search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே  குடும்பத்தகராறில்   விஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    கடலூர் அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை

    • கடலூர் அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
    • குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் பாவாடை. அவரது மனைவி ராஜலட்சுமி. இந்த பாவாடைக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி கணவன் மனைவிக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவர் பாவாடை மது அருந்தி வீட்டுக்கு வந்த போது மீண்டும் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ராஜலட்சுமி வீட்டில் விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்தார்‌.

    இதனை பார்த்த அவர்களது உறவினர்கள் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×