search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manmohan Singh"

    மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு விமான கட்டணமாக ரூ.443.4 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் இது முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் பயண செலவை விட குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. #AirIndia #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 -ம் ஆண்டு பதவி ஏற்றார். பிரதமராக பதவியேற்றதில் இருந்து வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அடிக்கடி அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது சர்ச்சையானது.

    பிரதமராக பதவி ஏற்ற ஒரு ஆண்டுக்குள் 2014-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் வரை மட்டும் 20 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக அரசு சார்பில் ரூ.37.22 கோடி செலவிடப்பட்டது. இதன் பிறகு ஆண்டுதோறும் இதை விட அதிகமான தொகை பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவழிக்கப்பட்டது.

    இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பா.ஜனதா கட்சியினர் நாட்டின் தொழில்வளத்தை உயர்த்த புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காக பிரதமர் பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார் என்று விளக்கம் அளித்தனர்.

    ஏர் இந்தியா விமான நிறுவனம் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான பில் தொகையை சமீபத்தில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. அதில் 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு நாடுகளுக்கு 44 பயணங்கள் சென்றுள்ளார்.

    ஒரே பயணத்தில் ஆறு நாடுகளுக்கு சென்றது, இரண்டு நாடுகளுக்கு மேல் சென்றது என பல்வேறு பயணங்கள் இதில் அடங்கும். இதற்காக 443.4 கோடி ரூபாய் கட்டணம் ஆகியுள்ளது என பிரதமர் அலுவலகத்துக்கு ஏர் இந்தியா விமானம் நிறுவனம் பில் அனுப்பியுள்ளது.

    இந்த 44 பயணங்களை தாண்டி சிங்கப்பூர், ஈரான் போன்ற மேலும் ஆறு வெளிநாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். அந்தப் பயணங்களை இந்தியன் ஏர் போர்சுக்குச் சொந்தமான போயிங் 737 பிசினஸ் ஜெட்டில் பயணம் செய்து இருக்கிறார்.


    முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டுப் பயணத்துக்காக ரூ.493 கோடி மத்திய அரசு செலவிடப்பட்டுள்ளது. அவர் 5 ஆண்டுகளில் 38 முறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.

    மன்மோகன் சிங்கைவிட நிறைய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த மோடி அவரைவிட ரூ.50 கோடி குறைவான செலவில் பயணம் செய்தது எப்படி என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஒரே பயணத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல நாடுகளுக்கு சென்றதால் ஏர் இந்தியாவுக்கான கட்டணம் குறைந்துள்ளது. பிரதமர் தனது வெளிநாட்டு பயணங்கள் பற்றிய பேட்டியிலேயே ஒரே டிக்கெட்டில் நிறைய நாடுகள் என்று இதை குறிப்பிட்டு இருக்கிறார். 44 பயணங்களில் 16 பயணங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு சென்று இருக்கிறார்.

    விரைவில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் செல்ல இருக்கிறார். இந்த ஆட்சி காலத்தில் அவரது கடைசி வெளிநாட்டு பயணமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. #AirIndia #PMModi
    பாராளுமன்ற தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன்சிங் போட்டியிடமாட்டார் என பஞ்சாப் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். #ManmohanSingh #AmarinderSingh
    அமிர்தசரஸ்:

    முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அசாமில் இருந்து பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.

    எனவே வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன்சிங் போட்டியிடுவார் என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் தெரிவித்து இருந்தார்.

    அதை பஞ்சாப் முதல்- மந்திரி அம்ரீந்தர் சிங் மறுத்துள்ளார். மன்மோகன் சிங் அமிர்தசரஸ் தொகுதியில் நிச்சயம் போட்டியிட மாட்டார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவே இதற்கு காரணம்.

    பஞ்சாபில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாபை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு எந்த கூட்டணியும் தேவையில்லை.



    எனவே ஆம் ஆத்மி கட்சியுடனோ, வேறு எந்த கட்சியுடனோ கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றார்.

    டெல்லியில் நேற்று மன்மோகன்சிங்கை அம்ரீந்தர்சிங் சந்தித்து பேசினார். அப்போது நடைபெற்ற ஆலோசனையின் முடிவில் அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன்சிங் போட்யிட மாட்டார் என்று அவர் அறிவித்தார். #ManmohanSingh #AmarinderSingh
    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட மன்மோகன் சிங் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன. #LSPolls #ManmohanSingh
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட வேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மன்மோகன் சிங் போட்டியிட்டால் சீக்கிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கூறினர். ஆனால், மன்மோகன் சிங், சாதகமான பதிலை கூறவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. போட்டியிட அவர் தயங்குவதாக கூறப்படுகிறது.

    மன்மோகன் சிங்கை அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட வைக்க முயற்சிப்பது இது முதல் முறையல்ல. 2009-ம் ஆண்டு தேர்தலின் போதும் இதே போன்று கோரிக்கை வைத்த போது, தனது உடல்நிலையை காரணம் காட்டி மன்மோகன் சிங் அதனை மறுத்து விட்டார்.



    1991-ம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் வரும் ஜூன் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. மக்களவைத் தேர்தல்களில் மன்மோகன் சிங் இதுவரை வெற்றி பெற்றது இல்லை. 1999 ம் ஆண்டு நடந்த தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அவர் பா.ஜனதாவின் மல்கோத்ராவிடம் தோல்வி அடைந்தார். தற்போது, அசாமில் காங்கிரசுக்கு போதிய பலம் இல்லாததால் மன்மோகன் சிங் மீண்டும் தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. #LSPolls #ManmohanSingh

    அணு ஆயுத விவகாரத்தில் உலக அளவில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். #ManmohanSingh
    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:-

    அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் பழைய ஒப்பந்தங்கள் காலாவதியாகிவிட்டதால், உலகளாவிய அளவில் தற்போது அணு ஆயுத விவகாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 70 ஆண்டுகளில் அணு ஆயுத அறிவியல் மற்றும் தொழில்நுட்பமானது மிகவும் மேம்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைப் பெறுவது என்பது எளிதாகி உள்ளது. இதனால் இடர்களும் சவால்களும் அதிகரித்துள்ளன.



    பல்வேறு நாடுகள் தங்களின் அணு ஆயுதங்களை நவீனமாக்கி வருகின்றன. அணு ஆயுத பரவல் தடைக்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு சைபர் பாதிப்புகள் அதிகரிப்பதால் நிச்சயமற்ற தன்மையும் அதிகரிக்கிறது.

    அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அணு ஆயுத தடை தொடர்பான விரிவான, நவீன அமைதித் திட்டங்களைக் கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா தான். பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், அணு  ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அணு ஆயுத விவகாரத்தில் சுமார் 25 ஆண்டுகள் வரை சுய கட்டுப்பாட்டுடன் இருந்தது. அதனால்தான் அணுசக்தி விநியோக நாடுகள் குழு, 2008ம் ஆண்டு இந்தியாவுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியது.

    இவ்வாறு அவர் பேசினார். #ManmohanSingh
    வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு தோற்று விட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாடி உள்ளார். #ManmohanSingh #EmploymentOpportunities
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலை, நாடு எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளின் கடுமையான நெருக்கடி, குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், சுற்றுச்சூழல் சீர்குலைவு எல்லாவற்றுக்கும் மேலாக பணித்தளங்களில் பிரிவினை சக்திகள் ஆகியவை இன்று நாடு எதிர்கொள்ளும் சவால்களாக அமைந்துள்ளன.

    விவசாயிகளின் தற்கொலைகளும், விவசாயிகள் அடிக்கடி நடத்தி வருகிற போராட்டங்களும் நமது பொருளாதார கட்டமைப்பு சமநிலையின்மையை பிரதிபலிக்கிறது. இதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். அரசியல் தலைமை (மத்திய அரசு) இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

    வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அது வேலை இழப்பு வீழ்ச்சிக்கு வழிநடத்தி உள்ளது. கிராமப்புறங்களில் கடன்கள் பெருகி வருவதும், நகர்ப்புறங்களில் நிலவுகிற குழப்பங்களும் சேர்ந்து எதிர்பார்ப்பு மிக்க இளைஞர்களை அமைதி இழந்து போகச்செய்கிறது.

    தொழில் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. தொழில்துறையும் வேகமான வளர்ச்சியை அடையவில்லை.

    நாட்டின் பொருளாதாரம் பெருகுவதில் சிறு தொழில் துறையும், அமைப்பு சாரா தொழில் துறையும் துடிப்பு மிக்கவை. ஆனால் பேரழிவை ஏற்படுத்தி உள்ள ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையாலும், சரக்கு மற்றும் சேவைவரி நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் வேலை வாய்ப்புகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    தொழில் துறையையும், வர்த்தக துறையையும் ஊக்குவிப்பதற்கு நல்ல ஆழ்ந்த சிந்தனையில் தோன்றும் கொள்கைகளும், நல்ல செயல்பாட்டு உத்திகளும் தேவை.

    இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிற உலகம். ஒரு பக்கம் உலகப்பொருளாதாரத்தில் நாம் நம்மை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறோம். உலக சந்தைக்கு நம்மை வெளிப்படுத்தி வருகிறோம். மற்றொரு பக்கத்தில், உள்நாட்டில் நாம் மிகப்பெரிய பொருளாதார, சமூக சவால் களை எதிர்கொண்டு வருகிறோம்.

    இது நமது ஜனநாயக உணர்வுகளுக்கும், நமது பொறுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் ஒரு சோதனையான கால கட்டம்.

    2030-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் 3-வது முக்கிய நாடாக இந்தியா வந்து விடும் என கூறப்படுகிற முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் (மாணவர்கள்) வர்த்தக உலகில் இணைகிறீர்கள்.

    இதுவரை இல்லாத வகையில் மிக வேகமாக மாற்றங்களை சந்தித்து வருகிற உலகில் உங்களுக்கு வாய்ப்புகளும், சவால் களும் நிரம்ப இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாராளுமன்ற கூட்டத்தின் இறுதி நாளான இன்று மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என முலாயம் சிங் தெரிவித்த கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் பெண் எம்.பி. பதில் அளித்துள்ளார். #SupriyaSule #MulayamSingh #MulayamSinghremark
    புதுடெல்லி:

    16-வது பாராளுமன்ற கூட்டத்தொடரின் நிறைவுநாளான இன்று மக்களவையில் பேசிய பல கட்சித்தலைவர்கள் உருக்கமாக உரையாற்றினர். 

    உத்தரபிரதேசம் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த நரேந்திர மோடியை பார்த்து, “நீங்கள் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும், எங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள்தான் என கூறினார்.  அப்போது முலாயம் அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் அமர்ந்திருந்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மாயாவதியுடன் கைகோர்த்து முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ் செயலாற்றி வரும் நிலையில், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளது தேசிய அரசியல் அரங்கில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இதுதொடர்பாக இன்று மாலை கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘முலாயம் சிங் யாதவ் எனது பெருமதிப்புக்குரிய தலைவர், தேசிய அளவில் அவருக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எனினும், அவரது எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

    இதேபோல் பல்வேறு தரப்பினரும் முலாயமின் கருத்தை விமர்சித்து வருகின்றனர். அவ்வகையில், பாராளுமன்ற வாசலில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. சுப்ரியா சுலே, ‘கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவுநாளன்று மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என மதிப்பிற்குரிய முலாயம் சிங் யாதவ் முன்னர் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி நடக்கவில்லையே..’ என குறிப்பிட்டுள்ளார்.

    #SupriyaSule #MulayamSingh #MulayamSinghremark #ModiPMagain #ManmohanSinghiPMagain
    மன்மோகன்சிங் ‘ஆக்சிடென்டலாக’ வந்தவர் அல்ல என்றும், ‘வெற்றிகரமான பிரதமர்’ என்றும் சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது.#ShivSena #ManmohanSingh
    மும்பை:

    தற்செயலாக பதவிக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் என்று பொருள்படும் ‘தி ஆக்சிடென்டல் பிரதம மந்திரி’ என்ற படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் பா.ஜனதா ஆதரவாளரான அனுபம்கெர் மன்மோகன்சிங் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

    ‘‘ஆக்சிடென்டல் பிரதமர்’ படத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஆனாலும் வருகிற 11-ந் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல. வெற்றிகரமான பிரதமர் என்று பா.ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது.

    இதுகுறித்து அந்த கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் பிரதமராக மன்மோகன்சிங் 10 ஆண்டுகள் பொறுப்பில் இருந்துள்ளார். அவரை மக்கள் மதிக்கின்றனர். எனவே அவர் தற்செயலாக திடீரென பொறுப்புக்கு வந்த பிரதமர் அல்ல என்று நான் கருதுகிறேன்.

    நரசிம்மராவுக்கு பின்னர் நாடு ஒரு வெற்றிகரமான பிரதமரை பெற்று இருக்கிறது என்றால் அவர் மன்மோகன்சிங் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நரசிம்மராவுக்கு பின்னர் மன்மோகன்சிங் தான் வெற்றிகரமான பிரதமர் என்று தெரிவித்ததன் மூலம் மோடியை சிவசேனா சீண்டி பார்த்துள்ளது. #ShivSena #ManmohanSingh

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது நடந்தவற்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. #TheAccidentalPrimeMinister #ManmohanSingh
    சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பிரபலமானவர்களின் வாழ்க்கையை படமாக்க போட்டிகள் நடக்கின்றன.

    மன்மோகன் சிங், கடந்த 2004-ம் ஆண்டு பிரதமரான சூழ்நிலை குறித்தும் அவரது ஆட்சிக் காலம் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

    இந்தப் புத்தகம் அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புத்தகம் வெளியான சமயத்தில் புத்தகத்தில் வந்தவை அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே என அப்போதைய பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், நிர்வாகத்தில் சோனியா காந்தியின் தலையீடு இருந்தது என அந்தப் புத்தகத்தில் சஞ்சயா பாரு பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார்.



    அறிமுக இயக்குநர் விஜய் தத் இயக்கி உள்ள இந்தப் படத்துக்கு ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதியிருக்கிறார். பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங், கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

    மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்திருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியாக சூசன் பெர்னெட்டும், ராகுல் காந்தியாக அர்ஜூன் மாத்தூரும், பிரியங்கா காந்தியாக அஹானாவும் நடித்திருக்கிறார்கள். மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு கதாபாத்திரத்தில் நடிகர் அக்‌‌ஷய் கண்ணா நடித்திருக்கிறார். இவர் பா.ஜனதா முன்னாள் எம்.பி வினோத் கண்ணாவின் மகன் ஆவார்.

    2 நிமிடம் 43 விநாடிகள் ஓடும் படத்தின் டிரெய்லர், படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ புத்தகத்தில் இடம்பெற்றவை என்ற குறிப்போடு தொடங்குகிறது.

    2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற பின்னர், மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டது, ரஷ்யாவுடனான அணுஆயுத ஒப்பந்தம், காஷ்மீர் விவகாரம் என அவரின் 10 ஆண்டுக்கால ஆட்சியின் பல்வேறு விவகாரங்கள் குறித்த காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இந்த மாதம் வெளியிடத் திட்டமிட்டிருந்த படம், தற்போது 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளிப்போயிருக்கிறது. #TheAccidentalPrimeMinister #ManmohanSingh

    தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் டிரைலர்:

    ஊடகங்களிடம் பேச அஞ்சிய பிரதமராக தான் இருந்ததில்லை என்றும், தன்னை வாய் திறக்காத பிரதமர் என்று நினைப்பவர்களுக்கு `​சேஞ்சிங் இந்தியா' புத்தகம் பதிலாக இருக்கும் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார். #ManmohanSingh #PMModi
    காங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை ‘மவுன மன்மோகன்சிங்’ என்று கிண்டல் அடித்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடியை, மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

    கடந்த ஏப்ரலில் மன்மோகன் சிங் அளித்த பேட்டியின் போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நான் பிரதமராக இருக்கும் போது பல்வேறு விஷயங்களில் முன்கூட்டியே கருத்து கூறாமல் இருந்ததற்காக என்னை மவுன மன்மோகன் சிங் என்று பாஜகவினர் அழைத்தார்கள். இதே பெயரோடு தான் நான் ஆட்சி முழுவதும் வாழ்ந்தேன் என்றார்.



    நான் பிரதமராக இருந்தபோது, பத்திரிகையாளர்களை சந்திக்க ஒருநாளும் அச்சப்பட்டதில்லை. நான் வாய் திறக்காத பிரதமர் என்று நினைப்பவர்களுக்கு `​சேஞ்சிங் இந்தியா' என்ற தமது புத்தகம் பதிலளிக்கும் என்று கூறிய அவர், வெளிநாட்டு பயணங்களுக்கு பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்றதாகவும், திரும்பியவுடன் ஊடகங்களை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம், உ.பி. உன்னாவ் நகரில் இளம்பெண்ணை பா.ஜனதா எம்எல்ஏ பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து பேசிய மன்மோகன் சிங், வாய்திறந்து பேசுங்கள் மோடி, எனக்கு நீங்கள் கூறிய அதே அறிவுரைகளைத்தான் நானும் உங்களுக்கு கூறுகிறேன் என்று காட்டமாக கூறினார். #ManmohanSingh #PMModi

    மன்மோகன் சிங்கை திமுக ஆதரோவடு தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களை எம்பி-யாக தேர்வு செய்வதற்கு சோனியா காந்தி முயற்சி செய்து வருகிறார். #DMK #SoniaGandhi
    சென்னை:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமராக 10 ஆண்டுகள் பதவியில் இருந்தவர் மன்மோகன் சிங். கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் அவர் பிரதமராக இருந்துள்ளார்.

    தற்போது மன்மோகன்சிங் மாநிலங்களவை எம்பி-யாக உள்ளார். அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் காங்கிரஸ் சார்பில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் 14-ந்தேதியுடன் முடிகிறது. அசாமில் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவி அந்த மாதமே காலியாகிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்எல்ஏ-க்களே உள்ளனர்.

    இதனால் மன்மோகன் சிங் மீண்டும் அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் இருந்து மன்மோகன் சிங்கை மாநிலங்களவை எம்பி-யாக தேர்வு செய்வதற்கு சோனியா காந்தி முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 97 எம்எல்ஏக்- கள் உள்ளனர். திமுகவு-க்கு 88 பேரும், காங்கிரசுக்கு 8 பேரும் உள்ளனர். முஸ்லிம் லீக் சார்பில் ஒரு எம்எல்ஏ உள்ளார்.



    தற்போதைய சூழலில் 20 தொகுதிகள் காலியாக இருப்பதாலும், அதிமுக-வில் தினகரனை பலர் ஆதரிக்கும் நிலை உள்ளதாலும் திமுக-வுக்கு 3 எம்பி-க்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. எனவே இதனை பயன்படுத்தி மன்மோகன் சிங்கை மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்தில் இருந்து தேர்வு செய்து விட வேண்டும் என்பதில் சோனியாகாந்தி தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோரிடம் சோனியா காந்தி பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அசாமில் இருந்தே மன்மோகன் சிங் எம்பி-யாக தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.
    பா.ஜ.க. அரசை நாம் மீண்டும் தொடர அனுமதித்தால் வரலாறு நம்மை மன்னிக்காது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #Congress #ManmohanSingh #MPAssemblyElection #Modi
    இந்தூர்:

    முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது இந்தூரில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    நமது நாட்டின் பாராளுமன்றம், சி.பி.ஐ. போன்றவை நம்பிக்கைக்குரிய அமைப்புகளாக உள்ளன. ஆனால் அவற்றை திட்டமிட்டு இழிவுபடுத்தும் செயல்கள் நடந்து வருகின்றன.

    ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. போன்றவற்றை மோடி அரசு பணிய வைக்க பார்க்கிறது. இது இந்திய ஜனநாயகத்தை சீர்குலைத்துவிடும். நாடு சட்டத்தின் மூலம் ஆளப்படுகிறது. அதையும் நாசமாக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


    இந்த செயல்களை செய்யும் பா.ஜ.க. அரசை நாம் மீண்டும் தொடர அனுமதித்தால் வரலாறு நம்மை மன்னிக்காது. ஒவ்வொரு வி‌ஷயத்திலும் திட்டமிட்டு ஜனநாயகத்தை பலவீனமாக்க பார்க்கிறார்கள்.

    பிரதமர் நரேந்திரமோடி எதிர்க்கட்சியினரை பயன்படுத்தக்கூடாத கடுமையான வார்த்தைகளை கூறி விமர்சிக்கிறார். இது தவறான போக்கு. ரிசர்வ் வங்கிக்கும், நிதித்துறைக்கும் இடையே மோதல்போக்கு நடந்து வருகிறது.

    இரு அமைப்புகளும் ஒன்றாக இணைந்து முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் செயல்பாடுகள் முடங்குகிறது. இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் நாட்டை முன்னேற்ற முடியும்.

    பணமதிப்பிழப்பு திட்டம், ஜி.எஸ்.டி. அமலாக்கம் போன்றவை மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அமைப்பு சாரா தொழில்களை நாசமாக்கி விட்டது. மக்களை கடுமையான பாதிப்புக்கு ஆளாக்கிய இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

    இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார். #Congress #ManmohanSingh #MPAssemblyElection #Modi
    நான் சாதித்தேன், நான் சாதித்தேன் என்று தம்பட்டம் அடிக்காமல் இந்தியாவை முன்னேற்றியதுடன் ஒரு பிரதமராக மிகவும் தன்னடக்கத்துடன் ஆட்சி செய்தவர் மன்மோகன் சிங் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். #SoniaGandhi #ManmohanSingh #ManmohanSinghhumility
    புதுடெல்லி:

    மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் டெல்லியில் அவரது குடும்பத்தின் சார்பில் இந்திரா காந்தி பெயரில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளையின் சார்பில் கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இந்திரா காந்தி அமைதி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    அமைதிக்கான பணிகளுக்காக உழைக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், மனிதநேய நோக்கத்துடன் பொதுச் சேவையாற்றுபவர்கள் ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 

    அவ்வகையில், 2017-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி விருதுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வானார்.  இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அரும்பணியாற்றிதற்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 101-வது பிறந்தநாளான இன்று மாலை டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் அவருக்கு இந்த விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் இந்த விருதினை அவருக்கு வழங்கி சிறப்பித்தார். 

    இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பங்கேற்று மன்மோகன் சிங் நாட்டுக்கு ஆற்றிய அரிய சேவைகளை புகழ்ந்து பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, ‘மன்மோகன் சிங்கின் செயல்திறனை பார்க்கும்போது அவர் பிறக்கும்போதே மிகப்பெரிய அறிவாளியாக பிறந்தவர் என்பது தெரிகிறது’ என்று புகழாரம் சூட்டினார்.

    நாடு மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருந்த காலகட்டத்தில் மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றார். 

    பத்தாண்டு காலம் இந்த நாட்டின் பிரதமராக இருந்த அவரது ஆட்சியில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது என்றும் சோனியா குறிப்பிட்டார்.

    அவரது ஆட்சிக்காலத்தில் உலகளாவிய அளவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத் தந்தார். இதற்காக அவர், நான்தான் செய்தேன். நான்தான் செய்தேன் என்று எந்த தம்பட்டமும் அடித்து கொண்டதில்லை. மிகவும் எளிமையாகவும், தன்னடக்கத்துடனும் அவர் இருந்தார். 

    தனது சாதனைகள் எதற்கும் அவர் உரிமை கோரவில்லை. மாறாக, தனது செயல்களால் தன்னைப்பற்றி பிறர் பேசும் வகையில் இந்த நாட்டுக்காக அவர் உழைத்துள்ளார் எனவும் சோனியா காந்தி சுட்டிக் காட்டினார். #SoniaGandhi #ManmohanSingh #ManmohanSinghhumility
    ×