search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Children day"

    • விழாவில் சிறப்பு விருந்தினராக கள்ளாண்ட பெருமாள் கலந்து கொண்டார்
    • போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தருவைக்குளத்தில் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் குழந்தைகள் தின விழா பேச்சுப் போட்டி நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கள்ளாண்ட பெருமாள் கலந்து கொண்டார்.

    போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகள் தேவ திரவியம், செல்வ சேகர், ராஜேந்திரன், சூசை அந்தோணி, பழம் என்ற அமலதாசன், அற்புதராஜ், அருண், நூலகர் தங்க மாரியப்பன், கார்த்திக், பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் அசோகன், லாரன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 48 பேர் இலவச விமான பயணம் மேற்கொண்டனர். #JawaharlalNehru #ChildrensDay

    ஆலந்தூர்:

    மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னை விமான நிலையம் இன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் ஆகியவற்றுடன் இணைந்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கனவு பயணம் என்ற இலவச விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

    இதற்காக விமான நிலையம் அருகே உள்ள அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 48 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்திற்கு காலை அழைத்துவரப்பட்டனர்.

     


    சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் விமானத்தில் அவர்கள் சுமார் 45 நிமிடம் பயணம் செய்தனர். காலை 9.45 மணிக்கு புறப்பட்டு சென்ற அவர்கள் மீண்டும் 10.30 மணிக்கு சென்னை திரும்பினர்.

    இதில் மாணவர்கள் உற்சாகத்துடனும் ஆச்சரியத்துடனும் பயணம் செய்தனர். #JawaharlalNehru #ChildrensDay

    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ஓவிய போட்டி பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் நேற்று நடந்தது.
    பெரம்பலூர்:

    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ஓவிய போட்டி பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் நேற்று நடந்தது. போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு இயற்கை தொடர்பான ஓவியங்களை ஆர்வத்துடன் வரைந்தனர். இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மழலையர் முன்னேற்ற மன்றத்தின் தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார்.

    சமூக ஆர்வலர் முகம்மது இக்பால் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தனியார் பள்ளியின் தாளாளர் மங்கை விஜயா, கல்லூரி பேராசிரியை செல்வி ஆகியோர் கலந்து கொண்டு ஓவிய போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்வழங்கப்பட்டது.
    ×