search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drunk"

    • திருச்சேறையில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார்.
    • இஞ்சிகொல்லை குடமுருட்டி ஆறு சட்ரஸ் அருகே ஆற்றில் குடிபோதையில் தவறி கீழே விழுந்தார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் கீழ விடயல் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 60) விவசாயி.

    சம்பவத்தன்று இவர் திருச்சேறையில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார்.

    பின்னர் நடந்து வந்தபோது இஞ்சிகொல்லை குடமுருட்டி ஆறு சட்ரஸ் அருகே ஆற்றில் குடிபோதையில் தவறி கீழே விழுந்தார்.

    இதில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது குடிக்கும் பழக்கம் உடைய நாராயணன் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
    • நாராயணன் மீது ரிஷிவந்தி யம் போலீசாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மேலப்பழங்கூரை சேர்ந்த வர் நாராயணன். இவரது மனைவி அய்யம்மாள் (40). இருவரும் கரும்பு வெட்டும் தொழிலாளிகள். மது குடிக்கும் பழக்கம் உடைய நாராயணன் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் அய்ய ம்மாள் மற்றும் பிள்ளை களை ஆபாச வார்த்தை களால் திட்டியதோடு கூரை வீட்டுக்கும் தீ வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியோடு தீயை அணைத்தார். பின்னர் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நாராயணன் மீது ரிஷிவந்தி யம் போலீசாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ரமணி கடந்த 7-ந் தேதி சென்னையில் இருந்த மகனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
    • மனைவி என்றும் கூட பாராமல் இரும்பு ராடால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 43) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரமணி (43)/ இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுதாகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ரமணி கடந்த 7-ந் தேதி சென்னையில் இருந்த மகனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த சுதாகர், ரமணியிடம் தகராறில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் வாய்தகராறு அடிதடி சண்டையாக மாறியது. ரமணி மீது சந்தேக மோகத்தால் சுதாகர் மனைவி என்றும் கூட பாராமல் இரும்பு ராடால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ரமணி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து ரமணியை மீட்டு மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு ரமணிக்கு மோசமான நிலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரமணி மரக்காணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கணவர் சுதாகரை கைது செய்தனர். 

    • சின்ன மருதூர் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 52), கூலித் தொழிலாளி.
    • காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ராஜா வாய்க்காலிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சின்ன மருதூர் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 52), கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை ஆனங்கூர் பகுதியில் உள்ள ராஜா வாய்க்கால் அருகில் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாய்க்கால் பாலத்தின் அருகே சென்ற போது தவறி ராஜா வாய்க்கால் தண்ணீரில் முருகன் விழுந்துள்ளார்.

    காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ராஜா வாய்க்காலிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. முருகன், ராஜா வாய்க்கால் தண்ணீரில் விழுந்ததை பார்த்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஜா வாய்க்காலில் நெடுகிலும் பல்வேறு பகுதி களில் தேடிப்பார்த்தும் அவரது உடல் கிடைக்கவில்லை. 

    • வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
    • இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ெபண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.

    4 மாணவிகள்

    இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் தங்கி, வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பரபரப்பு தகவல்

    இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 4 மாணவிகளும் விஷம் குடித்தது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த 19-ம் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால், 4 மாணவிகளும் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் சொந்த ஊருக்கு செல்லாமல் மாணவிகள் கொட்டைப்புத்தூர் கிராமத்திலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    கடந்த 22-ந்தேதி வீட்டில் இருந்து விடுதிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனிடையே 4 மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் கடந்த 22-ந்தேதி விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு மாணவி இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் விசாரித்தபோது மாணவி, சக மாணவிகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரிவிக்காமல் ஏத்தாபூரில் உள்ள கோவிலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் விடுமுறை நாளில் நேராக வீட்டிற்கு வராமல் தங்களின் தோழி வீட்டிற்கு சென்றுள்ளதும் தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் நீண்ட நேரம் விடுதியில் காத்திருந்து விட்டு வீட்டிற்கு திரும்பினர்.

    விஷம் குடித்தனர்

    இந்த நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு விடுதிக்கு திரும்பிய மாணவிகள், விடுதிக்கு பெற்றோர் வந்து விட்டு சென்றதை கேள்விப்பட்டனர். பெற்றோர், தங்களை அடித்து விடுவார்கள் என பயந்து நேற்று முன்தினம் மாலை எலிபேஸ்ட் வாங்கிக்கொண்டு விடுதிக்கு வந்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது

    விடுதி ஊழியர்களிடம் விசாரணை

    மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் விடுதி சமையலர் சத்தியம்மாள் மற்றும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்கபாண்டியன் பணி மாறுதல் பெற்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் ஆயுதப்படை போலீசில் சேர்ந்தார்.
    • பணியில் இருந்தபோது தங்கபாண்டியன் மது போதையில் காரை ஓட்டிச் சென்று ஆயுதப்படை மைதானத்தின் மீது மோதினார்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 38). இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். நன்னடத்தை விதிகளை மீறியதாக இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பணி மாறுதல் பெற்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் ஆயுதப்படை போலீசில் சேர்ந்தார். பணியில் இருந்தபோது இவர் மது போதையில் காரை ஓட்டிச் சென்று ஆயுதப்படை மைதானத்தின் மீது மோதினார். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் தலைதெறிக்க ஓடினர்.

    பின்னர் போதையில் விழுந்து கிடந்த அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் மற்றும் டாக்டர்களிடம் தவறான முறையில் பேசி ரகளையில் ஈடுபட்டார்.

    இது குறித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்கபாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத் தகராறு காரணமாக கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் வாய்க்கால் பட்டறை அருகே உள்ள வால்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கலையரசி (வயது 34). இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலையரசி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடிபோதையில் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
    • சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வீரன்(46). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று காலை குடிபோதையில் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த வீரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனவேதனையில் இருந்து வந்தார். இதனால், நேற்று வீட்டிற்கு அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(65). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. மதுப்பழக்கத்தை கைவிடக்கோரி அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், கைவிட முடியாத மனவேதனையில் இருந்து வந்தார்.

    இதனால், நேற்று வீட்டிற்கு அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ராமச்சந்திரனை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் சைக்கிளை குடிபோதையில் வாலிபர் திருடி சென்றார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலைமானை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

      ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் முத்து தெருவை சேர்ந்தவர் பூசார்அலி (47). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். பின்னர் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்திருந்தார். இந்நிலையில் பூசார்அலி தனது நண்பர் அணீஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிள் தேடி பவானி ரோடு வழியாக, பி.பி.அக்ரகாரம் அடுத்த பேரஜ் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக பூசார் அலியின் மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் ஓட்டிக்கொண்டு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபரை மோட்டார் சைக்கி ளுடன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொ ண்டதில் அவர்பவானி சீனிவாசபுரத்தை சேர்ந்த சுலைமான் (20) என்பதும், குடிபோதையில் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலைமானை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே குடும்பத் தகராறில் விளையாட்டாக விஷம் குடித்த பெண் பாலியானார்.
    • பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் பிரனேஷ் (வயது 28) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி(25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. 3 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

    பள்ளிக்கு செல்லும் தங்களது மகன்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு ஜோதி தனது கணவர் பிரனேஷிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது கணவன்- மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.‌

    இந்த நிலையில் ஜோதி விளையாட்டாக கடந்த 15-ம் தேதி விஷம் குடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் திடீரென மயக்கமடைந்த அவரை கணவர் பிரனேஷ் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிக்கு திருமணமாகி 6 வருடங்களே ஆனதால் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி விசாரணை நடத்தி வருகிறார்.

    விளையாட்டாக விஷம் குடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டத்தில் மது போதையில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகேசன்(50). கூலிதொழிலாளி. இவரது மகன் ராம்குமார்(20) படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். ராம்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி முருகேசன் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் இருந்தார்.

    அப்போது குடிபோதையில் வந்த ராம்குமார் தந்தை முருகேசனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து ராம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×