search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A young"

    • மீனாவுக்கும் அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து
    • அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

    ஈரோடு, 

    ஈரோடு பெரிய சேமூர் கள்ளன் காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (55). இவரது மகள் மீனா (23). பி. பி.எம். பட்டதாரி.

    மீனா வுக்கும், அதேப் பகுதியை சேர்ந்த முருகானந்தா என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.திருமணம் ஆனதிலிருந்து மீனாவுக்கும் அவரது கண வருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இரு வீட்டாரும் அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மீனா கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார்.

    இதையடுத்து சம்பவ த்தன்று குலதெய்வ கோவி லுக்கு செல்ல மீனாவை அவரது தந்தை அழைத்து உள்ளார். ஆனால் மீனா வர மறுத்து தந்தை மீது கோபித்துக் கொண்டதாக தெரிகிறது .

    இந்நிலையில் வீட்டில் இருந்த மீனா திடீரென மாயமாக உள்ளார். இத னால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். எனினும் மகள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து நாகராஜ் இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலை யத்திற்கு சென்று மாயமான தனது மகளை மீட்டுத் தருமாறு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான மீனாவை தேடி வரு கின்றனர். 

    • பவானிசாகர் அருகே கணவர் இறந்த சோகத்தில் விஷம் குடித்த இளம் பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த பகுத்தம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி வளர்மதி (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்த விபத்தில் தர்மராஜ் இறந்து விட்டார். கணவர் இறந்ததால் வளர்மதி சோகத்தில் இருந்து வந்தார். மேலும் கணவரை நினைத்து கொண்டு அவரின் படத்தை பார்த்து வளர்மதி அழுது கொண்டே இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சமாதானம் படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வளர்மதி வீட்டில் சானி பவுடர் (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை பார்த்து அவரது மகன் அழுது கொண்டு இருந்தார். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தனர்.

    அப்போது வளர்மதி மயங்கி கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×