசை கண்டித்து அ.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterJayakumar #ADMK

    பாஜக-அதிமுக கூட்டணி அமையும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பது, பாஜகவின் கருத்து அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். #LSPolls #Jayakumar #RamdasAthawale
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக அதற்கு எதிர்மாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு அதிமுக எம்பியும் மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை, செய்தியாளர்களை சந்தித்தபோது, பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என கூறினார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு நேற்று ஆஜரான தம்பிதுரை, பாஜகவை விமர்சித்தார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது என்றும் பாஜக தலைவர்கள் தமிழக அரசை விமர்சிக்கும்போது மவுனமாக இருக்க முடியாது என்றும் கூறினார்.



    இது ஒருபுறமிருக்க, பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறும்போது, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என்றார்.

    இந்த நிலையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி தொடர்பாக மத்திய மந்திரி அத்வாலே மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரின் கருத்துக்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து ஜெயக்குமார் கூறியதாவது:-

    அனைத்துக்கும் அதிமுக ஜால்ரா அடிக்காது, அன்னப்பறவை போல் பிரித்து பார்க்கும். எதிர்க்க வேண்டியதை எதிர்க்கும், ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கும்.

    மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல; பாஜக கூட்டணியில் உள்ளவர். எனவே, கூட்டணி தொடர்பாக, தனிப்பட்ட முறையில்தான் அத்வாலே கருத்து கூறியுள்ளார்; அது பாஜக தலைமையின் கருத்து அல்ல.

    பாஜவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே; அது அதிமுகவின் கருத்து அல்ல. தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.

    தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். தற்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Jayakumar #RamdasAthawale
    ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெறும் அரசு ஊழியர்களின் போராட்டத்தினை கை விட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். #MinisterJayakumar #JactoGeo
    சென்னை:

    மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம், கடலோர மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் சர்வதேச உவர்நீர் மீன் மாநாடு, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள மத்திய உவர்நீர் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், கடலோர மாநிலங்களைச் சேர்ந்த 750 விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



    மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார், தற்போது நடந்து வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டங்கள் குறித்து பேசியதாவது:-

    அரசின் நிதி நிலைமைகளைக் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஸ்ரீதர் மற்றும் சித்திக் தலைமையிலான குழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    மேலும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அரசு ஊழியர்களுக்கு ரூ.14000 கோடி தக்க நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் உரிய நேரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். எனவே அனைத்து ஆசிரியர்களும் , அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும். பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கையில் அதிமுக எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterJayakumar #JactoGeo
    ×