என் மலர்
நீங்கள் தேடியது "Fainted"
- இவருக்கு கடந்த3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
- ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார்.
புதுச்சேரி:-
புதுவை தேங்காய்திட்டு திலகர் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமரன்(வயது26). கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். முத்து குமரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் இவருக்கு அல்சர் நோயும் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முத்துகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது மனைவி ஐஸ்வர்யா உறவினர்கள் உதவியுடன் கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முத்துகுமரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி ஐஸ்வர்யா கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர் திடீரென சாலையில் விழுந்து மயங்கி கிடந்தார்.
- விநாயகர் சதுர்த்திக்கு கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி:
சேதராப்பட்டு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலையில் திடீரென ஆட்டோ ஒன்று தாறுமாறாக சாலையில் ஓடியது.
ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர் திடீரென சாலையில் விழுந்து மயங்கி கிடந்தார். விநாயகர் சதுர்த்திக்கு கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சாலையில் விழுந்து கிடந்த ஆட்டோ டிரைவரை சாலை ஓரமாக அமர வைத்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாக்டர் ஒருவர் அவரை பரிசோதனை செய்தார். ஆட்டோ டிரைவர் இறந்து விட்டது தெரிந்த நிலையில் உடனே அங்கிருந்தவர்கள் வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவரின் செல்போனை எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், லாஸ்பேட்டை செண்பக விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த விஜயன் (36) என்பது தெரியவந்தது.
பின்னர் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் கனக செட்டிக் குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கி விழுந்து இறந்த விஜயனுக்கு திருமணமாகி விட்டது. மாற்று திறனாளியான இவர் சேதராப்பட்டுக்கு சவாரி வந்து வீடு திரும்பும் போது திடீரென மயங்கி விழுந்தது தெரியவந்தது.
- குடும்பத் தகராறு காரணமாக கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் வாய்க்கால் பட்டறை அருகே உள்ள வால்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கலையரசி (வயது 34). இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலையரசி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.
- காதல் மனைவி கொடுத்த குளிர்பானத்தை குடித்த வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த புதுசூரங்குடியை சேர்ந்தவர் சிவா (வயது 23), ஆட்ேடா டிரைவர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.
அந்த பெண் திருமண வயதை அடையவில்லை என்பதால் சிவாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கடந்த 15-ந்தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
அவர் தினமும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அவர் கையெழுத்திட வந்தபோது அவர் காதலித்து திருமணம் செய்த பெண்ணும், மகா லட்சுமி என்பவரும் அவரிடம் பேச்சு கொடுத்து குடிக்க குளிர்பானம் கொடுத்தனர். அதனை வாங்கி குடித்ததும் சிவா மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றிய புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கள்ளக்குறிச்சி அருகே வண்டு கடித்து விவசாயி பலியானார்.
- கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 71) விவசாயி, இவர் நேற்று முன்தினம் தனது விவசாய நிலத்தில் உள்ள வாழைத்தாரை வெட்டினார். அப்போது அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட கரு விஷ வண்டுகள் அவரை கடித்த. இதில் வலியால் துடித்த துரைக்கண்ணு மயக்கமடைந்து அதே இடத்தில் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நெல்லை:
ரெட்டியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது59). இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமசுப்பு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 60 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தனர். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த வாலிபர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்த வாலிபரின் பெயர் சுந்தர் (வயது 43) என்பது தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வடக்கு மாசி வீதி மதுக்கடை முன்பு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்நதவர் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத் தூண் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரி சித்தா பிரிவு பார்வையாளர் அறை முன்பு 70 வயது முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்நதவர் என்பது தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நல்லதேவன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. கணவரை இழந்த இவர் அரசு விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் சுபிக்ஷா (வயது 14). இவர் திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சுபிக்ஷாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை கவனித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது சுபிக்ஷா திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் உடனே ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் மாணவியை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுபிக்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாலுகா போலீசார் மாணவியின் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.