search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manmohan Singh"

    நான் சாதித்தேன், நான் சாதித்தேன் என்று தம்பட்டம் அடிக்காமல் இந்தியாவை முன்னேற்றியதுடன் ஒரு பிரதமராக மிகவும் தன்னடக்கத்துடன் ஆட்சி செய்தவர் மன்மோகன் சிங் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். #SoniaGandhi #ManmohanSingh #ManmohanSinghhumility
    புதுடெல்லி:

    மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் டெல்லியில் அவரது குடும்பத்தின் சார்பில் இந்திரா காந்தி பெயரில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளையின் சார்பில் கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இந்திரா காந்தி அமைதி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    அமைதிக்கான பணிகளுக்காக உழைக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், மனிதநேய நோக்கத்துடன் பொதுச் சேவையாற்றுபவர்கள் ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 

    அவ்வகையில், 2017-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி விருதுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வானார்.  இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அரும்பணியாற்றிதற்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 101-வது பிறந்தநாளான இன்று மாலை டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் அவருக்கு இந்த விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் இந்த விருதினை அவருக்கு வழங்கி சிறப்பித்தார். 

    இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பங்கேற்று மன்மோகன் சிங் நாட்டுக்கு ஆற்றிய அரிய சேவைகளை புகழ்ந்து பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, ‘மன்மோகன் சிங்கின் செயல்திறனை பார்க்கும்போது அவர் பிறக்கும்போதே மிகப்பெரிய அறிவாளியாக பிறந்தவர் என்பது தெரிகிறது’ என்று புகழாரம் சூட்டினார்.

    நாடு மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருந்த காலகட்டத்தில் மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றார். 

    பத்தாண்டு காலம் இந்த நாட்டின் பிரதமராக இருந்த அவரது ஆட்சியில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது என்றும் சோனியா குறிப்பிட்டார்.

    அவரது ஆட்சிக்காலத்தில் உலகளாவிய அளவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத் தந்தார். இதற்காக அவர், நான்தான் செய்தேன். நான்தான் செய்தேன் என்று எந்த தம்பட்டமும் அடித்து கொண்டதில்லை. மிகவும் எளிமையாகவும், தன்னடக்கத்துடனும் அவர் இருந்தார். 

    தனது சாதனைகள் எதற்கும் அவர் உரிமை கோரவில்லை. மாறாக, தனது செயல்களால் தன்னைப்பற்றி பிறர் பேசும் வகையில் இந்த நாட்டுக்காக அவர் உழைத்துள்ளார் எனவும் சோனியா காந்தி சுட்டிக் காட்டினார். #SoniaGandhi #ManmohanSingh #ManmohanSinghhumility
    ஜவகர்லால் நேருவின் 129வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #JawaharlalNehru #ChildrensDay #SoniaGandhi
    புதுடெல்லி:

    நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.



    டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில அலுவலகங்கள், கிளை கமிட்டி அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் நேருவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. #JawaharlalNehru #ChildrensDay #SoniaGandhi
    பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். #ManmohanSingh
    கள்ளநோட்டு மற்றும் கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை தடை செய்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.

    இந்த நடவடிக்கை அமல்படுத்தி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடக்கம் முதலே கண்டித்து வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இதையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

    மோடி தலைமையிலான மத்திய அரசு துரதிர்ஷ்டவசமான, தவறான நோக்கமுடைய பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அமல்படுத்தி இன்றுடன் (நேற்று) 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திய பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த பேரழிவின் தாக்கம் இன்றும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கை வயது, பாலினம், மதம், தொழில் மற்றும் இனம் என எந்தவித பாகுபாடுமின்றி ஒவ்வொரு தனிமனிதரையும் பாதித்தது. ஒவ்வொரு சோகத்துக்கும் காலமே சிறந்த மருந்து என அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. ஆனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பொறுத்தவரை, அது ஏற்படுத்திய காயங்களும், வடுக்களும் இன்னும் ஆறவில்லை.

    நாட்டின் பொருளாதாரத்தின் மூலைக்கல்லாக விளங்கும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. பொருளாதாரம் தொடர்ந்து தத்தளித்து வருவதால் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.

    எனவே மரபுகளை கடந்த, குறுகிய கால பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அது நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிச்சந்தையில் அதிக நிலைத்தன்மையற்ற நிலையை ஏற்படுத்தி விடும். எனவே நாட்டின் பொருளாதார கொள்கைகளையில் நிலைத்தன்மை மற்றும் தெளிவை மீட்டு எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    பொருளாதாரத்தில் ஏற்படும் துரதிர்ஷ்ட விளைவுகள் எப்படி நீண்டகாலத்துக்கு நாட்டை பாதிக்கும்? என்பதை நினைத்து பார்க்க வேண்டிய நாள் இது. அத்துடன் பொருளாதார கொள்கைகளை வகுப்பதில் சிந்தனையும், கவனமும் நிச்சயம் தேவை என்பதை உணர வேண்டிய தருணமும் இது.

    இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார். #Congress #RahulGandhi #RanilWickremesinghe
    புதுடெல்லி:

    இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து இருநாட்டு உறவுகளின் மேம்பாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.



    இதற்கிடையில், இன்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இலங்கை பிரதமரின் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Congress #RahulGandhi  #RanilWickremesinghe

    அடுத்த மாதம் 15-ந்தேதி கருணாநிதி சிலையை திறந்து வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். #DMK #Karunanidhi #SoniaGandhi #MKStalin
    சென்னை:

    முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ந்தேதி மரணம் அடைந்தார்.

    அவருக்கு தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முழு உருவ வெண்கல சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.

    8 அடி உயரமுள்ள கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை பொன்னேரியில் உள்ள சிற்பி தீனதயாளன் வடிவமைத்து வருகிறார்.

    சில நாட்களுக்கு முன்பு சிலை வடிவமைப்பு பணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அவர் கூறிய சில மாற்றங்களுடன் சிலை தயாராகி வருகிறது.



    கருணாநிதி மறைந்து வருகிற நவம்பர் 15-ந்தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. அன்று அவருடைய சிலை திறக்கப்படுகிறது.

    கருணாநிதி சிலையை திறந்து வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    இது குறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, கருணாநிதி சிலையை திறக்க சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். சோனியாகாந்தி கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் அவருக்கு பதிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர்களின் ஒருவரான தேஜஸ்வியாதவ் உள்ளிட்டோரை அழைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #Karunanidhi #SoniaGandhi #MKStalin
    வேறுபாடுகளை ஒதுக்கி மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் என மற்ற எதிர்க்கட்சிகளுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். #BharathBandh #ManmohanSingh
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் மன்மோகன் சிங் பேசுகையில்:-

    மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்துவரும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தற்போது எல்லை மீறி செயல்படுகிறது. இளைஞர்கள், விவசாயிகள், சாதாரண மக்கள் என அனைவரும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை.

    மாறாக மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது. பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்களின் குரலை உணர்ந்து நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை காக்க அனைத்து எதிர்கட்சிகளும் முன்வர வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஓரணியில் திரண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராக வேண்டும்.

    என கூறினார். 
    இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். #ManmohanSingh #PMmodi #NehruMemorial
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு வசித்து வந்த தீன் மூர்த்தி பவன் அவரது மறைவுக்கு பிறகு நேரு நினைவாக அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தீன் மூர்த்தி பவனில் அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடும் ஆட்சேபம் தெரிவித்து உள்ளார். நேரு நினைவிடத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மன்மோகன் சிங் கூறி இருப்பதாவது:-

    மறைந்த பிரதமர் நேருவின் பாரம்பரியம் மற்றும் வரலாறுகளுக்கு மதிப்பளித்து எந்தவித இடையூறும் செய்யாமல் அவரது நினைவு வளாகத்தை விட்டு விட வேண்டும். நேரு காங்கிரசை மட்டும் சார்ந்தவர் கிடையாது. ஒட்டு மொத்த இந்தியாவுக்கு சொந்தமானவர்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட நேரு அருங்காட்சியகத்துக்கோ, நூலகத்துக்கோ எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த அரசுக்கு அதில் மாற்றம் ஏற்படுத்துவது ஒரு கொள்கையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.



    இந்தியாவின் முன்னேற்றத்தில் மட்டும் நேரு பங்களிக்கவில்லை. உலக அளவிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தியவர். சுதந்திர போராட்டத்தின் போது 1920 முதல் 1940 வரை நேரு பலமுறை கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். அவரின் மேன்மையை போற்றும் வகையில் அருங்காட்சியகம் அங்கு தொடர்ந்து இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார். #ManmohanSingh #PMmodi #NehruMemorial
    முன்னாள் பிரதமரும், பாஜகவின் பிதாமகன் என்றழைக்கப்படும் வாஜ்பாயின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #RahulGandhi #ManmohanSingh
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 93 வயதான இவரது உடல்நிலை இன்று காலை மிகவும் மோசமடைந்ததாக வெளியிடப்பட்ட அறிக்கையை தொடர்ந்து மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார்.

    இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். வாஜ்பாயின் மறைவு தொடர்பான தனது இரங்கல் செய்தியில், இந்தியா தனது மிகச்சிறந்த மகனை இழந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



    அதேபோல், மிகச்சிறந்த சொற்பொழிவாளரும், ஈர்க்கத்தக்க கவிஞரும், தனித்துவமிக்க பொதுநல சேவகரும், முதன்மை பிரதமருமான வாஜ்பாயின் மறைவு ஆழ்ந்த துக்கம் அளிப்பதாக மன்மோகன் சிங் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #RahulGandhi #ManmohanSingh
    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற எனது வாக்குறுதியை மோடி நிறைவேற்றுவார் என எதிர்பார்த்தேன் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார். #Modi #ManmohanSingh #APSpecialStatus
    புதுடெல்லி:

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில அரசு பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டித்து சென்ற முறை பாராளுமன்றத்தை முடக்கிய தெலுங்கு தேச கட்சி, இந்த முறை மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.

    இதையடுத்து, சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பேசிய ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மோடி வாக்குறுதி அளிக்கவில்லை எனவும், அதற்கு பதிலாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ராஜ்ய சபாவில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அருண் ஜெட்லி உட்பட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தாம் வாக்குறுதி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தனக்கு பின்னால் பிரதமராக வருபவர்கள் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என தாம் எதிர்ப்பார்த்ததாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். #Modi #ManmohanSingh #APSpecialStatus
    பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா சார்பில் முன்னாள் பிரதமர்கள் இந்திரா, மன்மோகன்சிங் தற்போதைய பிரதமர் மோடி ஆகியோர் பற்றி சினிமா படம் தயாரிக்கப்படுகிறது. #theaccidentalprimeminister #BJP
    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவுபெற்று 5-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி தயாராகி வருகிறார்.

    மோடி பதவி ஏற்றதும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா தொடர் வெற்றிகளை குவித்தது. அதில் ஒருபடி மேலே போய் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளை சுருட்டிவாரி வீசியது. ஆனால் சமீபகாலமக பா.ஜனதாவுக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

    மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே கடும் போராட்டத்துக்கு பின்தான் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு உத்தரபிரதேசத்தில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தல்களிலும் தற்போது நடந்த இடைத்தேர்தல்களிலும் பா.ஜனதா தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

    கர்நாடகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி கடுமையாக பிரசாரம் செய்தும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ், ஜே.டி. எஸ். கட்சியுடன் சேர்ந்து பா.ஜனதாவை ஆட்சி அமைக்க விடாமல் செய்து விட்டது.

    இதனால் பாராளுமன்ற தேர்தலை நினைத்து பா.ஜனதா வட்டாரத்தில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் காங்கிரஸ் தரப்பில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்தால் வெற்றி பெறலாம் என்ற நினைப்பை சமீபத்திய தேர்தல்கள் உணர்த்தி இருக்கிறது.

    எனவே பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த கட்சிகள் முடிவு செய்துள்ளன. சினிமாக்கள் மூலமும் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.



    பா.ஜனதா சார்பில் முன்னாள் பிரதமர்கள் இந்திரா, மன்மோகன்சிங் தற்போதைய பிரதமர் மோடி ஆகியோர் பற்றி சினிமா படம் தயாரிக்கப்படுகிறது.

    ‘‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் சினிமாவில் இந்திரா காந்தி, நரேந்திர மோடி ஆகியோரை ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டு அவர்களது அரசியல் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இதில் இடையில் மன்மோகன்சிங் பற்றிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது.

    இந்திராவை துர்காவாக சித்தரிக்கும் அதே வேளையில் அவசரநிலை பிரகடனம் செய்து நீதித்துறையை செயல் இழக்க செய்துவிட்டதாக சுட்டிக் காட்டப்படுகிறது.

    பிரதமர் மோடியைப் பற்றி குறிப்பிடும் போது அவர் சாதாரண ஏழைகளுக்காக போராடியது. நாட்டின் மீதான அவரது பற்று மற்றும் ஆட்சிக்கு வந்தது போன்ற காட்சிகள் இடம்பெறுகிறது.

    இதில் நடிகரும் பா.ஜனதா எம்.பி.யுமான பரேஷ் ராவல் பிரதமர் மோடியாக நடிக்கிறார். குஜராத் கலவரம் இதில் இடம்பெறுமா என்று அவரிடம் கேட்டதற்கு எல்லா சம்பவங்களும் உண்டு என்றார்.

    பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும் நடிகருமான அனுபம் கேர், மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்கிறார். அனுபம் கேரின் மனைவி கிரன்கேர் பா.ஜனதா எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. #theaccidentalprimeminister #BJP
    ராகுல்காந்திக்கு அனுபவம் போதாது தேர்தலில் மோடியை எதிர்கொள்ள மன்மோகன்சிங் தான் பொருத்தமானவர் என்று பிரகாஷ் அம்பேத்கார் கூறியுள்ளார். #Parliamentelection #PMModi #ManmohanSingh

    மும்பை:

    அம்பேத்காரின் பேரனும், தலித் அமைப்பின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கார் மராட்டிய மாநிலம் பந்தர்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து மோடியை எதிர்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சரியான தலைவர் வேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது மோடியை எதிர்கொள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தான் பொருத்தமான தலைவராக இருக்கிறார்.

    மன்மோகன்சிங் ஏற்கனவே பிரதமராக இருந்து வெற்றிகரமாக ஆட்சியை நடத்தியவர். மோடியின் பொய் பிரசாரத்தை மன்மோகன்சிங் தான் எதிர்கொண்டு அவரை வீழ்த்த முடியும்.


    அதே நேரத்தில் ராகுல் காந்திக்கு இன்னும் அரசியல் அனுபவம் போதாது. அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது.

    பாரதிய ஜனதாவை பொருத்த வரை ஆட்சியை கைப்பற்ற எந்த நிலைபாடு வேண்டுமானாலும் எடுக்கலாம். இதற்கு மேலும் பாரதிய ஜனதா ஆட்சியில் நீடித்தால் அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

    அரசியலமைப்பு சட்டத்தையே தங்களுக்கு சாதகமாக மாற்றியமைக்க பாரதிய ஜனதா முயல்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.

    தலித் மக்கள் முன்னேற்றத்தை பாரதிய ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என பல கட்சிகளும் தடுத்து வருகின்றன. இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்களில் அவர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection #PMModi #ManmohanSingh

    காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சியின் தலைவர்களை பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். #ManmohanSingh #PMModi
    புதுடெல்லி:

    உன்னாவ் மற்றும் கத்துவா பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து நாட்டில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், பிரதமர் மோடி மவுனம் காத்ததை விமர்சித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “நீங்கள் எனக்கு அளித்த அறிவுரைகளை பின்பற்றி தற்போது வாய்திறந்து பேசுங்கள்” என மன்மோகன் குறிப்பிட்டிருந்தார்.

    கடந்த வாரம் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் பேசும் போது, காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்து மோடி பேசியிருந்தார். குறிப்பாக நாட்டின் முதல் பிரதமர் நேரு, பகத்சிங் உள்ளிட்டவர்களை சிறையில் சென்று சந்திக்கவில்லை என கூறினார். ஆனால், அது பொய்யான குற்றசாட்டு என பல வரலாற்று ஆசிரியர்கள் பதிலடி கொடுத்திருந்தனர்.


    இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்களை மிரட்டும் தொனியில் பேசுகிறார். இது பிரதமர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தகுதியானது அல்ல” என அதில் மன்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேற்கண்ட புகார் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமரிடம் கேட்டறிய வேண்டும் என மன்மோகன் சிங் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். #ManmohanSingh #PMModi
    ×