search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poisoned"

    • ராஜா (வயது 50). இவர் கடந்த 25-ந் தேதி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • உறவினர்கள் உடனடியாக மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராஜா (வயது 50). இவர் கடந்த 25-ந் தேதி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராஜா இன்று அதிகாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சரவணன் (வயது 40). இவர் சென்னை ஆர். கே. நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார்.
    • நேற்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் சென்னை ஆர். கே. நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சரவணன் 3 நாட்கள் விடுமுறையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சரவணன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சரவிஷம் குடித்த போலீஸ் ஏட்டுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    • வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
    • இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ெபண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.

    4 மாணவிகள்

    இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் தங்கி, வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பரபரப்பு தகவல்

    இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 4 மாணவிகளும் விஷம் குடித்தது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த 19-ம் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால், 4 மாணவிகளும் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் சொந்த ஊருக்கு செல்லாமல் மாணவிகள் கொட்டைப்புத்தூர் கிராமத்திலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    கடந்த 22-ந்தேதி வீட்டில் இருந்து விடுதிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனிடையே 4 மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் கடந்த 22-ந்தேதி விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு மாணவி இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் விசாரித்தபோது மாணவி, சக மாணவிகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரிவிக்காமல் ஏத்தாபூரில் உள்ள கோவிலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் விடுமுறை நாளில் நேராக வீட்டிற்கு வராமல் தங்களின் தோழி வீட்டிற்கு சென்றுள்ளதும் தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் நீண்ட நேரம் விடுதியில் காத்திருந்து விட்டு வீட்டிற்கு திரும்பினர்.

    விஷம் குடித்தனர்

    இந்த நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு விடுதிக்கு திரும்பிய மாணவிகள், விடுதிக்கு பெற்றோர் வந்து விட்டு சென்றதை கேள்விப்பட்டனர். பெற்றோர், தங்களை அடித்து விடுவார்கள் என பயந்து நேற்று முன்தினம் மாலை எலிபேஸ்ட் வாங்கிக்கொண்டு விடுதிக்கு வந்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது

    விடுதி ஊழியர்களிடம் விசாரணை

    மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் விடுதி சமையலர் சத்தியம்மாள் மற்றும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத் தகராறு காரணமாக கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் வாய்க்கால் பட்டறை அருகே உள்ள வால்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கலையரசி (வயது 34). இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலையரசி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலூர் அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
    • குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் பாவாடை. அவரது மனைவி ராஜலட்சுமி. இந்த பாவாடைக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி கணவன் மனைவிக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவர் பாவாடை மது அருந்தி வீட்டுக்கு வந்த போது மீண்டும் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ராஜலட்சுமி வீட்டில் விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்தார்‌.

    இதனை பார்த்த அவர்களது உறவினர்கள் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செஞ்சி அருகே விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
    • புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே நல்லாண் பிள்ளை பெற்றால் கிராமத்மை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மகள் லட்சுமி (வயது 26) இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுக்குக்ஷ முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் ஊருக்கு வந்திருந்த லட்சுமி வயிற்று வலி அதிகமாக இருந்ததால் திருவண்ணாமலைக்கு சிகிச்சைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாமியார் வீட்டில் சென்று அங்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.இதைப் பார்த்த கணவர் அவரை உடனடியாக சிகிச்சைக்காக கீழ் பென்னாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • பவானிசாகர் அருகே கணவர் இறந்த சோகத்தில் விஷம் குடித்த இளம் பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த பகுத்தம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி வளர்மதி (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்த விபத்தில் தர்மராஜ் இறந்து விட்டார். கணவர் இறந்ததால் வளர்மதி சோகத்தில் இருந்து வந்தார். மேலும் கணவரை நினைத்து கொண்டு அவரின் படத்தை பார்த்து வளர்மதி அழுது கொண்டே இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சமாதானம் படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வளர்மதி வீட்டில் சானி பவுடர் (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை பார்த்து அவரது மகன் அழுது கொண்டு இருந்தார். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தனர்.

    அப்போது வளர்மதி மயங்கி கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முக்கூடல் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குளம்:

    முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது23). டிராக்டர் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் இசக்கிபாண்டி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் வயிற்றுவலி குணமாகவில்லை. 

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இசக்கி பாண்டி விஷத்தை குடித்து விட்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இசக்கிபாண்டி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாப்பாக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
    கடையம் அருகே தொழிலாளி உடலில் கட்டி ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடையம்:

    கடையம் அருகே உள்ள புலவனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது47). கூலி தொழிலாளி. உடலில் கட்டி ஏற்பட்டு அவதிப்பட்ட நேற்று திடீரென விஷத்தை குடித்து விட்டார். 

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். 

    இதுபற்றி கடையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தக்கலை அருகே காதல் பிரச்சினையில் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தக்கலை:

    தக்கலையை அடுத்த அப்பட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அஜித் (வயது 23). அஜித் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்து இவர்களின் காதலில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அஜித் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலைஅரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அஜித் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் தக்கலையை அடுத்த மூலச்சல், உம்மச்சாணி விளையை சேர்ந்தவர் நடராஜன் (60). நாகர்கோவிலில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து விலகிய நடராஜன் வேறு வேலைக்கு முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கடந்த 25-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை இறந்தார். இது பற்றியும் தக்கலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஏம்பலம் அருகே சாராயத்தில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    ஏம்பலம் அருகே மேல் சாத்தமங்கலம் தேனீபன் நகரை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 42). விவசாயி. இவர் ஏற்கனவே குடும்ப செலவுக்கு பணம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த கடனை திருப்பி கொடுக்காத எத்திராஜ் தனது மனைவி வள்ளிக்கு தெரியாமல் மேலும் சிலரிடம் பணம் கடன் வாங்கினார். 

    இதனை அறிந்த வள்ளி சம்பவத்தன்று கணவரை கண்டித்தார். இதனால் மனமுடைந்த எத்திராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று எலி மருந்தை வாங்கி கொண்டு அருகில் உள்ள சாராயக்கடைக்கு சென்றார். அங்கு சாராயத்தில் எலி மருந்தை கலந்து குடித்தார். 

    இதில் சாராயக்கடையிலேயே எத்திராஜ் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் எத்திராஜை மீட்டு கரிக்க லாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை எத்திராஜ் பரிதாபமாக இறந்து போனார். 

    இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தருமபுரியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் இண்டூரைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி கவுசல்யா (வயது 20). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கவுசல்யாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இதனால் மனவேதனை அடைந்த கவுசல்யா கடந்த 16-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  

    இந்நிலையில் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கவுசல்யா நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×