செஞ்சி அருகே - விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை

செஞ்சி அருகே விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
செஞ்சி அருகே - விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை
Published on

விழுப்புரம்:

செஞ்சி அருகே நல்லாண் பிள்ளை பெற்றால் கிராமத்மை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மகள் லட்சுமி (வயது 26) இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுக்குக்ஷ முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் ஊருக்கு வந்திருந்த லட்சுமி வயிற்று வலி அதிகமாக இருந்ததால் திருவண்ணாமலைக்கு சிகிச்சைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாமியார் வீட்டில் சென்று அங்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.இதைப் பார்த்த கணவர் அவரை உடனடியாக சிகிச்சைக்காக கீழ் பென்னாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com