search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிகவை சேர்ப்பதில் இழுபறி இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
    X

    தேமுதிகவை சேர்ப்பதில் இழுபறி இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதில் எந்த இழுபறியும் கிடையாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #ADMK #MinisterJayakumar #DMDK #BJP #Amitshah
    சென்னை:

    திருவான்மியூரில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதில் எந்த இழுபறியும் கிடையாது. எல்லாம் நல்லது நடக்கும். கூட்டணி முடியும் நேரம் முடியும்.

    தற்போது அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்து வருகிறது. இது வெற்றி கூட்டணியாக மாறும். கடந்த தேர்தலின்போது 37 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது ‘நாற்பதும் நமதே’ என்பதே எங்கள் கோ‌ஷம் ஆகும்.

    விஜயகாந்தை சந்தித்த பிறகு மு.க.ஸ்டாலின் கூறுகையில், இதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கூறி இருக்கிறார். அவர் பயத்தின் உச்சத்தில் உள்ளார். அதனால் தான் வாய் குழறுகிறது. ஸ்டாலினின் இன்றைய நிலை இதுதான்.

    எங்களை பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து விட்டோம். பலம் பொருந்திய சக்தி வாய்ந்த மெகா கூட்டணியாக உள்ளோம். இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவதற்கு ஆயத்தமாகி வருகிறது.

    அந்த கட்சிகள் அ.தி.மு.க. அணிக்கு போகக்கூடாது என மு.க.ஸ்டாலின் எல்லா முயற்சிகளையும் செய்கிறார். அது எடுபடப்போவதில்லை.



    எங்களது அணிக்கு தேசிய முற்போக்கு கூட்டணி என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறுவது பற்றி எனக்கு தெரியாது. அ.தி.மு.க. என்பது ஒரு மாபெரும் இயக்கம். ஆரம்பத்தில் இருந்து அ.தி.மு.க. தலைமையில் தான் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நான் பா.ஜனதா கட்சியை மட்டும் சொல்லவில்லை. இந்த கூட்டணிக்கு பெயர் கொடுப்பதை அ.தி.மு.க. கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterJayakumar #DMDK #BJP #Amitshah
    Next Story
    ×