என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Manmohan Singh"
டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில அலுவலகங்கள், கிளை கமிட்டி அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் நேருவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. #JawaharlalNehru #ChildrensDay #SoniaGandhi
இதற்கிடையில், இன்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இலங்கை பிரதமரின் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Congress #RahulGandhi #RanilWickremesinghe
முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ந்தேதி மரணம் அடைந்தார்.
அவருக்கு தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முழு உருவ வெண்கல சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.
8 அடி உயரமுள்ள கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை பொன்னேரியில் உள்ள சிற்பி தீனதயாளன் வடிவமைத்து வருகிறார்.
கருணாநிதி மறைந்து வருகிற நவம்பர் 15-ந்தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. அன்று அவருடைய சிலை திறக்கப்படுகிறது.
கருணாநிதி சிலையை திறந்து வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, கருணாநிதி சிலையை திறக்க சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். சோனியாகாந்தி கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் அவருக்கு பதிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர்களின் ஒருவரான தேஜஸ்வியாதவ் உள்ளிட்டோரை அழைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #Karunanidhi #SoniaGandhi #MKStalin
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு வசித்து வந்த தீன் மூர்த்தி பவன் அவரது மறைவுக்கு பிறகு நேரு நினைவாக அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீன் மூர்த்தி பவனில் அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடும் ஆட்சேபம் தெரிவித்து உள்ளார். நேரு நினைவிடத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மன்மோகன் சிங் கூறி இருப்பதாவது:-
மறைந்த பிரதமர் நேருவின் பாரம்பரியம் மற்றும் வரலாறுகளுக்கு மதிப்பளித்து எந்தவித இடையூறும் செய்யாமல் அவரது நினைவு வளாகத்தை விட்டு விட வேண்டும். நேரு காங்கிரசை மட்டும் சார்ந்தவர் கிடையாது. ஒட்டு மொத்த இந்தியாவுக்கு சொந்தமானவர்.
இந்தியாவின் முன்னேற்றத்தில் மட்டும் நேரு பங்களிக்கவில்லை. உலக அளவிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தியவர். சுதந்திர போராட்டத்தின் போது 1920 முதல் 1940 வரை நேரு பலமுறை கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். அவரின் மேன்மையை போற்றும் வகையில் அருங்காட்சியகம் அங்கு தொடர்ந்து இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார். #ManmohanSingh #PMmodi #NehruMemorial
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 93 வயதான இவரது உடல்நிலை இன்று காலை மிகவும் மோசமடைந்ததாக வெளியிடப்பட்ட அறிக்கையை தொடர்ந்து மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார்.
இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். வாஜ்பாயின் மறைவு தொடர்பான தனது இரங்கல் செய்தியில், இந்தியா தனது மிகச்சிறந்த மகனை இழந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அதேபோல், மிகச்சிறந்த சொற்பொழிவாளரும், ஈர்க்கத்தக்க கவிஞரும், தனித்துவமிக்க பொதுநல சேவகரும், முதன்மை பிரதமருமான வாஜ்பாயின் மறைவு ஆழ்ந்த துக்கம் அளிப்பதாக மன்மோகன் சிங் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #RahulGandhi #ManmohanSingh
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில அரசு பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டித்து சென்ற முறை பாராளுமன்றத்தை முடக்கிய தெலுங்கு தேச கட்சி, இந்த முறை மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.
இதையடுத்து, சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பேசிய ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மோடி வாக்குறுதி அளிக்கவில்லை எனவும், அதற்கு பதிலாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ராஜ்ய சபாவில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அருண் ஜெட்லி உட்பட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தாம் வாக்குறுதி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கு பின்னால் பிரதமராக வருபவர்கள் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என தாம் எதிர்ப்பார்த்ததாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். #Modi #ManmohanSingh #APSpecialStatus
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவுபெற்று 5-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி தயாராகி வருகிறார்.
மோடி பதவி ஏற்றதும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா தொடர் வெற்றிகளை குவித்தது. அதில் ஒருபடி மேலே போய் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளை சுருட்டிவாரி வீசியது. ஆனால் சமீபகாலமக பா.ஜனதாவுக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே கடும் போராட்டத்துக்கு பின்தான் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு உத்தரபிரதேசத்தில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தல்களிலும் தற்போது நடந்த இடைத்தேர்தல்களிலும் பா.ஜனதா தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
கர்நாடகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி கடுமையாக பிரசாரம் செய்தும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ், ஜே.டி. எஸ். கட்சியுடன் சேர்ந்து பா.ஜனதாவை ஆட்சி அமைக்க விடாமல் செய்து விட்டது.
இதனால் பாராளுமன்ற தேர்தலை நினைத்து பா.ஜனதா வட்டாரத்தில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் காங்கிரஸ் தரப்பில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்தால் வெற்றி பெறலாம் என்ற நினைப்பை சமீபத்திய தேர்தல்கள் உணர்த்தி இருக்கிறது.
பா.ஜனதா சார்பில் முன்னாள் பிரதமர்கள் இந்திரா, மன்மோகன்சிங் தற்போதைய பிரதமர் மோடி ஆகியோர் பற்றி சினிமா படம் தயாரிக்கப்படுகிறது.
‘‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் சினிமாவில் இந்திரா காந்தி, நரேந்திர மோடி ஆகியோரை ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டு அவர்களது அரசியல் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இதில் இடையில் மன்மோகன்சிங் பற்றிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது.
இந்திராவை துர்காவாக சித்தரிக்கும் அதே வேளையில் அவசரநிலை பிரகடனம் செய்து நீதித்துறையை செயல் இழக்க செய்துவிட்டதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
பிரதமர் மோடியைப் பற்றி குறிப்பிடும் போது அவர் சாதாரண ஏழைகளுக்காக போராடியது. நாட்டின் மீதான அவரது பற்று மற்றும் ஆட்சிக்கு வந்தது போன்ற காட்சிகள் இடம்பெறுகிறது.
இதில் நடிகரும் பா.ஜனதா எம்.பி.யுமான பரேஷ் ராவல் பிரதமர் மோடியாக நடிக்கிறார். குஜராத் கலவரம் இதில் இடம்பெறுமா என்று அவரிடம் கேட்டதற்கு எல்லா சம்பவங்களும் உண்டு என்றார்.
பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும் நடிகருமான அனுபம் கேர், மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்கிறார். அனுபம் கேரின் மனைவி கிரன்கேர் பா.ஜனதா எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. #theaccidentalprimeminister #BJP
மும்பை:
அம்பேத்காரின் பேரனும், தலித் அமைப்பின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கார் மராட்டிய மாநிலம் பந்தர்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து மோடியை எதிர்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சரியான தலைவர் வேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது மோடியை எதிர்கொள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தான் பொருத்தமான தலைவராக இருக்கிறார்.
மன்மோகன்சிங் ஏற்கனவே பிரதமராக இருந்து வெற்றிகரமாக ஆட்சியை நடத்தியவர். மோடியின் பொய் பிரசாரத்தை மன்மோகன்சிங் தான் எதிர்கொண்டு அவரை வீழ்த்த முடியும்.
அதே நேரத்தில் ராகுல் காந்திக்கு இன்னும் அரசியல் அனுபவம் போதாது. அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது.
பாரதிய ஜனதாவை பொருத்த வரை ஆட்சியை கைப்பற்ற எந்த நிலைபாடு வேண்டுமானாலும் எடுக்கலாம். இதற்கு மேலும் பாரதிய ஜனதா ஆட்சியில் நீடித்தால் அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
அரசியலமைப்பு சட்டத்தையே தங்களுக்கு சாதகமாக மாற்றியமைக்க பாரதிய ஜனதா முயல்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.
தலித் மக்கள் முன்னேற்றத்தை பாரதிய ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என பல கட்சிகளும் தடுத்து வருகின்றன. இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection #PMModi #ManmohanSingh
உன்னாவ் மற்றும் கத்துவா பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து நாட்டில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், பிரதமர் மோடி மவுனம் காத்ததை விமர்சித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “நீங்கள் எனக்கு அளித்த அறிவுரைகளை பின்பற்றி தற்போது வாய்திறந்து பேசுங்கள்” என மன்மோகன் குறிப்பிட்டிருந்தார்.
மேற்கண்ட புகார் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமரிடம் கேட்டறிய வேண்டும் என மன்மோகன் சிங் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். #ManmohanSingh #PMModi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்