என் மலர்

    நீங்கள் தேடியது "birth anniversary"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பி டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாளான இன்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். #Ambedkarjayanti #DrBRAmbedkar
    புதுடெல்லி:

    இந்திய அரசியலமைப்பு சட்டம் என்னும் மகத்தான சாசனத்தை வடிவமைத்த மாபெரும் சிற்பியும், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க பாடுபட்ட சமத்துவ நாயகருமான சட்டமேதை ‘பாரதரத்னா’ பாபா சாகேப் டாக்டர் அம்பேதகரின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடனும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.

    டெல்லியில் உள்ள பாராளுமன்ற புல்வெளியில் அண்ணல் அம்பேத்கரின் சிலையின் முன்னே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்துக்கு ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



    இதேபோல், பல மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

    அவரது பிறந்தநாளையொட்டி ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நமது நாட்டின் தனிப்பெரும் அடையாளமாக திகழும் நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சாதிகளற்ற, பாகுபாடுகளற்ற நவீன இந்தியாவை உருவாக்கவும், பெண்கள் மற்றும் நலிந்த மக்களுக்கான சம உரிமைகள் நிலைநாட்டப்படவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர். அவரது பிறந்தநாளன்று எனது மரியாதையை செலுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார். #Ambedkarjayanti  #DrBRAmbedkar
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘பாரதியாரின் கவிதைகள் மனிதநேயத்தை ஊக்குவிக்கும்’ என்று, டெல்லியில் நடைபெற்ற விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். #VicePresident #VenkaiahNaidu #SubramaniaBharatiyar
    புதுடெல்லி:

    மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளையொட்டி டெல்லி ரமண மகரிஷி சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, டெல்லி தமிழ்ச்சங்கம் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய நிதி, சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாரதியாருக்கு மரியாதை செலுத்தி உரையாற்றினார்கள்.

    விழாவில் வெங்கையா நாயுடு பேசுகையில் கூறியதாவது:-

    பாரதத்தாயின் தவப்புதல்வரான சுப்பிரமணிய பாரதியார் மிகச்சிறந்த கவிஞர். தமிழ் இலக்கியத்தில் எழுச்சியை ஏற்படுத்தியவர். அவரது படைப்புகள் மிகவும் புதுமையானவை. அவர் சுவாமி விவேகானந்தரை போல் மிக குறுகிய காலமே வாழ்ந்தார். ஆனால் சொல்லாலும், செயலாலும் நித்திய புகழை அடைந்தார்.

    சாதி இல்லை என்று சமத்துவத்தை ஆதரித்து பாடிய பாரதியார், பெண்களின் உரிமைகளுக்காக போராடினார். தமிழ்க் கவிதையின் முன்னோடியாக அவர் இருந்தாலும் தெலுங்கு மொழியை ‘சுந்தர தெலுங்கு’ என்று கூறியதன் மூலம் தனது பெருந்தன்மையை காட்டி உள்ளார்.

    காந்தியைப் போலவே பாரதியாரும் சுதந்திர இந்தியாவை பற்றி எழுதினார். கலாசாரம், இலக்கியம், வர்த்தகம் மற்றும் பிற அம்சங்களில் இந்தியா உலகை வழிநடத்தும் நாள் பற்றி கனவு கண்டார். அவரது எழுத்துகள் இந்தியாவை சுதந்திரத்தின் பாதையில் தலைமுறை தலைமுறையாக வழிநடத்தும். அவரது கவிதைகள் தேசபக்தி, மனிதநேயம் மற்றும் அன்பை ஊக்குவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் டெல்லி தமிழ்ச்சங்க தலைவர் இந்துபாலா, பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் மற்றும் நிர்வாகிகள், டெல்லி வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர். #VicePresident #VenkaiahNaidu #SubramaniaBharatiyar
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர். #IndiraGandhi #SoniaGandhi #RahulGandhi
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



    இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது உருவச் சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.

    இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இதேபோல் இந்திரா காந்தியின் செயல்பாடுகளை பாராட்டியும், அவரது பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டும் பலர் அவரை நினைவு கூர்ந்துள்ளனர்.  #IndiraGandhi #SoniaGandhi #RahulGandhi
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 48 பேர் இலவச விமான பயணம் மேற்கொண்டனர். #JawaharlalNehru #ChildrensDay

    ஆலந்தூர்:

    மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னை விமான நிலையம் இன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் ஆகியவற்றுடன் இணைந்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கனவு பயணம் என்ற இலவச விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

    இதற்காக விமான நிலையம் அருகே உள்ள அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 48 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்திற்கு காலை அழைத்துவரப்பட்டனர்.

     


    சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் விமானத்தில் அவர்கள் சுமார் 45 நிமிடம் பயணம் செய்தனர். காலை 9.45 மணிக்கு புறப்பட்டு சென்ற அவர்கள் மீண்டும் 10.30 மணிக்கு சென்னை திரும்பினர்.

    இதில் மாணவர்கள் உற்சாகத்துடனும் ஆச்சரியத்துடனும் பயணம் செய்தனர். #JawaharlalNehru #ChildrensDay

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜவகர்லால் நேருவின் 129வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #JawaharlalNehru #ChildrensDay #SoniaGandhi
    புதுடெல்லி:

    நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.



    டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில அலுவலகங்கள், கிளை கமிட்டி அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் நேருவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. #JawaharlalNehru #ChildrensDay #SoniaGandhi
    ×