என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்மாபேட்டையில் குடும்ப தகராறுவிஷம் குடித்தவர் சாவு
- ராஜா (வயது 50). இவர் கடந்த 25-ந் தேதி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- உறவினர்கள் உடனடியாக மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராஜா (வயது 50). இவர் கடந்த 25-ந் தேதி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராஜா இன்று அதிகாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






