search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mulayam singh"

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கும், அவரது மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவும் வெற்றி பெற்றுள்ளனர்.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கும், அவரது மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவும் வெற்றி பெற்றுள்ளனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்ட முலாயம் சிங் 5,24,926 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரேம் சிங் ஷாக்யா 4,30, 537 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் முலாயம் சிங் 94,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

    உபியின் அசம்கார் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், 6,21,578 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான தினேஷ் லால் யாதவ் நிராஹுவா 361704 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் அகிலேஷ் யாதவ் 2 லட்சத்து 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
    வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் மீது தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ பதில் அளிக்க என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SC
    புதுடெல்லி:

    சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ், பிரதீக் யாதவ் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கின் தன்மை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து காங்கிரஸ் நிர்வாகி விஸ்வநாத் சதுர்வேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இது தொடர்பாக சி.பி.ஐ. 2 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. #SC
    24 ஆண்டுகளுக்கு பிறகு மாயாவதி முலாயம்சிங்குக்காக ஓட்டு கேட்கும் நிலை உருவாகி உள்ளது. அவர் என்ன பேசப்போகிறார் என்பதை உத்தரபிரதேச மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். #LSPolls #Mayawati #MulayamSingh
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் நிரந்தர பகையாளிகளாக இருந்து வந்தன. இதற்கு முந்தைய பல சட்டசபை தேர்தல்களிலும் இந்த இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.

    கடந்த சட்டசபை தேர்தலிலும் அதேபோல தனியாக போட்டியிட்டதால் அது பாரதிய ஜனதாவுக்கு வாய்ப்பாக அமைந்தது. அங்கு பா.ஜ.க. பெரும் வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது.

    முன்னதாக நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றிருந்தது. அந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

    சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிக்குமே பொது எதிரியாக பாரதிய ஜனதா உள்ளது. எனவே பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இரு கட்சிகளும் அங்கு இப்போது கூட்டணி அமைத்துள்ளன.

    கடந்த காலத்தில் கூட ஒரு தடவை சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்த வரலாறு உண்டு. 1992-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டதை காரணம் காட்டி பாரதிய ஜனதா ஆட்சி கலைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஒரு வருடத்திற்கு பிறகு 1993-ம் ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் ராமர் கோவில் பிரச்சனையால் பாரதிய ஜனதா எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

    இந்த வெற்றியை தடுக்கும் வகையில் சமாஜ் வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்தன. அந்த நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சிராம் உயிரோடு இருந்தார். அவர் தான் இந்த கூட்டணியை உருவாக்கினார்.



    தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முலாயம் சிங் முதல்-மந்திரி ஆனார். ஆனால் 1995-ம் ஆண்டு அதாவது ஆட்சி அமைந்த 1½ ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி திடீரென முலாயம் சிங்குக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று விட்டது.

    அப்போது லக்னோவில் விடுதி ஒன்றில் மாயவதி தங்கி இருந்தார். அவரை சமாஜ்வாடி தொண்டர்கள் முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இது மாயாவதிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்திற்கு பிறகு ஒருபோதும் மாயாவதி, சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி சேரவே இல்லை. இரு கட்சிகளுமே நிரந்தர பகையாளி போல செயல்பட்டு வந்தன. அதே நேரத்தில் மாயாவதி பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்து 3 தடவை ஆட்சி அமைத்தார்.

    ஆனால் இப்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு சமாஜ்வாடி கட்சியுடன் மாயாவதி கூட்டணி அமைத்துள்ளார். இதுவரை சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங்கை கடுமையாக விமர்சித்து வந்த மாயாவதி இப்போது அவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்த தேர்தலில் முலாயம் சிங் யாதவ் மைன்புரி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரை ஆதரித்து மாயவதி வருகிற 19-ந்தேதி மைன்புரியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதில் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய லோக்தள தலைவர் அஜித்சிங் ஆகியோரும் பங்கேற்கின்றார்கள். 24 ஆண்டுகளுக்கு பிறகு மாயாவதி முலாயம்சிங்குக்காக ஓட்டு கேட்கும் நிலை உருவாகி உள்ளது. அவர் என்ன பேசப்போகிறார் என்பதை உத்தரபிரதேச மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.

    இத்தனைக்கும் இப்போது பகுஜன் சமாஜ் கட்சியுடன், சமாஜ்வாடி கூட்டணி அமைத்ததை முலாயம்சிங் விரும்பவில்லை. இரு கட்சிகளும் தொகுதிகளை பிரித்து கொண்டபோது, சமாஜ்வாடி கட்சியை விட பகுஜன் சமாஜ் கூடுதலாக ஒரு தொகுதியை பெற்றது. இது முலாயம்சிங்குக்கு அதிருப்தியை எற்படுத்தி இருந்தது. அதுபற்றி எதிரான கருத்துக்களையும் அவர் வெளியிட்டார்.

    இந்த நிலையில் தான் முலாயம்சிங்குக்காக மாயாவதி பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும், முலாயம்சிங்குக்கு கட்சி தொண்டர்கள் உரிய கவுரவம் அளித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சி போஸ்டர்களில் கன்சிராமுக்கு இணையாக முலாயம்சிங் படமும் இடம்பெற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மாயாவதியும் அகிலேஷ் யாதவும் 11 இடங்களில் ஒன்றாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர் . #LSPolls #Mayawati #MulayamSingh
    பாராளுமன்ற கூட்டத்தின் இறுதி நாளான இன்று மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என முலாயம் சிங் தெரிவித்த கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் பெண் எம்.பி. பதில் அளித்துள்ளார். #SupriyaSule #MulayamSingh #MulayamSinghremark
    புதுடெல்லி:

    16-வது பாராளுமன்ற கூட்டத்தொடரின் நிறைவுநாளான இன்று மக்களவையில் பேசிய பல கட்சித்தலைவர்கள் உருக்கமாக உரையாற்றினர். 

    உத்தரபிரதேசம் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த நரேந்திர மோடியை பார்த்து, “நீங்கள் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும், எங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள்தான் என கூறினார்.  அப்போது முலாயம் அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் அமர்ந்திருந்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மாயாவதியுடன் கைகோர்த்து முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ் செயலாற்றி வரும் நிலையில், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளது தேசிய அரசியல் அரங்கில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இதுதொடர்பாக இன்று மாலை கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘முலாயம் சிங் யாதவ் எனது பெருமதிப்புக்குரிய தலைவர், தேசிய அளவில் அவருக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எனினும், அவரது எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

    இதேபோல் பல்வேறு தரப்பினரும் முலாயமின் கருத்தை விமர்சித்து வருகின்றனர். அவ்வகையில், பாராளுமன்ற வாசலில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. சுப்ரியா சுலே, ‘கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவுநாளன்று மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என மதிப்பிற்குரிய முலாயம் சிங் யாதவ் முன்னர் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி நடக்கவில்லையே..’ என குறிப்பிட்டுள்ளார்.

    #SupriyaSule #MulayamSingh #MulayamSinghremark #ModiPMagain #ManmohanSinghiPMagain
    பிரதமர் பதவிக்கு தந்தை முலாயம் சிங் யாதவை நிறுத்துவாரா? அல்லது மாயாவதியை நிறுத்துவாரா? என்று அகிலேஷ் யாதவுக்கு உத்தரபிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பி உள்ளார். #AKileshYadav #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன.

    இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த கூட்டணிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ் “மாயாவதி பிரதமராக ஆதரவு அளிப்போம்” என்றார். உத்தரபிரதேசத்தில் இருந்து மீண்டும் ஒருவர் பிரதமராக ஆதரவு தருவோம் என்றார்.

    கோப்புப்படம்

    இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு தந்தை முலாயம் சிங் யாதவை நிறுத்துவாரா? அல்லது மாயாவதியை நிறுத்துவாரா? என்று அகிலேஷ் யாதவுக்கு உத்தரபிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் தனது தந்தை முலாயம் சிங் யாதவை பிரதமராக்க வேண்டும் என்று விரும்பினார். இந்த முறை பிரதமர் வேட்பாளர் யார். முலாயம்சிங் யாதவா? அல்லது மாயாவதியா? இதை அகிலேஷ் யாதவ் விளக்க வேண்டும்.

    இந்த முறை சமாஜ்வாடி கட்சி முலாயம்சிங் யாதவுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்குமா? என்பது தெளிவாக தெரியவில்லை.

    பகுஜன் சமாஜ்- சமாஜ் வாடி கூட்டணி ஊழல், சாதி கண்ணோட்டத்துடன் செயல்படும் அதிகார கூட்டணியாகும். இந்த கூட்டணியால் உத்தரபிரதேச மாநில அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது. இந்த இரு கட்சிகளும் ஓர் அணியில் இணைந்தது பா.ஜனதாவுக்கு சாதகமே.

    இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார். #AKileshYadav #YogiAdityanath
    ×