search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயம்
    X

    இளம்பெண் மாயம்

    • மீனாவுக்கும் அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து
    • அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

    ஈரோடு,

    ஈரோடு பெரிய சேமூர் கள்ளன் காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (55). இவரது மகள் மீனா (23). பி. பி.எம். பட்டதாரி.

    மீனா வுக்கும், அதேப் பகுதியை சேர்ந்த முருகானந்தா என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.திருமணம் ஆனதிலிருந்து மீனாவுக்கும் அவரது கண வருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இரு வீட்டாரும் அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மீனா கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார்.

    இதையடுத்து சம்பவ த்தன்று குலதெய்வ கோவி லுக்கு செல்ல மீனாவை அவரது தந்தை அழைத்து உள்ளார். ஆனால் மீனா வர மறுத்து தந்தை மீது கோபித்துக் கொண்டதாக தெரிகிறது .

    இந்நிலையில் வீட்டில் இருந்த மீனா திடீரென மாயமாக உள்ளார். இத னால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். எனினும் மகள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து நாகராஜ் இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலை யத்திற்கு சென்று மாயமான தனது மகளை மீட்டுத் தருமாறு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான மீனாவை தேடி வரு கின்றனர்.

    Next Story
    ×